செய்திகள் :

'ஓர் ஆண்டு வாழ்க்கை; 10 ஆண்டுக்கால வழக்கு; ரூ.1000 கோடி ஜீவனாம்சம்' - நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?

post image

மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஜெய்தேவ் ஷெராப்பிற்குக் கடந்த 2004ம் ஆண்டு பூனம் என்பவருடன் திருமணம் நடந்தது. இத்திருமணம் ஓர் ஆண்டு கூட நிலைக்கவில்லை.

2005ம் ஆண்டு இருவரும் பிரிந்து விட்டனர். 2015ம் ஆண்டு பூனம் தனது கணவரிடமிருந்து விவாகரத்து கேட்டும், பராமரிப்புத் தொகை கேட்டும் தனித்தனியாக இரண்டு மனுக்களை மும்பை குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

தனது கணவர் தனக்கு ரூ.1000 கோடி கொடுக்க கோர்ட் உத்தரவிட வேண்டும் என்று தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இம்மனுக்கள் இரண்டையும் சேர்த்து விசாரிக்க குடும்ப நீதிமன்றம் முடிவு செய்தது.

இதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் பூனம் மனுத்தாக்கல் செய்தார். ஆனால் அதனை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து பூனம் இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

பூனம்
பூனம்

அப்படி இருந்தும் பூனம் தனது விவாகரத்து தொடர்பாக பல முறை சுப்ரீம் கோர்ட்டை அணுகினார். இதையடுத்து 2021ம் ஆண்டு இவ்வழக்கை விரைவுபடுத்தும்படி சுப்ரீம் கோர்ட் மும்பை குடும்ப நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

தொழிலதிபர் ஜெய்தேவும் புதிதாக தனது மனைவியிடமிருந்து விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் தொழிலதிபருக்கு இவ்வழக்கில் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது.

பூனம் தரப்பில் ரூ.1000 கோடியும், ஜெய்தேவ் வீட்டை வாழ்நாள் முழுக்க பயன்படுத்தும் உரிமை வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. ஆனால் அந்தக் கோரிக்கையை நிராகரித்த கோர்ட், ரூ. 1000 கோடி கேட்ட பூனத்திற்கு ஒரே தவணையாக ரூ.10 கோடி கொடுக்க தொழிலதிபர் ஜெய்தேவிற்கு உத்தரவிட்டது.

அந்தத் தொகையை 3 மாதத்திற்குள் வழங்க வேண்டும் என்றும் கோர்ட் தெரிவித்துள்ளது. தனது மனைவி பெங்காலி பாபாவுடன் சேர்ந்து கொண்டு தன்னைக் கொலை செய்ய முயற்சி செய்ததாக போலீஸில் புகார் செய்துள்ளார்.

அதேசமயம் பூனம் தன்னை கணவன் வீட்டில் கொடுமைப்படுத்தியதாகக் குற்றம் சாட்டி இருக்கிறார். யுனைடெட் பாஸ்பரஸ் நிறுவனத்தின் தலைவரான ஜெய்தேவின் கம்பெனி சொத்து மதிப்பு மட்டும் ரூ.68 ஆயிரம் கோடியாகும். எனவேதான் ஆயிரம் கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்று பூனம் பகத் கோரிக்கை விடுத்திருந்தார்.

``நிதிச் சிக்கல்களைக் காட்டிலும் மன அமைதி முக்கியம்" - ரூ.2.7 கோடி சம்பள வேலையை உதறித்தள்ளிய இளைஞர்!

இன்றைய கார்ப்பரேட் உலகில் மிக உயர்ந்த சம்பளம், பதவி உயர்வு என இளைஞர்கள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், நியூயார்க்கைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர், தனது தனிப்பட்ட மகிழ்ச்சிக்காக ரூ. 2.7 கோடி (3,00,000... மேலும் பார்க்க

`இது கடவுள் கொடுத்த பொறுப்பு' - யாசகம் பெற்று குளிரிலிருந்து ஏழைகளை பாதுகாக்கும் யாசகர் ராஜு

வடமாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. காஷ்மீரில் பனிப்பொழிவு இருக்கிறது. இதனால் மக்கள் மாலை நேரத்திலேயே வீட்டிற்குள் சென்று முடங்கிவிடுகின்றனர். காலை 10 மணிக்கு பிறகுதான் வெளியில் வருகின்றனர். வ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: தங்கையைக் கடித்து இழுத்துச் சென்ற சிறுத்தைப்புலி; போராடிக் காப்பாற்றிய 11 வயது சிறுவன்!

மகாராஷ்டிரா மாநிலம் சாங்கிலி மாவட்டத்தில் உள்ள ஷிராலே அருகில் இருக்கும் உப்வாலே என்ற கிராமத்தில் வசித்து வருபவர் சங்கராம் பாட்டீல். இவருக்கு சிவம் (11) மற்றும் ஸ்வர்வாஞ்சலி (9) ஆகிய இரண்டு குழந்தைகள் ... மேலும் பார்க்க

மும்பை: வெற்றி பெற்ற ஒரேமாதத்தில் அடியோடு பாஜக-வில் சேர்ந்த 12 காங்கிரஸ் கவுன்சிலர்கள்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது படிப்படியாக உள்ளாட்சி தேர்தல் நடந்து வருகிறது. இதில் முதல் கட்டமாக நகராட்சிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மும்பை அருகில் உள்ள அம்பர்நாத் நகராட்சியில் பா.ஜ.க தனித... மேலும் பார்க்க