செய்திகள் :

சிக்கன் பிரியாணியுடன் படகில் சென்று கங்கை ஆற்றில் இப்தார் விருந்து! - போலீஸார் வழக்கு பதிவு

post image

கங்கை ஆற்றை இந்துக்கள் புனித நதியாக கருதுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் இந்துக்கள் இந்த கங்கை ஆற்றிற்கு வந்து புனித நீராடி செல்கின்றனர்.

இந்த கங்கை ஆற்றில் படகில் சிலர் இப்தார் பார்ட்டி நடத்துவதாக போலீஸாருக்கு புகார் வந்தது. பா.ஜ.க யுவ மோர்ச்சா தலைவர் ரஜத் ஜெய்ஸ்வால் இது தொடர்பாக போலீஸில் கொடுத்துள்ள புகாரில், ''சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்களுக்கு கங்கை மிகுந்த மத முக்கியத்துவமானதாகவும், நம்பிக்கையின் மைய அடையாளமாக மதிக்கப்படுகிறது.

ஒவ்வொரு நாளும், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ஆழ்ந்த நம்பிக்கையுடன் கங்கைக்கு வந்து புனித நீராடுகின்றனர். அதோடு சடங்குகள் செய்கின்றனர். அப்படிப்பட்ட கங்கை ஆற்றில் படகில் சென்று இப்தார் பார்ட்டி நடத்தி அதில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டு இருக்கின்றனர்.

அதோடு பிரியானி கழுவுகளை கங்கை ஆற்றில் வீசி எறிந்துள்ளனர். இது இந்துக்களின் மத உணர்வை புண்படுத்துவதாக இருக்கிறது''என்று குறிப்பிட்டு இருந்தனர்.

அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து படகில் சென்று கங்கை ஆற்றில் இப்தார் விருந்து நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். இப்தார் விருந்தின் போது எடுக்கப்பட்ட காணொலியை அவர்கள் சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். அந்த காணொலியின் அடிப்படையில் இப்தார் விருந்தில் கலந்து கொண்டவர்களை அடையாளம் கண்டுபிடித்து கைது செய்து இருப்பதாக வாரணாசி உதவி போலீஸ் கமிஷனர் விஜய் பிரதாப் சிங் தெரிவித்துள்ளார்.

ஆரம்பக்கட்ட விசாரணையில் அவர்கள் ரீல்ஸ் எடுப்பதற்காக இது போன்று படகில் சென்று விருந்து நடத்தியுள்ளனர் என்றும், உண்மையான நோக்கம் என்னவென்று கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரித்து வருவதாக அவர் தெரிவித்தார். 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். படகில் சென்றவர்கள் முதலில் நமாஸ் செய்தனர். அதன் பிறகு அவர்கள் சிக்கன் பிரியாணியை சாப்பிட்ட காணொலி சமூக வலைத்தள வெளியானது குறிப்பிடத்தக்கது.

ரீல்ஸ் விபரீதம் : சொந்த தந்தையை சாக்குமூட்டையில் கட்டி கூரியரில் அனுப்ப முயன்ற பெண் - அதிர்ச்சி!

தமிழ் சினிமாவில் ஒருவர் தனது குடும்ப உறுப்பினர்களை சாக்குமூட்டையில் கட்டி கூரியரில் அனுப்ப முயன்றதை பார்த்திருப்போம். அது ஒரு காமெடி காட்சி. ஆனால் நிஜத்தில் ஒரு பெண் தனது தந்தையை அதேபோன்று கூரியரியில்... மேலும் பார்க்க

டெல்லி: துப்பாக்கியை வைத்து ரீல்ஸ்; நெஞ்சில் பாய்ந்த தோட்டா; மரணத்தில் முடிந்த வ்யூஸ் மோகம்

டெல்லியில் உள்ள தல்லுபுரா என்ற இடத்தில் வசித்து வந்தவர் பவன். இவர் தனது நண்பரிடம் இருந்த துப்பாக்கியைப் பயன்படுத்தி ரீல்ஸ் எடுக்க முடிவு செய்தார். இதற்காக பவன் துப்பாக்கியை கையில் எடுத்து அதற்கு தோட்ட... மேலும் பார்க்க

டைனோசர்களுக்கே சவால் விட்ட 'கடல் ராஜா'- உலகத்தையே அதிரவைத்த 11 வயது சிறுமியின் கண்டுபிடிப்பு!

சுமார் 20 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, நிலத்தில் டைனோசர்கள் ராஜாவாக வலம் வந்தபோது, கடலில் அதைவிடப் பெரிய 'கடல் அசுரன்கள்' வாழ்ந்து வந்தன. காலப்போக்கில் மறைந்துபோன அந்த ராட்சத உயிரினத்தைப் பற்றிய ஒரு ரகசி... மேலும் பார்க்க

`ஐபோன் இல்லை, பிளே-ஸ்டேஷன் இல்லை - தந்தை மகனுக்குக் கொடுத்தது அதை விட பெரிய பொக்கிஷம்! Viral video

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், ஒரு கிளிக்கிலேயே உலகமே நம் கைகளுக்குள் வந்துவிடுகிறது. ஆனால், 90-களில் வளர்ந்த குழந்தைகளுக்கு அந்த ஒரு ரூபாய் காமிக்ஸ் புத்தகமும், அதில் வரும் சித்திரங்களும்தான் உலகமாக இரு... மேலும் பார்க்க

குஜராத்: '14 வருட உறவு...' - வளர்ப்பு நாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க கைதிக்கு ஜாமின்; பின்னணி என்ன?

குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த சுக்ராம் என்பவர் தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வந்தார். அந்த நாய் அவருடன் கடந்த 14 ஆண்டுகளாக இருந்தது. அதன் மீது அதிக அன்பு வைத்திருந்தார். ஆனால் சமீபத்தில் அவருக... மேலும் பார்க்க