செய்திகள் :

கறிக்கோழி: `40,000 விவசாயிகள், 5 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதார விவகாரம்'- வெளிநடப்பு செய்த எடப்பாடி

post image

தமிழ்நாட்டில் கறிக்கோழி பண்ணைகளில் கோழிகளை வளர்க்கும் விவசாயிகளுக்கு கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் கோழிக்கறி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்கள் விவசாயிகளுக்குக் கிலோ ஒன்றுக்கு 6 ரூபாய் 50 காசுகள் வளர்ப்பு கூலியாக வழங்கி வருகின்றன. உற்பத்திச் செலவு அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, கிலோ ஒன்றிற்கு 20 ரூபாய் வளர்ப்பு கூலியாக வழங்கவேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இதனை வலியுறுத்தி அவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், சென்னையில் உள்ள கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் இயக்குநர் அலுவலகத்தில் ஜனவரி 21-ம் தேதி (நேற்று) முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் தீர்வு எட்டப்படவில்லை. அதைத் தொடர்ந்து போராட்டம் நடத்திய விவசாயிகளை காவல்துறை கைது செய்தது.

இந்த விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் கேள்வி எழுப்ப அதிமுக தரப்பில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு அனுமதி தரவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.

அதைத் தொடர்ந்து, சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்த எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``இன்றைய தினம் சட்டமன்றத்தின் ஜீரோ அவரில் விவசாயிகளின் பிரச்னை குறித்து விவாதிக்க அவைத் தலைவரிடம் அனுமதி கேட்டோம். எங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. தமிழ்நாட்டின் கோவை, திருப்பூர், நாமக்கல், ஈரோடு, விழுப்புரம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில கறிக்கோழி வளர்ப்பு பண்ணை இருக்கிறது.

கறிக்கோழி பண்ணை
கறிக்கோழி பண்ணை

இதில் சுமார் 40,000 விவசாயிகள் இந்தப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்தத் தொழிலில் சுமார் 5 லட்சம் பேர் பணியாற்றி வருகிறார்கள். இது ஒரு முக்கிய தொழிலாக கருதப்படுகின்றது. கறிக்கோழி விற்கும் நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் கோழி வளர்ப்பு தொழில் செய்து வருகிறார்கள். ஒரு கிலோவுக்கு ரூ.6.50 வளர்ப்புக் கூலியாக வழங்கப்படுகிறது. அ.தி.மு.க ஆட்சியில் இதற்கான ஒப்பந்தம் போடப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது.

கோழிக் குஞ்சு வழங்கும் நிறுவனமே தீனி வழங்கினாலும், கோழி பண்ணை செட், தேங்காய் நார், மின்கட்டணம், தண்ணீர் எனப் பலமடங்கு அதன் விலைகள் உயர்ந்துட்டது. இந்த விலை உயர்வால், கறிக்கோழி வளர்ப்பு பண்ணை உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே, கறிக்கோழி வளர்ப்பு ஊதியத்தை உயர்த்தி கொடுக்க வேண்டும் என, கடந்த ஆறு மாத காலமாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

ஆனால் அரசு அதைக் கண்டுக்கொள்ளவில்லை. அரசு 7.12.2026, 21.1.2026 ஆகிய தேதிகளில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவித்து, அதை நடத்தவில்லை. சுமார் 40,000 விவசாய குடும்பங்கள், 5 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படும் ஒரு பிரச்னையை, அரசு வேண்டுமென்றே திட்டமிட்டு தள்ளிப்போடுகிறது. அதன்மூலம் கறிக்கோழி நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்படுகிறது. இதை ஜீரோ அவரில் பேசக்கொண்டுவந்தும் அனுமதி மறுக்கப்படுகிறது என்றால், எந்த அளவுக்கு இந்த அரசாங்கம் சர்வாதிகார போக்கை கடைபிடிக்கிறது என்பதை புரிந்துகொள்ளலாம். அதனால்தான் வெளிநடப்புச் செய்தோம்." என்றார்.

'அவர்' மீது எங்களுக்கு எவ்வளவு கோபம், எவ்வளவு ஆசை, எவ்வளவு வியப்பு இருக்கிறது தெரியுமா? - சு.வெ

ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் விழாவில், பெருந்தமிழர் விருது பெற்ற எஸ்.வி.ராஜதுறை குறித்து சு.வெங்கடேசன் எம்.பி பேசுகையில், "விகடனுடைய 'பெருந்தமிழர்' விருது பெறுகிற தோழர் எஸ்.வி.ஆர்., நம் சமகாலத்தின... மேலும் பார்க்க

``தோப்புக்கரணம் போடு என்றால், நான்-ஸ்டாப்பாக பல்டி அடிப்பார் பழனிசாமி’’ - ஸ்டாலின் கடும் தாக்கு

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை மண்டலவாடியில், தி.மு.க வடக்கு மண்டலத்துக்குட்பட்ட 47 சட்டமன்றத் தொகுதிகளின் வாக்குச்சாவடிக் குழுவினருக்கான பயிற்சி மாநாடு இன்று மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்... மேலும் பார்க்க

'த்ரிஷா குறித்து நயினார் நாகேந்திரன் பேசியது வருத்தம்' - வானதி சீனிவாசன்

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மகளிர் உரிமைத் தொகையை பாஜக தடுக்க பார்க்கிறது என்று திமுகவினர் முட்டாள்தனமான பேசுகிறார்கள். ... மேலும் பார்க்க

'புதுச்சேரி நிதியில் ரூ.15,000 கோடி ஊழல் செய்தவர் நாராயணசாமி!' – காரைக்காலில் கடுகடுத்த அமித் ஷா

``தொன்மையான தமிழ் மொழியில் பேச முடியாததற்கு மன்னிப்பு கேட்கிறேன்...”புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷ... மேலும் பார்க்க

`அமித் ஷா உள்ளிட்டோர் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வர வேண்டும்; அப்படி வந்தால்தான்...' - அன்பில் மகேஸ்

திருச்சி, திருவெறும்பூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "எதிரணியினருக்குதான் தேர்தல் பயம். மக்களுக்கான நலத்திட்டங்களை சூழ்ச்சி செய்து யா... மேலும் பார்க்க

அண்ணா அறியாலயத்தில் ஒருபக்கம் ரெய்டு; மறுப்பக்கம் கூட்டணி பேச்சு! - காங்கிரஸ் ஆடிய அரசியல் ஆடுபுலி

`ஆட்சியில் பங்கு'அரசியல் ஆடுபுலி 05ஆட்சியில் பங்கு வேண்டும் என்கிற கோரிக்கையோடு, அதிமுக கூட்டணியில் பாஜகவும், திமுக கூட்டணியில் காங்கிரசும், 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சினைத் தொடங்... மேலும் பார்க்க