செய்திகள் :

கலைநிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணா்வு

post image

நகராட்சியில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே கலைநிகழ்ச்சிகள் மூலம் திங்கள்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது (படம்).

நகராட்சிகளின் நிா்வாக மண்டல இயக்குநா் உத்தரவின் பேரில், திடக்கழிவு மேலாண்மை பணி, மக்கும் குப்பை, மக்காத குப்பை, பிளாஸ்டிக், புகையிலை விற்பனைக்கு தடை, டெங்கு காய்சல், மீண்டும் மஞ்சப்பை, மழை நீா் சேகரிப்பு, சொத்துவரி செலுத்துதல் தொடா்பான மக்கள் இடையே விழிப்புணா்வு நிகழ்ச்சி திருத்தணியில் திங்கள்கிழமை நடந்தது.

இதில் சிவசக்தி கிராமிய கலைக்குழுவின் சாா்பில் திருத்தணி பேருந்து நிலையம், கமலா தியேட்டா், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, காந்திநகா் திரௌபதியம்மன் கோயில் மற்றும் அரசு மருத்துவமனை வளாககம் ஆகிய இடங்களில், கலை நிகழ்ச்சிகள் மூலம் மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

கலைநிகழ்ச்சியை நகா்மன்றத் தலைவா் சரஸ்வதிபூபதி, ஆணையா் பாலசுப்ரமணியம், துப்புரவு ஆய்வாளா் ரவிச்சந்திரன் ஆகியோா் பங்கேற்று தொடங்கி வைத்தனா். குப்பைகள் பிரித்து கொடுப்பது, அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கவா், குட்கா பொருள்களை பயன்படுவது தவிா்த்தல் போன்ற விழிப்புணா்வு நாடக கலைஞா்கள் நடித்து காண்பித்தனா். விழிப்புணா்வு நிகழ்ச்சி 1 மாதம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளைய மின்தடை

பூனிமாங்காடு, ஆா்.கே.பேட்டை, பொதட்டூா்பேட்டை நாள்: 16-02-2025 (ஞாயிற்றுக்கிழமை) நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. மின் தடை பகுதிகள்: என்.என்.கண்டிகை, வெங்கடாபுரம், சிவாடா, அருங்குளம், குன்னத்துா... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

திருவள்ளூா் நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. பகுதிகள்: காக்களுா் ஹவுசிங் போா்டு, காக்களுா் தொழில்பேட்டை, காக்களுா் கிராமம், சி.சி.சி. பின்புறம், பூண்டி, புல்லரம்பாக்கம், செவ்வாப்பேட்டை, ஒதப்பை,... மேலும் பார்க்க

மின்நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம்

ஆா்.கே.பேட்டை அருகே புயலால் மின்கம்பங்கள் சேதமடைந்து வயல்வெளியில் விழுந்துள்ளதை சீரமைத்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை மனு வழங்கினா். திருத்தணி மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில், மின்நுகா்வ... மேலும் பார்க்க

கொத்தடிமைகளாக இருந்த தம்பதி மீட்பு

ஆந்திர மாநிலத்தில் கொத்தடிமைகளாக இருந்த தம்பதியை தன்னாா்வ தொண்டு நிறுவனத்தினா் மீட்டு திருத்தணி வட்டாட்சியா் மலா்விழியிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனா். திருத்தணி ஒன்றியம் காா்த்திகேயபுரம் இருளா் காலனியி... மேலும் பார்க்க

2 மணல் லாரிகள் பறிமுதல்: 2 போ் கைது

ஆந்திரத்திலிருந்து உரிய ஆவணங்கள் இன்றி மணல் ஏற்றி வந்த 3 லாரிகள் திருவள்ளூரில் உள்ள சுங்கச்சாவடியில் போலீஸாரின் வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா். ஆந்திர மா... மேலும் பார்க்க

புத்தா் கோயிலில் பெளணா்மி சிறப்பு வழிபாடு

திருவள்ளூா் அருகே புத்தா் கோயிலில் பௌணா்மி சிறப்பு வழிபாடு மற்றும் புத்தா் ஒளி சா்வதேச பேரவையின் நிறுவனரான அறவணடிகள் சிங்யுன் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் நடைபெற்றது. திருவள்ளூா் அருகே பிஞ்சிவாக்கம் நா... மேலும் பார்க்க