செய்திகள் :

"காங்கிரஸ்தான் இந்தியைத் திணித்ததாம்; அதைத் திமுகதான் எதிர்த்ததாம்!" - திருச்சி வேலுசாமி காட்டம்!

post image

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருச்சி வேலுசாமி 'பராசக்தி' திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் விஷயங்கள் குறித்து காட்டமாகப் பேசியிருக்கிறார்.

அப்படத்தில் காங்கிரஸ்தான் இந்தியைத் திணித்ததாம், அதைத் திமுகதான் எதிர்த்ததாம் எனக் கூறியவர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் இந்தியில் படித்துப் பட்டம் பெற்றிருக்கிறார்கள் எனவும், அப்போது இந்தி ஆட்சி மொழியாக வராமல் இருந்ததற்குக் காரணம் சஞ்சீவி ரெட்டிதான் எனவும் செய்தியாளர்களிடையே அவர் பேசியிருக்கிறார்.

பராசக்தி
பராசக்தி

திருச்சி வேலுசாமி பேசுகையில், “இன்று ஒரு திரைப்படம் வந்திருக்கிறது. அப்படத்தைத் தயாரித்தது தமிழகத்தின் ஆளுங்கட்சி.

அதில் வசனங்கள் பற்றி என்னிடம் சொன்னார்கள். காங்கிரஸ்தான் இந்தியைத் திணித்ததாம். அதைத் திமுகதான் எதிர்த்ததாம். எனக்கு இந்தி தெரியாது. இங்கிருக்கும் பலருக்கும் இந்தி தெரிய வாய்ப்பில்லை.

அக்குடும்பத்தைச் சேர்ந்த, பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருக்கக்கூடியவர் இந்தியிலேயே படித்து, பட்டம் பெற்றிருக்கிறாரா, இல்லையா?

அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் மத்தியில் அமைச்சராக இருந்தபோது, அப்போது எப்படி இவர் இந்த இளம் வயதிலேயே மிகச் சிறப்பாகப் பணியாற்றுகிறார் என அப்போதைய முதல்வரிடம் கேட்டபோது 'அவனுக்கு ஆங்கிலத்தைவிட இந்தி நன்றாகத் தெரியும்.

அதனால் அவனுக்கு அங்கு மரியாதை இருக்கிறது' எனச் சொன்னாரா இல்லையா? இந்தி இங்கு ஆட்சிமொழியாக வராமல் தடுத்ததற்கு ஒரே காரணம் சஞ்சீவி ரெட்டிதான்.

திருச்சி வேலுசாமி
திருச்சி வேலுசாமி

அப்போது ஆட்சிமொழி எதுவாக இருக்க வேண்டும் என வாக்கெடுப்பு நடக்கும்போது, இந்திக்குத்தான் சமமான வாக்குகள் வருகின்றன.

அப்போது சஞ்சீவி ரெட்டி இந்தி மொழிக்கு எதிராக வாக்குப் போட்டதால்தான் அப்போது அது தடுக்கப்பட்டது. 1967 வரை தமிழகப் பள்ளிகளில் தமிழ்தான் பாடமொழியாக இருந்தது.

அதற்குப் பின் வந்த ஆங்கிலத்திற்கு காங்கிரஸ் காரணமா அல்லது திராவிட இயக்கம் காரணமா? அப்போது தமிழ் மொழிக்காகப் பல சாதனைகளைச் செய்வதற்கு காமராஜர் காரணமாக இருந்தார்.

1972-ல் காமராஜர் திருச்சிக்கு வந்தார். அப்போது அவர் அங்கிருந்து கரூர் செல்ல வேண்டும். அப்போது அவர் இடையிடையே நிறுத்திச் சிறுநீர் கழிக்க வேண்டும். அதைத் தடுத்த வக்கிரப் புத்தியை நான் கண்ணால் பார்த்திருக்கிறேன். அப்போது அவர் அதைப் பற்றிக் கவலைப்படவே இல்லை.” எனக் கூறியிருக்கிறார்.

ஈரோடு: வனத்துக்குள் வழிதவறிய சிறுவர்கள்; களமிறங்கிய வனத்துறை; 5 மணி நேரத்தில் மீட்கப்பட்டது எப்படி?

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள கொங்காடை மலைக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தர்ஷன் (6), ராசாத்தி (11) கலைவாணி (12), சிவா (11), சூர்யா (11), தமிழ்ச்செல்வன் (11) மற்றும் மணிகண்டன் (11).இந்த 7 பேரும் அ... மேலும் பார்க்க

கோவை: ரூ. 300 கோடி மதிப்பில் 8 தளங்களுடன் பிரமாண்டமான பெரியார் அறிவுலகம் | Photo Album

பெரியார் அறிவுலகம்பெரியார் அறிவுலகம்பெரியார் அறிவுலகம்பெரியார் அறிவுலகம்பெரியார் அறிவுலகம்பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வுபொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வுபெரியார் அறிவுலகம்பொதுப்பணித்துற... மேலும் பார்க்க

'தமிழ்நாட்டில் 7, பாஜக ரூட்டில் ஒரு ராஜ்ய சபா சீட்' - விட்டுக்கொடுத்த தினகரனுக்கு டெல்லி `பரிசு'?

'விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை' எனச் சொல்லி அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதான கோபங்களை விட்டுக் கொடுத்து என்.டி.ஏ கூட்டணியில் அ.ம.மு.க-வை இணைத்திருக்கிறார் டிடிவி தினகரன். டெல... மேலும் பார்க்க

`6.6% டு 7.3%: நினைத்ததை விட வேகமாக வளரும் இந்தியாவின் GDP; ஆனாலும் ஒரு சிக்கல்' - IMF அறிக்கை

2025-26 நிதியாண்டின் இந்தியாவின் GDP வளர்ச்சி விகிதம் 6.6 சதவிகிதமாக இருக்கும் என்று முன்பு கணித்திருந்தது சர்வதேச நாணய நிதியம். அந்தக் கணிப்பை இப்போது 7.3 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது அந்த அமைப்பு. சர்... மேலும் பார்க்க

டெல்லி குடியரசு தின விழா: விவிஐபியாகப் பங்கேற்கும் தேனி பளியர் பழங்குடியினத் தம்பதி; காரணம் என்ன?

இந்திய நாட்டின் 77-ஆவது குடியரசு தின விழா டெல்லியில் கோலாகலமாக நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இவ்விழாவின் போது சிறப்பு அழைப்பாளர்களாக பழங்குடியினரை அழைத்து அவர்களைக் கெளவரப்படுத்து வருகிறது மத்திய அரச... மேலும் பார்க்க

காசாவை மீட்கும் முயற்சி; ட்ரம்பின் 'அமைதி வாரியம்'; மெலோனி முதல் மோடி வரை; யார் யாருக்கு அழைப்பு?

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நீடித்து வரும் போரால் பாலஸ்தீனத்தின் காசா பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே, அந்தப் பகுதியை ராணுவமற்ற மண்டலமாக மாற்றவும், மீண்டும் அந்தப் பகுதியைக் கட்டியெழுப்பவும் ... மேலும் பார்க்க