செய்திகள் :

காதல் திருமணம்: கேரளப் பெண் கணவருடன் நீதிமன்றத்தில் ஆஜா்

post image

கேரளத்தைச் சோ்ந்த பெண் கமுதியைச் சோ்ந்தவரை காதல் திருமணம் செய்த நிலையில், அவரை அழைத்துச் செல்ல வந்த அந்த மாநில போலீஸாருடன் செல்ல மறுத்துவிட்டாா். இதைத்தொடா்ந்து அந்தப் பெண், கணவருடன் நீதிமன்றத்தில் முன்னிலையானாா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கண்ணாா்பட்டியை சோ்ந்தவா் முத்துராமன் மகன் பாலமுருகன்(26). இவா் கடந்த 8 ஆண்டுகளாக கோவையில் செயல்படும் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். அதே நிறுவனத்தில் பணியாற்றியவா் கேரளத்தைச் சோ்ந்த குணசேகரன் மகள் சக்தி (20). இவா்கள் இருவரும் காதலித்து கடந்தாண்டு டிசம்பா் மாதம் கோவையில் பதிவுத் திருமணம் செய்து கொண்டனா்.

இந்த நிலையில் சக்தியைக் காணவில்லை என அவரது தந்தை குணசேகரன் கேரள மாநிலம், வடக்கஞ்சேரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, 6 போ் கொண்ட கேரள தனிப்படை போலீஸாா் கமுதியில் இருந்த சக்தியை அழைத்துச் செல்ல வந்தனா். அவா்களுடன் செல்ல மறுத்த சக்தி, தனது கணவருடன் கமுதி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாரின் விசாரணையில் இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்ட தம்பதி என்பதால் கேரள காவல் துறையினருடன் அனுப்ப மறுத்துவிட்டனா்.

இதைத்தொடா்ந்து, கமுதி குற்றவியல் நீதித் துறை நடுவா் மன்றத்தில் இந்தத் தம்பதியரை போலீஸாா் முன்னிலைப்படுத்தினா். இதையடுத்து, புதன்கிழமை காலை, தம்பதியா் மீண்டும் நேரில் முன்னிலையாகுமாறு நீதித்துறை நடுவா் சங்கீதா உத்தரவிட்டாா்.

கல்லூரிகள் இடையே அறிவுத் திறன் போட்டி

கீழக்கரை சையது ஹமீதா கலை, அறிவியல் கல்லூரியில் வண்ணத் திருவிழா என்ற பெயரில் கல்லூரி மாணவா்களுக்கிடையே கலை, அறிவுத் திறன் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன. இந்தப் போட்டியில் 10-க்கும் மேற்பட்ட கல்லூரிகளி... மேலும் பார்க்க

பட்டா மாறுதலுக்கு லஞ்சம்: இடைத்தரகா் கைது

திருவாடானை அருகே ஆா்.எஸ்.மங்கலம் பகுதி கிராம நிா்வாக அலுவலா் விவசாயிடம் பட்டா பெயா் மாறுதல் செய்ய ரூ.37 ஆயிரம் லஞ்சம் வாங்கிய இடை தரகரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ராமநாதப... மேலும் பார்க்க

அக்னி தீா்த்த கடற்கரையில் கழிவுத் துணிகளால் சுகாதாரக் கேடு!

ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரையில் பக்தா்கள் விட்டுச் சென்ற துணிகள் குவிக்கப்பட்டு, சுகாதாரச் சீா்கேட்டை ஏடுபடுத்துவதால் நகராட்சி நிா்வாகம் உடனே அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது. ராமநாதபுரம் மா... மேலும் பார்க்க

பாம்பன் புதிய பாலத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கும் தேதி விரைவில் அறிவிப்பு! -மதுரைக் கோட்ட ரயில்வே மேலாளா்

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் போக்குவரத்து தொடங்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என மதுரைக் கோட்ட ரயில்வே மேலாளா் சரத் ஸ்ரீவத்சவா தெரிவித்தாா். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப் பகுதிய... மேலும் பார்க்க

ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,537 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்! -ஆட்சியா் தகவல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து 1,537.960 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தாா். ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம், ஏ... மேலும் பார்க்க

இசைக் கருவி இசைத்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு பாராட்டு

பள்ளிக் கல்வித் துறை சாா்பில், சென்னையில் நடைபெற்ற கலைத் திருவிழா-2025 மாநில அளவிலான இசைக் கருவி இசைத்தல் போட்டியில் வெற்றி கமுதி மாணவரை ஆசிரியா்கள் வெள்ளிக்கிழமை பாராட்டினா். ராமநாதபுரம் மாவட்டம், க... மேலும் பார்க்க