செய்திகள் :

காதல் மனைவிமீது சந்தேகம், வீடு முழுக்க கேமரா; இரண்டு மகள்களைக் கொன்ற தந்தை

post image

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தவர் சசி ரஞ்சன் மிஸ்ரா (48). இவர்களுக்கு 11 வயதில் ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டை சகோதரிகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். பீகாரைச் சேர்ந்த சசி மருத்துகள் விற்பனை செய்யும் பிரதிநிதியாக வேலை செய்து வந்தார். சசி நீண்ட நாட்களாக தன் மனைவியின் நடத்தைமீது சந்தேகப்பட்டு வந்தார். இதுதொடர்பாக கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்படுவதுண்டு. எனவே தன் மனைவியைக் கண்காணிக்க வீடு முழுக்க கண்காணிப்பு கேமரா பொருத்தியிருக்கிறார்.

எப்போதும் இரண்டு மகள்களையும் சசி தனது பொறுப்பில் வைத்து வளர்த்து வந்தார். இரண்டு மகள்களும் இருக்கும் அறைக்குள் சசி தன் மனைவியை விடாமல் தானே வளர்த்து வந்தார். அதோடு மகனை நீ வளர்த்துக்கொள், நான் இரண்டு மகள்களையும் வளர்த்துக்கொள்கிறேன் என்று அடிக்கடி தன் மனைவியிடம் கூறி வந்தார்.

ரேஷ்மா

நேற்று இரவு சாப்பிட்டுவிட்டு சசி தன் மகள்களுடன் தனி அறைக்கு உறங்க சென்றார். நள்ளிரவில் ஒரு முறை எழுந்து ஒரு மகளை பாத்ரூம் அழைத்து சென்றுவிட்டு மீண்டும் அறைக்கு வந்த சிறிது நேரத்தில் அவர்களது வீட்டிற்கு போலீஸார் வந்தனர்.

போலீஸார் வந்தபிறகுதான் வீட்டிற்குள் உறங்கிக்கொண்டிருந்த இரண்டு மகள்களும் கழுத்தை அறுத்து கொலை செய்யபட்டு இருந்தது தெரிய வந்தது. சசி இரண்டு மகள்களையும் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து தன் மகள்களை கொலை செய்துவிட்டதாக தெரிவித்திருந்தார். போலீஸார் இரண்டு சிறுமிகளின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு சசியைக் கைது செய்தனர்.

இது குறித்து சசி மனைவி ரேஷ்மா இது குறித்து கூறுகையில்,''அவருக்கு மன அழுத்தம் இருந்தது. நள்ளிரவில் ஒரு மகளை பாத்ரூம் அழைத்து சென்ற பிறகு மின் விளக்கை அணைத்துவிட்டார். ஆனால் அடுத்த இரண்டு மணி நேரத்தில் போலீஸார் வந்தனர்''என்றார். ரேஷ்மா மேற்கு வங்கத்தை சேர்ந்தவர். ரேஷ்மா பியூட்டி பார்லர் ஒன்றில் வேலை செய்த போது சசியை சந்தித்து காதலித்து 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

Vinay Kulkarni: பாஜக பிரமுகர் கொலை வழக்கு; காங்கிரஸ் எம்.எல்.ஏ வினய் குல்கர்னிக்கு ஆயுள் தண்டனை!

கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாஜக பிரமுகர் யோகேஷ் கவுடா கொலை வழக்கில், தார்வாடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ வினய் குல்கர்னி உள்ளிட்ட 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு... மேலும் பார்க்க

180 மைனர் பெண்கள் பாலியல் வன்கொடுமை; டெலிகிராமில் பரவிய வீடியோ; குற்றவாளியின் வீடு இடிப்பு!

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் மைனர் பெண்கள் 180 பேரை காதலிப்பதாகப் பேசி அவர்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய அயன் அகமத் (18) என்ற வாலிபர் இரண்டு நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அவரிடமிரு... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: 180 மைனர் பெண்களுக்குப் பாலியல் வன்கொடுமை; வீடியோ எடுத்து ஆன்லைன் வெளியிட்ட நபர் கைது

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் மைனர் பெண்களைக் குறிவைத்து மிகப்பெரிய பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்துள்ளது. அமராவதி அருகில் உள்ள பரத்வாடா என்ற இடத்தில் வசிக்கும் தன்வீர் என்பவர் மைனர் பெண்களைக் காதலி... மேலும் பார்க்க

பெண் காணாமல்போன வழக்கு; அலட்சியம் காட்டிய 28 போலீஸார் சஸ்பெண்ட்; கோர்ட் தலையிட்டு அதிரடி

ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டத்தில் உள்ள பிண்டஜோரா இடத்தை சேர்ந்த புஷ்பா (18) என்ற இளம்பெண் கடந்த ஆண்டு ஜூலை மாதம் காணாமல் போனார். இதுதொடர்பாக அவரின் தாயார் ரேகா தேவி போலீஸில் புகார் செய்திருந்தார... மேலும் பார்க்க

கும்பமேளா வைரல் பெண்ணைத் திருமணம் செய்தவர் மீது போக்சோ வழக்கு; கேரள சிபிஎம் நிர்வாகிகளிடம் விசாரணை?

பிரயாக்ராஜில் கடந்த ஆண்டு நடந்த மகா கும்பமேளாவில் மாலைகள் மற்றும் ருத்ராட்சம் விற்றுக்கொண்டிருந்த மத்தியபிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த பெண்ணின் புகைப்படம் வைரலானதைத் தொடர்ந்து அவர் பிரபலமானார். கும்... மேலும் பார்க்க

சேலம்: பள்ளி வளாகத்தில் ஆசிரியை வெட்டிக்கொலை; நடந்தது என்ன?

சேலம் மாவட்டத்தில் பள்ளி வளாகத்தில் ஆசிரியை ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சேலம், ஓமலூர் அருகே கமலாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஸ்ரீவித்யா என்பவர் ஆசிரிய... மேலும் பார்க்க