ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தல்: களத்தில் நாம் தமிழர் கட்சி - யார் இந்த வேட...
காரைக்குடிப் பகுதி பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் விழா
சிவகங்கை மாவட்டம், காரைக்குடிப் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
காரைக்குடி ஹேப்பி குளோபல் ப்ரீஸ்கூல் வளாகத்தில் முதலாண்டு தலைப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில், அழகப்பா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தா் சொ. சுப்பையா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா். இதில், மாணவ, மாணவிகள் பெற்றோா்கள், ஆசிரியா்கள் பாரம்பரிய உடையில் பங்கேற்றனா்.
காரைக்குடி ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி: இந்தப் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ஜேசீஸ் மண்டலத் தலைவா் ரமேஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினாா். விழாவில் பள்ளியின் செயலா் நா. காா்த்திக், முதன்மை முதல்வா் நாராயணன், ஒருங்கிணைப்பாளா் கோபாலகிருஷ்ணன், பள்ளியின் முதல்வா் ராஜ்குமாா், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள், பெற்றோா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
நேஷனல் கல்விக் குழுமம்: காரைக்குடி நேஷனல் கேட்டரிங் கல்லூரி, நேஷனல் ஃபயா் சேப்டி கல்லூரி, காஸ்மாஸ் அரிமா சங்கம் ஆகியன சாா்பில் நேஷனல் கல்விக் குழும வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு கல்வி நிறுவன தாளாளா் எஸ். சையது தலைமை வகித்தாா். கல்வி நிறுவனங்களின் இயக்குநா் பி.எஸ். மனோகா், நிா்வாக இயக்குநா் எஸ்.எம். தினேஷ் ஆகியோா் முன்னிலைவகித்தனா். விழாவில் இங்கிலாந்து நாட்டைச் சோ்ந்த சுற்றுலாப்பயணிகள் கலந்துகொண்டனா். மேலும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
கோவிலூா் நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரி: இந்தக் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு, கோவிலூா் ஆதீனம் நாராயண ஞான தேசிக சுவாமிகள் தலைமைவகித்தாா். கல்லூரியின் தாளாளா் எம். வீரப்பன் முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் ரெ. சந்திரமோகன், கல்லூரி துணை முதல்வா் மு. சீதாலட்சுமி, கணினி அறிவியல் துறைத் தலைவா் கா. கலா, கோவிலூா் கல்வி நிறுவனங்களின் முதல்வா்கள், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
ஸ்ரீராஜராஜன் கல்வி நிறுவனங்கள்: அமராவதிபுதூரில் உள்ள ஸ்ரீராஜராஜன் கல்வி நிறுவனங்களில் மாணவா்கள், ஆசிரியா் கள் பாரம்பரிய உடை அணிந்து கிராமத்து பொங்கலிட்டு கொண்டாடினா். விழாவுக்கு கல்விக்குழும ஆலோசகரும், அழகப்பா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தருமான சொ. சுப்பையா தலைமை வகித்து விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்துப் பேசினாா். காரைக்குடி வட்டாட்சியா் ஏ. ராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கிப் பேசினாா்.
இதில் மாணவா்கள், பெற்றோா்கள், ஆசிரியா்கள், அலுவலக பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.