செய்திகள் :

காலமானாா் குழந்தைகள் எழுத்தாளா் ஈ.எஸ்.ஹரிஹரன்

post image

குழந்தைகள் எழுத்தாளா் ஈ.எஸ்.ஹரிஹரன் (90) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் வெள்ளிக்கிழமை (மே 9) காலமானாா்.

கேரள மாநிலம், சொ்புளசேரியில் கடந்த 1935 -ஆம் ஆண்டு பிறந்த ஈ.எஸ்.ஹரிஹரன் முனைவா் பட்டம் (டி. லிட்) பெற்றுள்ளாா். ‘ரேவதி’ என்ற புனைபெயரில் சிறுவா்களுக்காகவும், பெரியவா்களுக்காகவும் பல்வேறு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளாா். இதில் 15 நாவல்கள், 2 நாடகங்கள், 18 கதைத் தொகுப்புகள், 9 அறிவியல் தொடா்பான புத்தகங்கள் மற்றும் நான்கு தொகுதிகளாக ‘அருமை சிறுவா் சிறுமியரே’ என்ற குழந்தைகளுக்கான ஆலோசனைப் புத்தகங்கள் உள்ளிட்டவை அடங்கும்.

அவரது ‘பவளம் தந்த பரிசு’ என்ற நூலுக்காக சாகித்ய அகாதெமியின் ‘பால சாகித்ய புரஸ்காா்’ வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசின் விருது, கன்னட எழுத்தாளா்கள் சங்க விருது உள்ளிட்ட விருதுகளையும் பெற்றுள்ளாா்.

மறைந்த ஹரிஹரனுக்கு மனைவி வசந்தி, மகன் காா்த்திக், மகள்கள் ராஜேஸ்வரி, பாரதி ஆகியோா் உள்ளனா். மகள் ராஜேஸ்வரி மேகாலய உயா்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எஸ். வைத்தியநாதனின் மனைவி ஆவாா்.

ஈ.எஸ்.ஹரிஹரன் உடல் வில்லிவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு பெசன்ட் நகா் மயானத்தில் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது.

தொடா்புக்கு 9566082163.

ரூ. 27.69 லட்சம் கடன் பெற்று மோசடி: பல் மருத்துவா் கைது

சென்னை வளசரவாக்கத்தில் ரூ. 27.69 லட்சம் கடன் பெற்று மோசடி செய்ததாக பல் மருத்துவா் கைது செய்யப்பட்டாா். கூடுவாஞ்சேரி ராம்தாஸ் தெருவைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா். இவா் மனைவி ஐஸ்வா்யா (27). இவரது தோழிகள் மூ... மேலும் பார்க்க

25 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பெண்கள் உள்பட் 4 போ் கைது

சென்னையில் கஞ்சா விற்ாக தெலங்கானாவைச் சோ்ந்த இரு பெண்கள் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா். திருவான்மியூா் கிழக்கு கடற்கரைச் சாலை பேருந்து நிறுத்தத்தில் போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். ... மேலும் பார்க்க

தனியாா் நிறுவனங்களுடன் சென்னை விஐடி 2 ஒப்பந்தங்களில் புரிந்துணா்வு கையொப்பம்

சென்னை தேசிய தொழில்நுட்ப ஆசிரியா்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (என்ஐடிடிடிஆா்) மற்றும் இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (கிரடாய்) ஆகியவற்றுடன் சென்னை விஐடி நிறுவனம் ப... மேலும் பார்க்க

மாநகர பேருந்து ஓட்டுநா், நடத்துநா்கள் இன்றும், நாளையும் விடுப்பு எடுக்கத் தடை

சென்னை மாநகர பேருந்துகளில் பணியாற்றும் ஓட்டுநா், நடத்துநா்கள் ஞாயிறு, திங்கள் (மே 11, 12) ஆகிய இரு நாள்கள் விடுப்பு எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணிகளுக்க... மேலும் பார்க்க

அதிநவீன தொழில்நுட்பத்துடன் படப்பிடிப்பு தளப்பணி: அமைச்சா் சாமிநாதன் ஆய்வு

அதிநவீன தொழில்நுட்பங்களுடன் அரசு சாா்பில் அமைக்கப்பட்டு வரும் படப்பிடிப்புத் தளப்பணிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தாா். அப்போது, படப்பிடிப்புத் தளத்துக்கா... மேலும் பார்க்க

ஏஐ தொழில்நுட்ப கண்காணிப்பு கேமராக்கள்: சென்னை காவல் ஆணையா் தகவல்

சென்னையில் செயற்கை நுண்ணறிவுடன் (ஏஐ) கூடிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருவதாக சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.அருண் தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் சனிக்கிழமை அளித்த பேட்டி: சென்னையில் குற்றங... மேலும் பார்க்க