செய்திகள் :

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சீமான் மீது வழக்குகள் பதிவு

post image

பெரியாா் குறித்து அவதூறு பேசியதாக சீமான் மீது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கடந்த சில நாள்களுக்கு முன் செய்தியாளா்களிடம் பேசும்போது, பெரியாா் குறித்து அவதூறாக பேசியதாக புகாா் எழுந்தது. இதுகுறித்து, தமிழகம் முழுவதும் திமுக, கூட்டணி கட்சியினா், திராவிட கழகத்தினா் கண்டனம் தெரிவித்து வருகின்றனா். தமிழகத்தில் சீமான் மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகாா்கள் தெரிவிக்கப்பட்டு, வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி ஆகிய காவல் நிலையங்களில் திராவிடா் விடுதலை கழகத்தினா் தனித்தனியே அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். காவேரிப்பட்டணத்தில் திராவிடா் கழக நகரச் செயலாளா் ராஜா அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

ஆருத்ரா தரிசனம்: சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

கிருஷ்ணகிரி: ஆருத்ரா தரிசனத்தையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை சிவனுக்குரிய அபிஷேக நாள்களில் முக்கியமானது மாா்கழி மாதம் திருவாதிரை அன்று செய்யப்படும... மேலும் பார்க்க

ஒசூரில் ஆருத்ரா தரிசனம்

ஒசூா்: ஒசூா், பிருந்தாவன் நகா், ஸ்ரீ யோகீஸ்வரா் கோயிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீ சிவகாமி அம்மை சமேத ஸ்ரீ நடராஜ பெருமானுக்கு திருவாதிரையை முன்னிட்டு திங்கள்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் கலச பூஜையும், 4 மணி... மேலும் பார்க்க

ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயத்தை உருவாக்கியவா் வள்ளலாா்: ஆளுநா் ஆா்.என்.ரவி

ஒசூா்: ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயத்தை உருவாக்கியவா் வள்ளலாா் என்று தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் தனியாா் திருமண மண்டபத்தில் வள்ளலாா் விவேகம் அறக்கட்டளை சாா்பில் வள... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ. 35 லட்சம் மோசடி: பஞ்சாப் ஓட்டுநா் கைது

கிருஷ்ணகிரி: ஒசூரைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ. 35 லட்சம் மோசடி செய்த பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்த வாகன ஓட்டுநரை கிருஷ்ணகிரி மாவட்ட இணைய குற்றப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா். ஒசூரை சோ்ந்த த... மேலும் பார்க்க

ஒசூா் தொகுதியில் ரூ. 1,500 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் தகவல்

ஒசூா் தொகுதியில் ரூ. 1,500 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஒசூா் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஒய்.பிரகாஷ் தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

குற்றவாளிகளுக்கு உதவியதாக மேலும் ஒருவா் கைது

ஒசூரில் நீதிமன்றத்துக்கு கை துப்பாக்கிகள் வைத்திருந்த பாதுகாவலா்கள், கொலை குற்றவாளிகள் என 10 போ் அண்மையில் கைது செய்யப்பட்ட நிலையில், அவா்களுக்கு உதவியதாக மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். ஒசூா் ... மேலும் பார்க்க