செய்திகள் :

குஜராத்: பாஜக எம்.எல்.ஏ. காலமானார்!

post image

குஜராத் மாநிலத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் உடல் நலக்குறைவால் காலமானார்.

பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தின் காடி சட்டமன்ற உறுப்பினரான கர்ஷன்பாய் சோலன்கீ (வயது 68), புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அஹமதாபாத்திலுள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், இன்று (பிப்.4) அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும், அவரது இறுதி சடங்கு காடி தாலுக்காவிலுள்ள அவரது சொந்த ஊரான நாகராஸன் கிராமத்தில் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ராணுவ விமானத்தில் இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா!

இதனைத் தொடர்ந்து, அவரது மரணத்திற்கு குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் மற்றும் அம்மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டில் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, கர்ஷன்பாய் சோலன்கீ காடி சட்டமன்ற தொகுதியில் கடந்த 2017 மற்றும் 2022 தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிகார் தலைநகரில் துப்பாக்கிச் சூடு! சுற்றி வளைத்த பாதுகாப்புப் படை!

பிகார் தலைநகர் பாட்னாவில் திடீரெனத் மக்கள் நிரம்பிய பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பதுங்கிய பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்துள்ளனர்.கான்கர்பாக் பகுதியிலுள்ள ஓர் வீட்டின் வாசலில் ... மேலும் பார்க்க

அயோத்தி ராமர் கோயில் மீது பறந்த டிரோன்! செயலிழக்க வைத்த காவல் துறை!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியிலுள்ள ராமர் கோயிலின் மீது பறந்த டிரோன் கேமராவை காவல் துறையினர் செயலிழக்க வைத்து வீழ்த்தியுள்ளனர்.அயோத்தியிலுள்ள ராமர் கோயிலின் மீது டிரோன்கள் பறக்கவிடுவதற்கு தடைசெய்யப்... மேலும் பார்க்க

அபுதாபியில் ‘மேட் இன் ரஷியா’ திருவிழா!

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரமான அபுதாபியில் 'மேட் இன் ரஷியா’ திருவிழா மற்றும் கண்காட்சி வருகின்ற பிப்.21 முதல் 5 நாள்களுக்கு நடத்தப்படவுள்ளது.ரஷிய கலாச்சாரம், பாரம்பரியம், மரபுகள் மற்றும் அதிநவீன தொ... மேலும் பார்க்க

சமூக நலத்திட்டங்களுக்கான நிதி: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

தமிழ்நாடு அரசின் நலத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்திட மத்திய அரசின் பங்குத் தொகையை, குறிப்பிட்ட காலத்திற்குள் விடுவித்திட வலியுறுத்தி மத்திய மகளிர்மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைஅமைச்சர் அன... மேலும் பார்க்க

ஜம்முவில் கடத்தப்பட்ட சகோதரிகள் சத்தீஸ்கரில் மீட்பு!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடத்தப்பட்ட சகோதரிகள் இருவர் ஒரு வாரம் கழித்து சத்தீஸ்கர் மாநிலத்தில் மீட்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.ஜம்முவின் ஜானிப்பூரில் கடந்த ஒரு வாரம் முன்பு 16 மற்ற... மேலும் பார்க்க

சென்னையில் 'பிங்க் ஆட்டோ' திட்டம்: மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம்!

சென்னையில் மார்ச் மாதம் முதல் பிங்க் ஆட்டோ திட்டம் பயன்பாட்டுக்கு வரவுள்ள நிலையில், மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை மாநகரத்தில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடு... மேலும் பார்க்க