செய்திகள் :

குஜராத்: 33 கிராமங்களுக்காக ரூ.21 கோடிக்கு கட்டிய தண்ணீர் தொட்டி- திறக்கப்படுவதற்கு முன்பே இடிந்தது!

post image

குஜராத் மாநிலம் சூரத் அருகில் உள்ள தட்கேஷ்வர் என்ற கிராமத்தில் மாநில அரசு, 33 கிராமங்களுக்கு தண்ணீர் சப்ளை செய்வதற்காக ரூ.21 கோடியில் 9 லட்சம் லிட்டர் தண்ணீரை சேமிக்கும் வகையில் 15 மீட்டரில் பிரம்மாண்ட தண்ணீர் டேங்க் ஒன்றை கட்டியது.

இதனை கட்டுவதற்கு தனியார் ஒப்பந்ததாரர் ஒருவர் நியமிக்கப்பட்டு இருந்தார். அவர் சமீபத்தில் தண்ணீர் டேங்கை கட்டி முடித்தார். இதையடுத்து அரசு பொறியாளர்கள் தண்ணீர் டேங்கை ஆய்வு செய்வதற்காக வந்தனர். அவர்கள் தண்ணீர் டேங்க் முழுக்க தண்ணீரை நிரப்பினர். தண்ணீரை நிரப்பியபோதே தொட்டியில் கசிவு ஏற்பட்டது. தண்ணீர் முழுமையாக நிரப்பியவுடன் அதிகாரிகள் முன்னிலையில் தொட்டி அப்படியே இடிந்து விழுந்தது.

அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. 3 பேர் காயம் அடைந்தனர். கட்டி முடிக்கப்பட்டவுடன் தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மிகவும் தரமில்லாத பொருட்களை கொண்டு தண்ணீர் தொட்டி கட்டப்பட்டு இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

சம்பவத்திற்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க மாநில அரசு 7 தனிப்பிரிவுகளை அமைத்து இருக்கிறது. இது தவிர போலீஸார் இது தொடர்பாக வழக்கும் பதிவு செய்து அதிரடி ரெய்டு நடத்தி 7 பேரை கைது செய்து இருக்கின்றனர். மேலும் அரசின் துணை நிர்வாக பொறுப்பாளர் இதற்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது. அவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதில் தொடர்புடைய பல அதிகாரிகள் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ரூ.21 கோடியில் கட்டப்பட்ட தண்ணீர் தொட்டி நொடியில் அப்படியே அப்பளம் போன்று உடைந்து விழுந்தது மாநில அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

விருதுநகர்: உரிமைத்தொகையை செலவு செய்ததால் கோபித்த மனைவி; விபரீத முடிவெடுத்த கணவரால் சோகம்!

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள நெடுங்குளத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரின் மனைவி ராமு. இவரது வங்கிக் கணக்கில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை ரூ.3 ஆயிரம் ... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: ஒரு தலை காதல் தொல்லை; உயிரை மாய்த்த மாணவி; மாணவரை கைதுசெய்ய குடும்பத்தினர் கோரிக்கை!

ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் கோகுல் நகரைச் சேர்ந்த தம்பதியின் மகள், அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் அதே பள்ளியில் அதே வகுப்பில் படித்த மாணவர் ஒருவ... மேலும் பார்க்க

`மகனிடம் சேரப் போகிறோம்' - பெற்றோரின் உருக்கமான கடிதம் - சோகத்தில் ஆழ்ந்த கிராமம்!

சத்தீஸ்கர் மாநிலம், ஜான்ஜ்கிர்-சம்பா மாவட்டத்தில் உள்ளது தார்தேய் (Dhardei) கிராமம். இங்கு கிருஷ்ணா படேல் (48), அவர் மனைவி ரமா பாய் (47) ஆகியோர் வசித்து வந்தனர். இந்த நிலையில், இன்று காலை வீட்டு முற்ற... மேலும் பார்க்க

Taapsee Pannu: ``தினமும் 80 பாலியல் குற்றங்கள்... நாம் பழகிவிட்டோம்" - நடிகை டாப்ஸி பண்ணு ஆவேசம்!

பீகார் மாநிலம், பாட்னாவில் நீட் தேர்வுக்காகத் தயாராகி வந்த 17 வயது மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜஹானாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த ம... மேலும் பார்க்க

நடத்தையில் சந்தேகம்: காதலர் தின விருந்தில் மனைவியைக் கொன்றுவிட்டு நாடகம் - கணவன் சிக்கியது எப்படி?

ஹரியானா மாநிலம், குருகிராம் பஹதுர்கர் பகுதியைச் சேர்ந்த மஹக் என்ற பெண் இரண்டு நாள்களுக்கு முன்பு காதலர் தின இரவில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். மஹக் பிரபல தனியார் வங்கியில் பணியாற்றி வந்தா... மேலும் பார்க்க

சென்னை: கணவன், மனைவியைக் கொலை செய்த பக்கத்து வீட்டுக்காரர் - திருமணம் மீறிய உறவால் விபரீதம்

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன் என்கிற பார்த்தசாரதி(42). இவரின் மனைவி ஜமுனா(35). இவர்களது எதிர் வீட்டில் சுசில் (32), அவரின் மனைவி கிரிஜா(29) ஆகி... மேலும் பார்க்க