செய்திகள் :

குடிபோதையில் விழுந்த கணவன்; காய்கறி வெட்டிய கத்தியுடன் பிடித்த மனைவி - டெல்லியில் சோகம்

post image

டெல்லி அருகில் உள்ள குருகிராம் என்ற இடத்தில் வசித்து வந்தவர் சுனில் குமார். கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்று தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். சுனில் குமார் மனைவி மம்தா.

சுனில் குமார் வழக்கமாக மது அருந்துவது உண்டு. அவர் வெளியில் மது அருந்திவிட்டு குடிபோதையில் வீட்டிற்கு வந்திருக்கிறார். அவர் தனது படுக்கை அறையில் இருந்து பாத்ரூம் செல்வதற்கு தள்ளாடியபடி வந்தார். வழியில் அவரது மனைவி காய்கறி வெட்டிக்கொண்டிருந்தார். அப்போது சுனில் குமார் எதிர்பாராத விதமாக போதையில் தவறி கீழே விழப்போனார்.

உடனே அவரை அவரது மனைவி கையில் இருந்த கத்தியோடு பிடித்து காப்பாற்ற முயன்றார். அவர் தனது கணவனை காப்பாற்றும் எண்ணத்தில்தான் பிடித்தார். ஆனால் எதிர்பாராத விதமாக மம்தா கையில் இருந்த கத்தி சுனில் குமார் நெஞ்சில் குத்திவிட்டது.

உடனே அவரை மம்தா அங்குள்ள தனியார் மருத்துவனைக்கு கொண்டு சென்றார். ஆனால் நெஞ்சு பகுதியில் கத்திக்குத்து ஆழமாக இருந்ததால் சிகிச்சை பலனின்றி இறந்துபோனார். குடும்பத்தினர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக தெரிவிததனர். ஆனால் நெஞ்சுப்பகுதியில் காயம் இருந்ததால் டாக்டர்கள் சுனில் குமார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் கத்திக்குத்து உறுதி செய்யப்பட்டது. அதோடு சுனில் குமார் மாரடைப்பு ஏற்பட்டு இறக்கவில்லை என்று பிரேத பரிசோதனை அறிக்கை கூறியது. இதையடுத்து மம்தாவிடம் போலீஸார் விசாரித்தபோது நடந்த சம்பவத்தை தெரிவித்தார். எனவே மம்தா மீது போலீஸார் கொலைக்கு நிகரான பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இத்தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விருதுநகர்: உரிமைத்தொகையை செலவு செய்ததால் கோபித்த மனைவி; விபரீத முடிவெடுத்த கணவரால் சோகம்!

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள நெடுங்குளத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரின் மனைவி ராமு. இவரது வங்கிக் கணக்கில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை ரூ.3 ஆயிரம் ... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: ஒரு தலை காதல் தொல்லை; உயிரை மாய்த்த மாணவி; மாணவரை கைதுசெய்ய குடும்பத்தினர் கோரிக்கை!

ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் கோகுல் நகரைச் சேர்ந்த தம்பதியின் மகள், அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் அதே பள்ளியில் அதே வகுப்பில் படித்த மாணவர் ஒருவ... மேலும் பார்க்க

`மகனிடம் சேரப் போகிறோம்' - பெற்றோரின் உருக்கமான கடிதம் - சோகத்தில் ஆழ்ந்த கிராமம்!

சத்தீஸ்கர் மாநிலம், ஜான்ஜ்கிர்-சம்பா மாவட்டத்தில் உள்ளது தார்தேய் (Dhardei) கிராமம். இங்கு கிருஷ்ணா படேல் (48), அவர் மனைவி ரமா பாய் (47) ஆகியோர் வசித்து வந்தனர். இந்த நிலையில், இன்று காலை வீட்டு முற்ற... மேலும் பார்க்க

Taapsee Pannu: ``தினமும் 80 பாலியல் குற்றங்கள்... நாம் பழகிவிட்டோம்" - நடிகை டாப்ஸி பண்ணு ஆவேசம்!

பீகார் மாநிலம், பாட்னாவில் நீட் தேர்வுக்காகத் தயாராகி வந்த 17 வயது மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜஹானாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த ம... மேலும் பார்க்க

நடத்தையில் சந்தேகம்: காதலர் தின விருந்தில் மனைவியைக் கொன்றுவிட்டு நாடகம் - கணவன் சிக்கியது எப்படி?

ஹரியானா மாநிலம், குருகிராம் பஹதுர்கர் பகுதியைச் சேர்ந்த மஹக் என்ற பெண் இரண்டு நாள்களுக்கு முன்பு காதலர் தின இரவில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். மஹக் பிரபல தனியார் வங்கியில் பணியாற்றி வந்தா... மேலும் பார்க்க

சென்னை: கணவன், மனைவியைக் கொலை செய்த பக்கத்து வீட்டுக்காரர் - திருமணம் மீறிய உறவால் விபரீதம்

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன் என்கிற பார்த்தசாரதி(42). இவரின் மனைவி ஜமுனா(35). இவர்களது எதிர் வீட்டில் சுசில் (32), அவரின் மனைவி கிரிஜா(29) ஆகி... மேலும் பார்க்க