செய்திகள் :

'குதிரை பேரத்திற்கு விலைபோன துரோகி சத்யபாமா' - தாராபுரத்தில் கவனத்தை ஈர்க்கும் சர்ச்சை போஸ்டர்கள்

post image

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் அ‌.தி.மு.க தரப்பில் பேட்டியிட்டு வெற்றி பெற்றவர் சத்யபாமா.

எஸ்‌‌.பி வேலுமணி அணியில் இடம்பெறுவதாக ஆதரவு அளித்து வந்த நிலையில், திடீரென தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகரைச் சந்தித்து கடிதம் கொடுத்தார்.

அதே கையோடு த.வெ.க- வில் இணைந்தார்‌‌. தேர்தலில் வெற்றி பெற்ற ஒரே மாதத்தில் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க- வில் இணைந்த விவகாரம் தமிழ்நாடு அளவில் விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது.

சத்யபாமா அங்கம் வகித்த அ.தி.மு.க மட்டுமின்றி தொகுதி மக்களும் இவருக்கு எதிராக வினையாற்றி வருகின்றனர்.

தாராபுரத்தில் கவனத்தை ஈர்க்கும் சர்ச்சை போஸ்டர்கள்
தாராபுரத்தில் கவனத்தை ஈர்க்கும் சர்ச்சை போஸ்டர்கள்

இந்த நிலையில், 'தாராபுரம் சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க தொண்டர்களின் வியர்வை சிந்திய உழைப்பில் வெற்றி பெற்று, MLA-ஆகி தற்போது TVK-வின் குதிரை பேரத்திற்கு விலைபோன துரோகி சத்தியபாமாவை வன்மையாகக் கண்டிக்கிறோம்' என தாராபுரம் தொகுதியின் பல இடங்களிலும் அ.தி.மு.க தாராபுரம் சட்டமன்றத் தொகுதி என்கிற பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

தாராபுரம் தொகுதியில் சத்யபாமாவிற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வரும் நிலையில், அவருக்கு எதிரான இந்தச் சுவர் விளம்பரங்கள் கவனத்தை ஈர்த்து வருகின்றன. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

’மின்வெட்டு ஏற்படுவதற்கு திமுகவே காரணம்’ – அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு

கோவை விமான நிலையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “மேட்டூர் அணையை பொறுத்தவரை நீர்பிடிப்பு பகுதிகளில் மழைக்குறைவாக இருக்கிறது. தண்ணீர் ... மேலும் பார்க்க

மநீம: `தேர்தல் முடிவுகளை தாங்கிக்கொள்ள முடியாமல் பழிகளைச் சுமத்திச் செல்கின்றனர்' - முரளி அப்பாஸ்

மக்கள் நீதி மய்யத்திலிருந்து சில மாநில நிர்வாகிகள் விலகியுள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முரளி அப்பாஸ், இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.அப்போது அவர், “தமிழகத்தில் தற்போது கட்ச... மேலும் பார்க்க

தர்மஸ்தலா கோயில் விவகாரம்: `இரண்டு நாள்களில் நானே நேரில் சொல்கிறேன்' - நடிகர் பிரகாஷ் ராஜ் விளக்கம்!

கர்நாடகா தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ளது தர்மஸ்தலா மஞ்சுநாத சுவாமி கோயில். "இந்தக் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் 1995-ம் ஆண்டிலிருந்து 2014-ம் ஆண்டு வரை, பல பெண்கள் மற்றும் மாணவிகளின் உடல்களை அடக்... மேலும் பார்க்க

`தவெக அரசு மக்களுக்கு விரோதமாகச் செயல்பட்டால், வீதியில் இறங்கிப் போராடுவோம்!' - சி.பி.எம் பேபி

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்று, தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையை உறுதி செ... மேலும் பார்க்க

'அமெரிக்கா தான் இந்தியாவை ரஷ்ய எண்ணெயை வாங்க சொன்னது; இங்கே நடிக்க வேண்டாம்'- ஜெய்சங்கர் 'நச்' பதில்

தற்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பின்லாந்து பயணத்தில் இருக்கிறார். பின்லாந்தில் நடந்த குழு விவாதத்தில் பத்திரிகையாளர் ஒருவர் ஜெய்சங்கரிடம், 'இந்தியா ரஷ்யாவிடம் அதிகமாக பரிவு காட்டுக... மேலும் பார்க்க