செய்திகள் :

LSG: கேப்டன் பதவியில் இருந்து விலகிய ரிஷப்; லக்னோ அணி வெளியிட்ட அறிவிப்பு என்ன?

post image

லக்னோ அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரிஷப் பண்ட் விலகி இருக்கிறார். இதனை அணி நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

ஐபிஎல் தொடர் இறுதிகட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்தத் தொடரில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ அணி மொத்தம் 14 போட்டிகளில் விளையாடியது.

lsg team
lsg team

இதில் 4 போட்டிகளில் மட்டுமே பெற்ற அந்த அணி, 10 போட்டிகளில் தோல்வியை தழுவியது. இதனால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் தொடரை விட்டு வெளியேறியது.

ரிஷப் பண்ட்டின் பேட்டிங்கும் சிறப்பாக இல்லை. இதனால் ரிஷப் பண்ட்டின் கேப்டன்சி மற்றும் தனிப்பட்ட ஆட்டம் மீது விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் தான் லக்னோ அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரிஷப் பண்ட் விலகி இருக்கிறார். இதனை அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

இதுதொடர்பாக அணி நிர்வாகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், " லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ரிஷப் பந்த் தனது கேப்டன் பொறுப்பில் இருந்து தன்னை விடுவிக்குமாறு முறைப்படி கோரிக்கை விடுத்துள்ளதையும், அவரது கோரிக்கையை அணி நிர்வாகம் உடனடியாக ஏற்றுக்கொண்டுள்ளதையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க விரும்புகிறது.

லக்னோ அணி நிர்வாகம்
லக்னோ அணி நிர்வாகம்

ரிஷப் இந்தக் கோரிக்கையுடன் அணி நிர்வாகத்தை அணுகினார், அதை நாங்கள் மரியாதையுடன் ஏற்றுக்கொண்டோம். இத்தகைய முடிவுகள் எளிதல்ல. கேப்டனாக ரிஷப் அளித்த பங்களிப்பிற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம்.

அணியை மீண்டும் கட்டமைப்பதிலும் மற்றும் மறுசீரமைப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறோம்" என லக்னோ அணியின் கிரிக்கெட் இயக்குநர் டாம் மூடி தெரிவித்திருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அஸ்தமனமான சன்ரைசர்ஸ்; சம்பவத்தை நிகழ்த்திய சூர்யவன்சி! - எப்படி வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ்?

எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸை வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ் குவாலிஃபயர் - 2-க்கு முன்னேறியிருக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸுக்கு இடையிலான அந்தப் போட்டிதான் இறுதிச் சுற்றில் ஆர்... மேலும் பார்க்க

RR vs SRH: "சூரியவன்ஷியுடன் உண்மையில் அதிகமாக எதுவும் பேச மாட்டோம்!" - ரியான் பராக்

நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் vs ஹைதராபாத் போட்டியில், 47 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்று குவாலிஃபையர் 2-ல் குஜராத் அணியை எதிர்கொள்ள உள்ளது. நடந்து முடிந்த இரண்டு ப்ளே ஆஃப் போட்டிகளிலும... மேலும் பார்க்க

RR VS SRH: "சாதனைகளை விட கோப்பையை வெல்வதே என் ஒரே இலக்கு!" - ஆட்டநாயகன் வைபவ் சூர்யவன்ஷி

ஐபிஎல் 2026-ன் நேற்றைய (மே 27) விறுவிறுப்பான எலிமினேட்டர் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. தோற்றால் தொடரை விட்டு வெளியேற வேண்டும் என்றஇந்த இக்கட்டான போட்டியில்,... மேலும் பார்க்க

RR VS SRH: "கொஞ்சம் முயன்றிருந்தால் முதல் 2 இடங்களுக்குள் வந்திருக்கலாம்" - கம்மின்ஸ் வருத்தம்

ஐபிஎல் 2026 நேற்றைய (மே 27) தொடரின் முக்கியமான எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி, குவாலிபையர் 1 போட்டியில் தோல்வி ... மேலும் பார்க்க

RCB-யின் 254 ரன்கள்: `இது ஒரு முட்டாள்தனமான கேள்வி!’ - பத்திரிகையாளரிடம் சீறிய கிளென் பிலிப்ஸ்

ஐபிஎல் 2026 தொடரின் குவாலிஃபயர் 1 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் படுதோல்வி அடைந்தது. போட்டிக்குப் பிறகான செய்தியாளர் சந்திப்பில், குஜராத் அணியின் வீரர் கிளென் பி... மேலும் பார்க்க

குவாலிபையர் 1: 'எங்கள் அணியின் பலம் அதுதான்; குஜராத் அணியை..!'- ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார்

ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. ப்ளே ஆஃப் சுற்றுக்கு நடப்பு சாம்பியனான ஆர்.சி.பி, குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய நான்கு அணிகள் தகுதி பெற்றிருக்கின்றன.... மேலும் பார்க்க