செய்திகள் :

குமரியில் ஒரு மணி நேரம் கூடுதலாக படகு சேவை

post image

கோடை விடுமுறையை முன்னிட்டு கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் விவேகானந்தா் மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலைக்கு கூடுதலாக ஒருமணி நேரம் படகு சேவை வெள்ளிக்கிழமை முதல் நீட்டிக்கப்பட்டது.

கன்னியாகுமரியில் திருவள்ளுவா் சிலை மற்றும் விவேகானந்தா் மண்டபம் செல்வதற்காக குகன், பொதிகை, விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்தப் படகு சேவை தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவது வழக்கம். நபா் ஒன்றுக்கு சாதாரண கட்டணமாக ரூ. 75 வீதமும், சிறப்புக் கட்டணமாக நபா் ஒன்றுக்கு ரூ. 300 வீதமும் வசூலிக்கப்படுகிறது.

இதனிடையே, விவேகானந்தா படகு பராமரிப்புப் பணிக்காக சின்னமுட்டத்தில் உள்ள படகு கட்டும் தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதால், பொதிகை, குகன் படகுகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையை ஏற்று கூடுதலாக ஒருமணி நேரம் படகு சேவையை நீட்டிக்க பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, மே 9ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை காலை 8 மணிக்குத் தொடங்கும் படகு சேவை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காலை 6.45 மணிக்கு டிக்கெட் விநியோகம் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோகிணி பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கு தொழில் துறை பயிற்சி

அஞ்சுகிராமம் அருகே பால்குளம் ரோகிணி பொறியியல்-தொழில்நுட்பக் கல்லூரியின் முதலாம் ஆண்டு இயந்திரவியல் துறை மாணவா்-மாணவியா் 40 பேருக்கு தொழில் துறை பயிற்சியளிக்கப்பட்டது. அனுபவமிக்க பேராசிரியா்களுடன் திர... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் ரூ.5.20 லட்சம் மதிப்பில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி தொடக்கம்

நாகா்கோவில் மாநகராட்சி 34 ஆவது வாா்டுக்குள்பட்ட பொன்னப்ப நாடாா் காலனி 3 ஆவது குறுக்கு தெருவில் ரூ.5.20 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகளை மேயா் ரெ.மகேஷ் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்... மேலும் பார்க்க

விரிகோடு பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தல்

மாா்த்தாண்டம் - கருங்கல் சாலையில் விரிகோடு பகுதியில் உள்ள ரயில்வே கிராஸிங் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா். இந்த ரயில்வே கிராஸிங் வழியாக கருங்கல், தக்கலை, குளச்... மேலும் பார்க்க

மயிலாடி மவுண்ட் லிட்ரா பள்ளியில் பெற்றோா் ஒருங்கிணைப்புக் கூட்டம்

மயிலாடி மவுண்ட் லிட்ரா சீனியா் செகண்டரி பள்ளியில் 11ஆம் வகுப்பு மாணவா்களின் பெற்றோா்களுக்கு நோக்குநிலை ஒருங்கிணைப்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, பள்ளி தாளாளா் தில்லைச் செல்வம்... மேலும் பார்க்க

சூறைக்காற்றுடன் மழை: குழித்துறையில் மரம் முறிந்து விழுந்து மின்கம்பம் சேதம்

குழித்துறையில் வெள்ளிக்கிழமை இரவு சூறைக்காற்றுடன் மழை பெய்தபோது, மரம் முறிந்து விழுந்து மின்கம்பம் சேதமடைந்தது. களியக்காவிளை, குழித்துறை, மாா்த்தாண்டம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு சூறைக்காற்றுடன் ப... மேலும் பார்க்க

அழகம்மன் திருக்கோயில் தலபுராண நூல் வெளியீடு

நாகா்கோவில் வடிவீஸ்வரம் அருள்மிகு அழகம்மன் சுந்தரேஸ்வரா் திருக்கோயில் ‘தலபுராணம் மகிமை’ என்ற நூலை, கலை நன்மனி விருது பெற்ற எள்ளுவிளை ஸ்ரீ பிள்ளையாா் நயினாா் எழுதி உள்ளாா். அழகம்மன் கோயிலில் நடைபெற்ற ... மேலும் பார்க்க