செய்திகள் :

"திருமா அண்ணன் கண்ணிலிருந்து கண்ணீர் மட்டும்தான் வரவில்லை" - திமுக கூட்டணியைச் சீண்டிய ஆதவ் அர்ஜுனா

post image

தவெக சார்பில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் மரிய வில்சன் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இதைத் தொடர்ந்து தவெக சார்பில் தொகுதியில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டிருந்தது. பொதுக்கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா திமுக கூட்டணியைக் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.

பொதுக்கூட்டம்
பொதுக்கூட்டம்

ஆதவ் பேசியதாவது, ''திமுக கூட்டணியில் மதிமுக சுய கௌரவத்தை இழந்துவிட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இன்று வரைக்கு சீட் வாங்க முடியாமல் கதறிக் கொண்டிருக்கிறது.

ஜவாஹிருல்லாவின் கட்சியை திமுக அழித்துவிட்டது. திமுகவுக்கு தலித்துகளும் சிறுபான்மையினரும் அதிகாரத்துக்கு வருவது பிடிக்காது.

இவர்களை நம்பாதீர்கள் எனத் திருமா அண்ணனிடம் எவ்வளவோ சொன்னேன். 'நம்மை வளரவிட மறுக்கிறார்கள். நாம் எந்த விதத்திலும் வலிமை பெறக்கூடாது என நினைக்கிறார்கள்' என மனம் வருந்தி திருமா அண்ணன் பேசியிருக்கிறார்.

திருமா அண்ணன் கண்ணிலிருந்து கண்ணீர் மட்டும்தான் வரவில்லை. வேங்கைவயல் சம்பவத்தில் திருமா திமுக-வுக்கு எவ்வளவோ துணையாக இருந்தார். ஆனால், இப்போது 5 தொகுதியைக் கொடுத்து, 'இருந்தால் இரு போனால் போ' என்கின்றனர்.

ஆதவ்
ஆதவ்

திமுகவின் பண்ணையார்த்தனம்தான் இது. விசிகவை அழிக்க திமுக தயாராகிவிட்டது. திருமா அண்ணனின் வலி எங்களின் வலி. திருமாவின் கண்ணீருக்காகவே ஸ்டாலினுக்கு ஒரு முடிவை மக்கள் கொடுப்பார்கள்' என்றார்.

'100 பேருக்கு இலவச கல்வி; வீடு தேடி ரேஷன்' - ஆர்.கே.நகர் தவெக வேட்பாளரின் 'அடேங்கப்பா' வாக்குறுதிகள்

தவெக சார்பில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் சத்யபாமா கல்வி குழுமத்தைச் சேர்ந்த மரிய வில்சன் போட்டியிடுகிறார். இந்நிலையில், தொகுதியில் தேர்தல் பணிமனை அலுவலகம் திறக்கும் விழாவும் பொதுக்கூட்டமும் நடந்திர... மேலும் பார்க்க

கரூரில் 'ஜனநாயகன்' பட ஷூட்டிங் நடத்தினோமா? - ஆதவ் அர்ஜுனா விளக்கம்

தவெக சார்பில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் மரிய வில்சன் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இதைத் தொடர்ந்து தவெக சார்பில் தொகுதியில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டிருந்தது. பொதுக்கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா... மேலும் பார்க்க

தேர்தல் விதியை மீறி பரிசுப்பொருள்: வேலூர் மேயருக்கு போலீஸ் சம்மன்; திமுக எம்எல்ஏ-வும் சிக்குகிறாரா?

வேலூர் சத்துவாச்சாரியில், கடந்த 19-ம் தேதி, தேர்தல் நடத்தை விதிகளை மீறி பரிசுப்பொருள் வழங்கியதாக, வேலூர் மாநகராட்சி தி.மு.க மேயர் சுஜாதா உள்ளிட்ட மூன்று பேர் மீது `பி.என்.எஸ் 173 - தேர்தல்கள் தொடர்பான... மேலும் பார்க்க

புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமிக்கு ரூ.35 லட்சம் கடன்; சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

வேட்பு மனுவுடன் தாக்கல் செய்யப்பட்டிருந்த பிரமாணப் பத்திரத்தில் இருந்த வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அதன்படி முதல்வர் ரங்கசாமிக்குத் தற்போதைய கையிருப்புத் தொகை ரூ.33,339/-.... மேலும் பார்க்க

"நான் கும்பிட்டா முகத்தைத் திருப்பிடுவாங்க மம்தா பானர்ஜி" - கொல்கத்தா ஐஏஎஸ் அதிகாரி முருகன் பேட்டி

கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் மத்திய அரசின் தேயிலை வாரியத்தில் டெபுடி சேர் பெர்சனாகப் பணிபுரிந்து வருபவர் சி.முருகன் ஐ.ஏ.எஸ்.சட்டசபைத் தேர்தல் நடைபெறவிருக்கும் மேற்கு வங்கத்தில் அரசி... மேலும் பார்க்க

'8 பெண்களின் பகிரமுடியா அந்தரங்க வீடியோக்கள், வாட்ஸ்அப் சாட்கள்' - மதூர் சத்யா சிக்கியது எப்படி?

சிபிஐ கட்சியைச் சேர்ந்தவரும் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொண்டு பிரபலமானவருமான மதூர் சத்யாவின் மீது கொடுக்கப்பட்ட பாலியல் புகாரில் நேற்று முன்தினம் காவல்துறையினர் அவரைக் கைது செய்திருந்தனர். மதூர்... மேலும் பார்க்க