செய்திகள் :

குமரி: மூதாட்டியை கொலை செய்து தீவைத்து எரித்த இளைஞர் - தற்கொலை போன்று காட்ட முயன்றது அம்பலம்

post image

கன்னியாகுமரி மாவட்டம் ​நாகர்கோவில் வடிவீஸ்வரம் தேரடியை சேர்ந்தவர் ஐயப்பன். இவரது மனைவி சின்னம்மாள் (77). இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. இதனால் சின்னம்மாள் வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று பிற்பகல் ஒரு மணி அளவில் தாய் சின்னம்மாளை பார்க்க மகள் வனஜா வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது வீட்டுக்குள் சின்னம்மாள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் கோட்டார் போலீஸுக்கு தகவல் தெரிவித்தார். போலீஸார் நடத்திய விசாரணையில் சின்னம்மாளின் பின்தலையில் பலத்த காயம் இருந்தது. அவரது கை மற்றும் தலைமுடி எரிக்கப்பட்டு ஆடைகள் கலைந்து மிகக் கொடூரமான முறையில் அவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

சின்னம்மாள் கழுத்தில் அணிந்திருந்த கம்மல் உள்ளிட்ட 15 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. மேலும், பீரோவில் வைத்திருந்த நகைகளும், 15 ஆயிரம் ரூபாயும் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட சின்னம்மாள் சடலத்தை போலீஸார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

கொலை செய்யப்பட்ட மூதாட்டி சின்னம்மாள்

சின்னம்மாள் வீட்டின் அருகே உள்ள சி.சி.டி.வி கேமராவை ஆய்வு செய்ததில் ஹெல்மெட் அணிந்த ஒருவர் வீட்டுக்குள் வந்து வெளியே செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. எனவே அந்த நபர்தான் இந்த கொலை செய்திருக்க வேண்டும் என்று போலீஸார் சந்தேகித்தனர். கொலை நடந்த வீட்டில் எஸ்.பி ஸ்டாலின் விசாரணை நடத்தினார். மூதாட்டி சின்னம்மாள் நீண்ட நாட்களாக அரிசி போன்ற ரேஷன் பொருட்கள் வாங்கி விற்பனை செய்து வந்திருக்கிறார். இதனால் மூதாட்டி வீட்டில் எவ்வளவு பணம், நகை இருக்கும் என்று நன்கு தெரிந்த நபர் தான் இந்த கொலையை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை முடுக்கிவிட்டனர்.

கைது செய்யப்பட்ட வேல்ராஜ் என்ற விக்னேஷ்

இந்த நிலையில் சின்னம்மாளுக்கு உதவியாக வேலைகள் செய்துவந்த விருதுநகரைச் சேர்ந்த வேல்ராஜ் என்ற விக்னேஷ்(33) என்பவரை போலீஸார் இன்று கைது செய்தனர். நாகர்கோவிலில் தங்கியிருந்த வேல்ராஜுக்கு சின்னம்மாளின் நகை, பணம் ஆகியவை எங்கே உள்ளது என்பது நன்கு தெரிந்திருக்கிறது. இதையடுத்து சின்னம்மாளை கொலை செய்து நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்த வேல்ராஜ் பின்னர் அவர் தற்கொலை செய்துகொண்டதுபோன்று காட்டுவதற்காக அவரது உடலுக்கு தீ வைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். ஆனால், சி.சி.டி.வி கேமரா மூலம் வேல்ராஜ் போலீஸில் சிக்கிக்கொண்டார்.

`இன்டர்னல் மார்க் போடமாட்டேன்; ஏன் பயப்படுற?' - மாணவி கர்ப்பத்தால் சிக்கிய புதுச்சேரி பள்ளி ஆசிரியர்

புதுச்சேரியில் செயல்பட்டு வரும் அந்தப் பிரபலமான பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார் மாணவி ரேஷ்மாவுக்கு (மாணவியின் பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மாதவிடாய் சுழற்ச... மேலும் பார்க்க

"இனி யார் என்னை அம்மானு கூப்டுவா?" - போனில் பேசிய படி கார் ஓட்டிய பெண்ணால் பலியான 8 வயது சிறுவன்

மும்பை பாந்த்ரா பகுதி எப்போதும் பிஸியாக இருக்கும். இங்கு பாலிவுட் பிரபலங்கள் மற்றும் கோடீஸ்வரர்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். பாந்த்ரா மேற்கில் உள்ள ஜிஜமாதா கார்டனுக்கு அருகிலுள்ள செயின்ட் ஜான் பாப்டி... மேலும் பார்க்க

நெல்லை: இளைஞர் தலை துண்டித்துக் கொலை; விசாரணையில் பகீர்; போலீஸ் குவிப்பால் பதற்றம்; நடந்தது என்ன?

நெல்லை, மணிமூர்த்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர். பெயிண்ட் அடிக்கும் தொழிலாளியான இவர், கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு விஜயலெட்சுமி என்ற மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்ட... மேலும் பார்க்க

லிப்ட் கேட்ட 16 வயது மாணவிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை; நள்ளிரவில் ஓடும் பஸ்ஸில் நடந்த கொடூரம்

டெல்லி காஷ்மேரா கேட் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் 16 வயது பெண் ஒருவர் அந்த வழியாக வந்த பஸ் ஒன்றை மறித்து லிப்ட் கேட்டார். நொய்டாவிற்குச் செல்லுமா என்று அப்பெண் கேட்டார். பஸ்ஸில் இருந்தவர்களும் பஸ் நொய... மேலும் பார்க்க

மதுரை: 'என் அம்மா ஏன் கைகட்டி நிற்க வேண்டும்'- மாணவி தற்கொலை; தலைமையாசிரியை மீது SC/ST Act-ல் வழக்கு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரைச் சேர்ந்த தம்பதியின் 16 வயது மகள், 10-ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்று பூச்சிப்பட்டியில் உள்ள அரசு கள்ளர் பள்ளியில் பிளஸ் 1 சேர்ந்துள்ளார். சில... மேலும் பார்க்க

`கஞ்சா நெட்வொர்க்' - ஒடிசாவுக்கே சென்று முக்கிய குற்றவாளியைத் தட்டித்தூக்கிய வேலூர் போலீஸ்!

வேலூர் மாவட்டம், காட்பாடி ரயில் நிலையம் அருகே கடந்த 13-ம் தேதி சந்தேகத்திற்கிடமாக சிக்கிய இருவரிடம் வேலூர் மதுவிலக்குப் பிரிவு போலீஸார் சோதனை நடத்தியதில், அவர்களிடமிருந்து 14 கிலோ கஞ்சா சிக்கியது. விச... மேலும் பார்க்க