செய்திகள் :

லிப்ட் கேட்ட 16 வயது மாணவிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை; நள்ளிரவில் ஓடும் பஸ்ஸில் நடந்த கொடூரம்

post image

டெல்லி காஷ்மேரா கேட் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் 16 வயது பெண் ஒருவர் அந்த வழியாக வந்த பஸ் ஒன்றை மறித்து லிப்ட் கேட்டார்.

நொய்டாவிற்குச் செல்லுமா என்று அப்பெண் கேட்டார். பஸ்ஸில் இருந்தவர்களும் பஸ் நொய்டாதான் செல்கிறது என்று கூறி அப்பெண்ணை பஸ்ஸில் ஏற்றிக்கொண்டனர். பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில் பஸ் டிரைவரும், நடத்துனரும் சேர்ந்து மாறி மாறி அப்பெண்ணைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்.

பஸ்ஸை 47 கிலோ தூரம் ஓட்டிச்சென்று இந்தக் காரியத்தைச் செய்துள்ளனர். பஸ் சிலீப்பர் வசதி கொண்டது ஆகும். எனவே ஜன்னல் திரைச்சீலையால் மூடப்பட்டு இருந்தது. இதனால் உள்ளே நடப்பது எதுவும் வெளியில் தெரியாது.

இரண்டு பேரும் பாலியல் வன்கொடுமை செய்த பிறகு அப்பெண்ணை சாலையோரம் இறக்கிவிட்டுவிட்டு சென்றுவிட்டனர். பாதிக்கப்பட்ட பெண் உடனே அருகில் இருந்த போலீஸ் நிலையத்தில் சென்று நடந்த சம்பவத்தைக் கூறி புகார் செய்தார்.

கைது
கைது

அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அப்பெண் உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், வீட்டில் இருந்தவர்களுடன் சண்டைபோட்டுக்கொண்டு வீட்டில் சொல்லாமல் நொய்டாவில் உள்ள தனது உறவினரைப் பார்க்க வந்துள்ளார்.

வரும்போது கனமழை பெய்து கொண்டிருந்ததால் தவறுதலாக டெல்லி பாரி சோக் பகுதியில் இரவு நேரத்தில் இறங்கி இருந்தார். அந்த நேரத்தில் லிப்ட் கேட்டபோது அந்த வழியாக வந்த பஸ்சில் இருந்த இருவர் லிப்ட் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பஸ்ஸை அதில் இருந்தவர்கள் பழுதுபார்த்துவிட்டு திமர்பூர் என்ற இடத்திற்கு டிரைவரும், நடத்துனரும் எடுத்து சென்று கொண்டிருந்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர்.

மாணவி ஊரில் 11வது வகுப்பு படித்துக்கொண்டிருந்தார். கைது செய்யப்பட்டவர்கள் பெயர் குல்தீப் மற்றும் சந்தீப் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

மதுரை: 'என் அம்மா ஏன் கைகட்டி நிற்க வேண்டும்'- மாணவி தற்கொலை; தலைமையாசிரியை மீது SC/ST Act-ல் வழக்கு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரைச் சேர்ந்த தம்பதியின் 16 வயது மகள், 10-ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்று பூச்சிப்பட்டியில் உள்ள அரசு கள்ளர் பள்ளியில் பிளஸ் 1 சேர்ந்துள்ளார். சில... மேலும் பார்க்க

`கஞ்சா நெட்வொர்க்' - ஒடிசாவுக்கே சென்று முக்கிய குற்றவாளியைத் தட்டித்தூக்கிய வேலூர் போலீஸ்!

வேலூர் மாவட்டம், காட்பாடி ரயில் நிலையம் அருகே கடந்த 13-ம் தேதி சந்தேகத்திற்கிடமாக சிக்கிய இருவரிடம் வேலூர் மதுவிலக்குப் பிரிவு போலீஸார் சோதனை நடத்தியதில், அவர்களிடமிருந்து 14 கிலோ கஞ்சா சிக்கியது. விச... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: கஞ்சா வழக்குகளில் தொடர்ந்து சிக்கிய பெண்; குண்டர் சட்டத்தைப் பிரயோகித்த கலெக்டர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய பெண் 'Drug Offender' பிரிவின் கீழ் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். கஞ்சா (ஃபைல் படம்)கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி அன்று கிருஷ்ணகிரி ... மேலும் பார்க்க

சிறையில் அடைக்க கொண்டு செல்லப்பட்டவர் 2வது முறையாக தப்பி ஓட்டம்; போலீஸாரின் அலட்சியம்தான் காரணமா?

தூத்துக்குடி மாப்பிளையூரணியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரின்மகன் நிரஞ்சன். கடந்த பிப்ரவரி மாதம் 12-ந்தேதி விளாத்திகுளம் மீனாட்சிபுரத்தில் அடிதடி பிரச்னை தொடர்பாக விளாத்திகுளம் காவல் நிலையம் போலீஸார் ... மேலும் பார்க்க

திண்டுக்கல்: பால் வேன் மோதியதால் 4 சிறுமிகளுக்கு நேர்ந்த சோகம்

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகேயுள்ள கொல்லப்பட்டி சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த தம்பதி பழனிச்சாமி -அஞ்சம்மாள். இவர்கள், கணவாய் மேடு பகுதியில் சாலையோரமாக ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார்கள்.இவர்களின் ... மேலும் பார்க்க

கும்பகோணம்: காதலிக்க மறுத்த பள்ளி ஆசிரியை; பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்ட கேரள ஜிம் பயிற்சியாளர்

கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டம், மதுர் பகுதியைச் சேர்ந்தவர் சுமன்ராஜ் (36). ஜிம்மில் பயிற்சியாளராக உள்ளார். சுமன்ராஜுக்குத் திருமணம் ஆகி ஹித்தாச்சி என்ற மனைவியும் 7 வயதில் பெண் குழந்தையும், ஒன்பது மா... மேலும் பார்க்க