செய்திகள் :

கும்பகோணம்: காரில் ஆயுதங்கள் வைத்திருந்த விவகாரம்; பாஜக நிர்வாகியைக் கைதுசெய்த போலீஸ்!

post image

கும்பகோணம், சத்யம் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் வேதா என்கிற வேதச்செல்வம் (52). இவர் பாஜக-வில் தஞ்சாவூர் வடக்கு மாவட்டப் பொதுச் செயலாளராக இருக்கிறார். இந்நிலையில், திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் நேற்று நடைபெற்ற பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் பிறந்தநாள் விழாவிற்கு சென்று விட்டு, மீண்டும் இரவு வேதச்செல்வம் காரில், கும்பகோணம் திரும்பியுள்ளார்.

கைது
கைது

அப்போது, கும்பகோணம் நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸார், வேதச்செல்வம் காரை மறித்து சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அப்போது, காரில் ஆயுதங்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது. இது குறித்து கும்பகோணம் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீஸார் வேதச்செல்வத்திடம் விசாரணை நடத்தினர். மேலும் ஆயுதங்கள் மற்றும் காரை பறிமுதல் செய்ததாக சொல்லப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, வேதச்செல்வத்தை கைதுசெய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். காரில் ஆயுதங்கள் வைத்திருந்ததாக பாஜக நிர்வாகி கைதுசெய்யப்பட்ட சம்பவம், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து சிலரிடம் பேசினோம். ``ஆறு மாதங்களுக்கு முன்பு மற்றொரு அரசியல் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவரை ஆயுதங்கள் வைத்திருந்ததாக போலீஸார் கைது செய்தனர்.

கும்பகோணம்

அந்த நிர்வாகி மீது கொலை மிரட்டல், வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. அவரிடம் நடத்திய விசாரணையின் போது தன் கூட்டாளி வேதச்செலவ்ம் குறித்து சொல்லி இருக்கிரார். அதன் பேரில் விசாரணை நடத்துவதற்கு கைது செய்துள்ளனர். வேதச்செல்வம் மீதும் புகார்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது" என்றனர்.

'கொள்ளிடம் பாலத்தில் எல்லை மீறும் ஜோடிகள்; முகம் சுளிக்கும் மக்கள்!' - தகாத செயல்களை தடுக்க கோரிக்கை

திருச்சி புறநகரையும், மாநகரையும் இணைக்கும் பாலமாக நேப்பியர் பாலம் போன்று திருச்சி கொள்ளிடம் ஆற்றில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம், கடந்த 2016 -ம் ஆண்டு 88 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மறைந்த ஜெயலலித... மேலும் பார்க்க

மர்மமாக இறந்து கிடந்த சிறுத்தை; யாருக்கும் தெரியாமல் எரித்த வனத்துறையினர் - அதிர்ச்சி பின்னணி

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனச் சரகம், அத்தாணி பிரிவு, மாதையன் கோயில் காப்புக்காடு பகுதியில் சுமார் 3 மாதங்களுக்கு முன்பு சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளது. அதன் உடல் முழுமையாக அழுகி ச... மேலும் பார்க்க

ஜாமீன் கிடைக்க ஐகோர்ட் நீதிபதிக்கு பில்லிசூனியம்; சுடுகாட்டில் நீதிபதி படத்திற்கு பூஜை; 4 பேர் கைது

நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில் பில்லிசூனியத்திற்கு எதிராகச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் எதாவது காரியம் நடக்க வேண்டும் என்றால் அல்லது தனக்கு வேண்டப்படாத நபருக்கு பில்லிசூனியம் வைக... மேலும் பார்க்க

பரமக்குடி: சவடு மண் வியாபாரியிடம் ரூ. 50 ஆயிரம் லஞ்சம்; வருவாய் கோட்டாட்சியர் சிக்கியது எப்படி?

பரமக்குடி அருகே உள்ள செல்லூரைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் பரமக்குடி பகுதியில் சவடு மண் விற்பனை செய்து வருகிறார். இதற்கான அனுமதியினை மாதம் தோறும் பரமக்குடியில் உள்ள வருவாய் கோட்டாட்சியரிடம் பெற வேண்டு... மேலும் பார்க்க

கடந்தமுறை உங்களிடம் ரூ.50 லட்சம் திருடினோம், மீண்டும் வருவோம்: வழக்கறிஞரிடம் ரூ.3.15 கோடி கொள்ளை

ஹரியானா மாநிலம் குருஷேத்ராவை சேர்ந்தவர் பல்வந்த் சிங் வாலியா. மூத்த வழக்கறிஞரான பல்வந்த் சிங் இரவு 9 மணிக்கு தனது நாயை நடைபயிற்சிக்கு வெளியில் அழைத்து சென்றார். வீட்டில் அவரது மனைவி மட்டும் இருந்தார்.... மேலும் பார்க்க

கொலை செய்வதை வீடியோ எடுத்த இளைஞர்கள்; ரத்தம் வடிந்த கத்தியை வாயில் வைத்து செல்ஃபி - கோவை அதிர்ச்சி!

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே உள்ள சுலபம்பாளையம் காமராஜர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் அஸ்வின் (22). இவர் நேற்று முன்தினம் தனது நண்பர் விஷ்ணு (19) என்பவருடன் மது குடித்துள்ளார். பின்னர் இருவரும் சி... மேலும் பார்க்க