செய்திகள் :

கும்பகோணம்: பாமக மாவட்ட செயலாளர் மீது வன்கொடுமை பிரிவில் வழக்கு பதிவு! - பின்னணி என்ன?

post image

கும்பகோணம் அரசு பெண்கள் கல்லூரியில் ஒரு மாணவி 3-ம் ஆண்டு படிக்கிறார். இவருக்கு வயது 20. திருமங்கலக்குடி பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், இவருக்கும் வயது 20. இருவரும் பள்ளி படிக்கும் போதிலிருந்தே பழகி வந்துள்ளனர். பாலகிருஷ்ணன் அந்த மாணவியை காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் மாணவிக்கு மாப்பிள்ளை பார்த்து திருமண நிச்சயம் செய்திருந்தனர்.

ம.க.ஸ்டாலின்

இதையடுத்து கடந்த 17-ம் தேதி கல்லூரிக்கு வந்த மாணவியிடம் பேச வேண்டும் என்ற பாலகிருஷ்ணன் கோவிலுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது வலுக்கட்டாயமாக தாலி கட்ட முயற்சி செய்ததாவும், இதற்கு மாணவி மறுத்ததால் அவரை தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. இது குறித்து மேற்கு காவல் நிலையத்தில் மாணவி மற்றும் உறவினர்கள் புகார் கொடுத்தனர். இது குறித்து விசாரணை நடத்திய போலீஸார் பாலகிருஷ்ணனை கைது செய்தனர்.

இதை தொடர்ந்து மாணவனை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். வலுகட்டாயமாக தாலி கட்டுவதற்கு செய்த முயற்சிக்கு உறுதுணையாக இருந்தவர்களை கண்டறிந்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ம.க-வினர் (ராமதாஸ் அணி) ஆர்ப்பாட்டம் செய்ய போவதாக அறிவித்ததுடன், கும்பகோணம் பகுதியில் போஸ்டரும் ஒட்டினர். இந்நிலையில் வருகிற 27ம் தேதிக்குள் மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் 28ம் தேதி அன்று ஆடுதுறையில் கடையடைப்பு செய்து, ஊர்வலம் சென்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பா.ம.க. தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் ம.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தங்களை அச்சுறுத்தும் விதமாக சமூக வலைதளத்தில் கருத்து மற்றும் பதிவுகளை பா.ம.க. தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர் ம.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாலகிருஷ்ணனின் அம்மா கும்பகோணம் மேற்கு போலீஸாரிடம் புகார் அளித்திருந்தார். அதன் பேரில் போலீஸார் ம.க.ஸ்டாலின் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: 'நாங்க GST ஆபீசர்ஸ்' - முதலாளியிடம் 1.5 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த தொழிலாளரின்‌ பிளான்

சென்னை சவுகார்பேட்டையில் கூரியர் நிறுவனம் ஒன்றை வைத்திருப்பவர் ராவல்சிங்.சென்னை விமான நிலையத்திற்கு இவரது நிறுவனத்திற்கு 1.5 கிலோ‌ எடை கொண்ட தங்க நகைகளின் பார்சல்கள் வந்துள்ளன.அதை எடுத்து வர, தன் கடைய... மேலும் பார்க்க

சென்னை: தனியாக வசித்த முதியவர் கொலை; துணிக்கடை ஊழியரிடம் விசாரணை; என்ன நடந்தது?

சென்னை புரசைவாக்கம், அரசப்பா தெருவில் வசித்து வந்தவர் பாலகிருஷ்ணன் (61). இவர், அண்ணாநகரில் உள்ள துணிக்கடையில் வேலை செய்து வந்தார். இவரின் மனைவி உஷா. 2024-ம் ஆண்டு உடல்நலம் சரியில்லாமல் உஷா இறந்துவிட்ட... மேலும் பார்க்க

பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பா? திருப்பூரில் சிக்கிய 6 வங்கதேசத்தினர்; பின்னணி என்ன?

நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் குறித்த மத்திய உளவுப் பிரிவு போலீஸார் மற்றும் அந்தந்த மாநில உளவுப் பிரிவு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்... மேலும் பார்க்க

சென்னை: பார்சலுக்குள் மண்டை ஓடு, எலும்புகள், விபூதி; அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்; களமிறங்கிய போலீஸ்

சென்னை பாரிமுனை அரண்மனைக்காரன் தெருவில் உள்ள கடைக்கு 20-ம் தேதி ஹெல்மெட் அணிந்து வந்த இளைஞர் ஒருவர், பார்சல் ஒன்றை வாட்ச்மேன் கிருஷ்ணா லால் என்பவரிடம் கொடுத்து, "இது உங்கள் கடையில் வேலை செய்யும் ஸ்ருத... மேலும் பார்க்க

மும்பை: குடும்பத்தோடு ஒரு மாதம் டிஜிட்டல் கைது; முதியவர் ரூ.1.83 கோடியைப் பறிகொடுத்தது எப்படி?

மும்பையில் டிஜிட்டல் முறையில் கைது செய்யப்பட்டு பணம் மோசடி செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. மும்பை மட்டுமல்லாது நாடு முழுவதும் இந்த மோசடிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.இந்த மோசடியை மத்திய விசாரணை... மேலும் பார்க்க

வேடசந்தூர் திமுக ஒன்றியச் செயலாளர் வீராசாமிநாதனுக்கு கத்திக்குத்து; என்ன நடந்தது?

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் திமுக ஒன்றியச் செயலாளராக இருப்பவர் வீராசாமிநாதன். இவர் வேடசந்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.இதற்காக தொகுதியில் உள்ள ஒவ்வொ... மேலும் பார்க்க