செய்திகள் :

கேரளம்: தாயின் உடலை 3 நாள்கள் வீட்டில் வைத்து பூஜை; மனநலம் பாதிக்கப்பட்ட மகனிடம் போலீஸ் விசாரணை

post image

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் குளத்தூப்புழா கூவக்காடு பகுதியில் உள்ள ஆர்.பி.எல் குடியிருப்பில் வசித்து வந்தவர் சின்னத்தாம்மாள் (90). அவரது மகன் கிருஷ்ணசுவாமி (60).

மனைவியைப் பிரிந்து வாழும் மறுவாழ்வுத் தோட்டத் தொழிலாளியான கிருஷ்ணசுவாமியும், அவரது தாய் சின்னத்தாம்மாளும் அந்தக் குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சின்னத்தாம்மாள் கடந்த இரண்டு வாரங்களாக வீட்டிற்கு வெளியே வரவில்லை.

இந்நிலையில், கடந்த மூன்று நாள்களாக வீட்டிலிருந்து தொடர்ச்சியாக ஊதுபத்தி மற்றும் சந்தனத்தின் நறுமணம் வந்து கொண்டிருந்துள்ளது. மேலும், கிருஷ்ணசுவாமியும் வெளியே வராமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த அண்டை வீட்டார், வெள்ளிக்கிழமை இரவு சின்னத்தாம்மாளின் பேத்திக்குத் தகவல் கொடுத்து வரவழைத்தனர்.

வெள்ளிக்கிழமை இரவு சின்னத்தாம்மாளின் பேத்தி வீட்டிற்குச் சென்று பார்த்தபோது அங்கு பாட்டி இறந்த நிலையில் உள்ளதைப் பார்த்தார். இதையடுத்து போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் வீட்டைச் சோதனையிட்டபோது, படுக்கையறையில் துணியால் மூடப்பட்ட நிலையில் சின்னத்தாம்மாள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

மரணம்
மரணம்

அறையின் பல இடங்களில் ஊதுபத்திகள் ஏற்றப்பட்டு, சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டிருந்தன. சின்னத்தாம்மாள் இறந்து சுமார் மூன்று நாள்கள் ஆகியிருக்கலாம் என்றும், ஊதுபத்திகள் மற்றும் சந்தணக்கட்டைகள் தொடர்ந்து எரிக்கப்பட்டதால் துர்நாற்றம் வெளியே தெரியவில்லை என்றும் கருதப்படுகிறது.

இதைத்தொடர்ந்து பிரேதப் பரிசோதனைக்காக அவரது உடல் பாரிப்பள்ளி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து குளத்துப்புழா காவல்துறையினர் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மரணமடைந்த சின்னத்தாம்மாள்
மரணமடைந்த சின்னத்தாம்மாள்

சின்னத்தாம்மாளின் மரணத்தில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றும், இது இயற்கையான மரணமே என்றும் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கிருஷ்ணசுவாமி மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளதால் அவரிடம் விசாரணை நடத்திவிட்டு போலீஸார் விடுவித்தனர்.

சின்னத்தாம்மாளின் இறுதிச்சடங்குகளுக்குப் பிறகு, கிருஷ்ணசுவாமியை மருத்துவமனைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று குளத்துப்புழா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தேனி: புறா பிடித்துத் தருவதாகக் கூட்டிச் சென்று 2 சிறுவர்கள் கொடூரக் கொலை; 19 வயது இளைஞர் கைது

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகேயுள்ள ரங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மகன்கள் ஸ்ரீஹரிஷ் மற்றும் சபரீஷ் 6 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.கடந்த வெள்ளிக்கிழமை மாலை பள்ளி முடிந்... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: ”குடும்பபே சின்னாபின்னமாகிடும்” - புகார் அளித்தவரை மிரட்டிய மருத்துவமனை உரிமையாளர் கைது

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் பகுதி அருகே உள்ள நீலகிரி ஊராட்சியின், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வள்ளியம்மை. இவரது கணவர் ஆர்.எம்.பாஸ்கரன். அதிமுக பிரமுகரான இவர் கடந்த திமுக ஆட்சியின்போது திமுகவில... மேலும் பார்க்க

துப்பாக்கிச் சூட்டால் உயிருக்குப் போராடும் 4 வயது குழந்தை; காஃபி தோட்ட உரிமையாளரின் கொடூரச் செயல்

கூலி சம்பந்தமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் காஃபி தோட்ட உரிமையாளர் தொழிலாளர்களை நோக்கிச் சுட்டதில், 4 வயது குழந்தையின் தலையில் குண்டு பாய்ந்த சம்பவம் சிக்கமகளூரு பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கா... மேலும் பார்க்க

2 வார `டிஜிட்டல்' கைது: போலீஸார் உஷார் செய்த பிறகே ரூ.8 கோடி சைபர் மோசடியை உணர்ந்த 73 வயது முதியவர்

முதியவர்கள் மற்றும் பெண்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து பணம் பறிக்கும் மோசடி சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகிறது. இது போன்ற மோசடியில் ஈடுபடுபவர்கள் தங்களை சி.பி.ஐ அதிகாரிகள் அல்லது அமலாக்கப்பிரிவு... மேலும் பார்க்க

ஹைதராபாத்: `புகார் கூறிய பெண் அதிகாரி என்னுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தவர்...' - உதய்கிருஷ்ணா ஐபிஎஸ்

"என் மீதான குற்றச்சாட்டு பொய்யானது, பாலியல் புகார் கொடுத்த பயிற்சி அரிகாரி என்னுடன் ஏற்கெனவே ரிலேஷன்ஷிப்பில் இருந்தவர்தான்" என்று குற்றம்சாட்டப்பட்ட பயிற்சி ஐ.பி.எஸ் அதிகாரி உயர் நீதிமன்றத்தில் மனு த... மேலும் பார்க்க

பேராசிரியையுடன் நெருக்கம்; போட்டோ, வீடியோவை கணவருக்கு அனுப்பிய பேராசிரியர் - விசாரிக்கும் போலீஸ்!

திருச்சி, திருவெறும்பூர் அருகே தேசிய தொழில்நுட்ப கழகம் இயங்கி வருகிறது. அங்கு வெளிமாவட்டம், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் பேராசிரியரா... மேலும் பார்க்க