செய்திகள் :

கேரளா: பாங்கோடு ராணுவ முகாமில் டிஜே பார்ட்டி; 2 யானை தந்தங்கள் கொள்ளை... விசாரணை நடத்தும் போலீஸ்!

post image

கேரள மாநிலம், திருவனந்தபுரம் பாங்கோட்டில் மெட்ராஸ் ரெஜிமென்ட் மிலிட்டரி கேம்ப் உள்ளது. 24 மணிநேரமும் பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும் இந்த முகாமுக்குள், அனுமதி இல்லாமல் யாரும் நுழையமுடியாது. இங்கு பாதுகாப்பாக வைக்கும்படி 2 யானைக் தந்தங்களை 1992-ம் ஆண்டு அரசு வழங்கியது. அரசு கேட்கும்போது திரும்ப வழங்க வேண்டும் என்ற நிபந்தனையின்பேரில் தந்தங்கள் ஒப்படைக்கப்பட்டன. சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த தந்தங்கள் மெட்ராஸ் ரெஜிமென்ட் ஆபீஸர்ஸ் மெஸ்ஸில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. இதற்கிடையே குடியரசுதின விழாவில் 2-ம் மெட்ராஸ் ரெஜிமென்ட் கரசேனை அதிகாரிக்குப் பாராட்டு (காமாண்டேஷன்) கிடைக்கப் பெற்றதைக் கொண்டாடும் வகையில், கடந்த புதன்கிழமை இரவு டி.ஜே பார்ட்டி நடத்தப்பட்டது. மறுநாள் விடிய விடிய நடைபெற்ற பார்ட்டியின்போது சிலர் இரண்டு யானை தந்தங்களைத் திருடிச் சென்றுள்ளனர். தந்தங்கள் திருடப்பட்ட தகவல் வியாழக்கிழமை காலையில் தெரியவந்ததைத் தொடர்ந்து கேம்ப் வளாகம் முழுவதும் ராணுவம் தேடுதல் வேட்டை நடத்தியும் கிடைக்கவில்லை. இதையடுத்து சிட்டி போலீஸ் கமிஷனர் கார்த்திக்கிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. புதன்கிழமை இரவு கேட்டரிங், டி.ஜே மற்றும் லைட்டிங் அமைக்க வெளியில் இருந்து 19 பேர் வந்திருந்தனர் என்பது தெரியவரவே அவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

யானை தந்தங்கள்

ராணுவ முகாமுக்குள் சென்றுவர பிரதான வாயில் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. வெளிநபர்கள் உள்ளே செல்லும்போதும், வெளியே வரும்போதும் பலத்த சோதனைக்கு பின்பே அனுமதிக்கப்படுவார்கள். வளாகம் முழுவதும் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்படுள்ளன. இவ்வளவு பாதுகாப்புக்கு மத்தியில் யானை தந்தங்கள் கொள்ளையடிக்கப்பட்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம் ஆபீஸர்ஸ் மெஸ்ஸில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லை என்பதால் திருடியவர்களைக் கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

யானை தந்தங்கள் திருடப்பட்ட பாங்கோடு மிலிட்டரி கேம்ப்

இரண்டு யானை தந்தங்களும் சுமார் 100 கிலோ எடை இருக்கும் என்பதால் ஒருவராக இந்தக் கொள்ளையில் ஈடுபட்டிருக்கமாட்டார்கள் எனவும், ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து இதைச் செய்திருக்கலாம் எனவும், ராணுவ முகாமுக்குள் இருந்தும் யாராவது அவர்களுக்கு உதவியிருக்கலாம் எனவும் போலீஸார் சந்தேகிக்கின்றனர். தந்தங்கள் திருடப்பட்ட பகுதியில் இருந்து சில கைரேகை பதிவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த பதிவுகளை டி.ஜே பார்ட்டியில் கலந்துகொண்டவர்களின் கைரேகைகளுடன் ஒப்பிட்டுபார்க்கும் பணி நடந்துவருகிறது. கேட்டரிங் பொருட்கள் வந்த வாகனம் மூலம் கடத்தப்பட்டிருக்கலாமா? அல்லது ராணுவ முகாம் வளாகத்தில் எங்காவது மறைத்து வைத்திருக்கலாமா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஒரே வீட்டில் மனைவி, காதலி: பணம் கேட்ட இன்ஸ்டா காதலியை கொன்று செப்டிங் டேங்கில் போட்ட காதலன்!

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள நிஷத்புரா என்ற இடத்தை சேர்ந்தவர் சமீர். இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா என்ற இடத்தை சேர்ந்த ஷியா என்ற பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூ... மேலும் பார்க்க

சிகரெட் வியாபாரியை தாக்கி செல்போன் பறித்த இளைஞர்கள் - 7 கி.மீ விரட்டிப் பிடித்த போலீஸார்!

தூத்துக்குடியில் எஸ்.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தினகரன். சிகரெட் மொத்த வியாபாரியான இவர், மடத்தூர் பகுதியில் உள்ள ஒரு கடையில் சிகரெட் பாக்கெட்டுகளை விற்பனை செய்துவிட்டு, அருகில் உள்ள மற்றொரு கடையில்... மேலும் பார்க்க

துருக்கி: நகைக்கடையில் திருடி விட்டு கழுதையில் ஏறி தப்பிய நபர்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

துருக்கியில் நகைக்கடை ஒன்றில் திருடிவிட்டு ஒருவர் சர்வ சாதாரணமாகத் தனது கழுதையில் ஏறிச்சென்ற சம்பவம் வைரலாகி இருக்கிறது. அங்குள்ள காய்சரி என்ற இடத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.அங்குள்ள நகைக்கடை ஒன்... மேலும் பார்க்க

அமெரிக்கா: இந்திய மாணவர் கலிபோர்னியாவில் மர்ம மரணம்; தூதரகம் சொல்வது என்ன?

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், மாயமான இந்திய மாணவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் சாகேத் ஸ்ரீனிவாசய்யா (22). இவர் கலிபோர்னியா பல்கல... மேலும் பார்க்க

நொய்டா: காதலர் தினத்தில் முடிந்த 15 ஆண்டுக் காதல்; காதலியைச் சுட்டுக்கொன்று தற்கொலை செய்த காதலன்

நொய்டாவில் காதலர் தினத்திற்காகச் சந்தித்துக் கொண்ட ஜோடி காரில் பிணமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நொய்டாவில் கார் ஒன்று அனாதையாக நின்று கொண்டிருந்தது.இது குறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் போல... மேலும் பார்க்க

கரூர்: "ரூ.10,000 இல் ஒரு ரூபாய் குறைந்தாலும் வேலை நடக்காது" - விவசாயியிடம் லஞ்சம் கேட்ட விஏஓ கைது

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பாப்பையம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்துரை. விவசாயியான இவர் தனது விவசாய நிலத்தை பட்டா பெயர் திருத்தம் செய்வதற்காக விண்ணப்பம் செய்திருந்தார்.அந்த வகையில... மேலும் பார்க்க