செய்திகள் :

துருக்கி: நகைக்கடையில் திருடி விட்டு கழுதையில் ஏறி தப்பிய நபர்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

post image

துருக்கியில் நகைக்கடை ஒன்றில் திருடிவிட்டு ஒருவர் சர்வ சாதாரணமாகத் தனது கழுதையில் ஏறிச்சென்ற சம்பவம் வைரலாகி இருக்கிறது. அங்குள்ள காய்சரி என்ற இடத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

அங்குள்ள நகைக்கடை ஒன்றில் இரவு நேரத்தில் மர்ம நபர் ஷட்டரை உடைத்து உள்ளே இருந்த தங்க நகைகளைத் திருடிவிட்டுச் சென்று இருந்தார். இதையடுத்து நகைக்கடை நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, மர்ம நபர் ஒருவர் முகமூடி அணிந்தபடி, போர்க்லிப்ட் எனப்படும் பொருட்களைத் தூக்கப் பயன்படும் வாகனத்தைப் பயன்படுத்தி நகைக்கடை ஷட்டரைத் தூக்கி உள்ளே சென்று திருடும் காட்சி பதிவாகி இருந்தது.

பதிவான காட்சி
பதிவான காட்சி

அந்த நபர் திருடிக்கொண்டு கடைக்குள் இருந்து வெளியில் வந்து சர்வ சாதாரணமாக அங்கு நின்று கொண்டிருந்த தனது கழுதையில் ஏறி வீட்டிற்குச் சென்ற காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

அதன் அடிப்படையில் குற்றவாளியைக் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். குற்றவாளியிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவர் போலீஸாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், சம்பவத்தன்று வீட்டில் நன்றாகக் குடித்துவிட்டு தனது கழுதையில் அருகில் உள்ள நகருக்குச் சென்று கொண்டிருந்தான்.

மேலும் மது அருந்தவேண்டும் என்று நினைத்து அருகில் ஏதாவது மதுபானக்கடை இருக்கிறதா என்று பார்த்துள்ளார். வழியில் போர்க்லிப்ட் வண்டி ஒன்று நின்று கொண்டிருந்தது. உடனே கழுதையில் இருந்து இறங்கி அந்த போர்க்லிப்ட் வண்டியை சாவி இல்லாமல் திருட்டுத்தனமாகத் திறந்து அந்த வண்டியை ஓட்டிச்சென்று அருகில் இருந்த நகைக்கடை கதவை போர்க்லிப்ட் மூலம் திறந்துள்ளார்.

உள்ளே சென்று அங்கு பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்த தங்க நகைகளைத் திருடிக்கொண்டு நகைக்கடையை விட்டு வெளியில் வந்துள்ளார். அங்கு அவரது கழுதை நின்று கொண்டிருந்தது. உடனே அதே கழுதையில் ஏறி சம்பவ இடத்தில் இருந்து தப்பிச்சென்றார்.

அவர் கழுதையில் தப்பிச்சென்ற வீடியோ சமூக வலைத்தளப் பக்கத்தில் வைரலாகி இருக்கிறது. போலீஸார் அத்திருடனைக் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்கா: இந்திய மாணவர் கலிபோர்னியாவில் மர்ம மரணம்; தூதரகம் சொல்வது என்ன?

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், மாயமான இந்திய மாணவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் சாகேத் ஸ்ரீனிவாசய்யா (22). இவர் கலிபோர்னியா பல்கல... மேலும் பார்க்க

நொய்டா: காதலர் தினத்தில் முடிந்த 15 ஆண்டுக் காதல்; காதலியைச் சுட்டுக்கொன்று தற்கொலை செய்த காதலன்

நொய்டாவில் காதலர் தினத்திற்காகச் சந்தித்துக் கொண்ட ஜோடி காரில் பிணமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நொய்டாவில் கார் ஒன்று அனாதையாக நின்று கொண்டிருந்தது.இது குறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் போல... மேலும் பார்க்க

கரூர்: "ரூ.10,000 இல் ஒரு ரூபாய் குறைந்தாலும் வேலை நடக்காது" - விவசாயியிடம் லஞ்சம் கேட்ட விஏஓ கைது

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பாப்பையம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்துரை. விவசாயியான இவர் தனது விவசாய நிலத்தை பட்டா பெயர் திருத்தம் செய்வதற்காக விண்ணப்பம் செய்திருந்தார்.அந்த வகையில... மேலும் பார்க்க

திருமணம் கடந்த உறவு; இடையூறாக இருந்ததாக குழந்தையை சித்ரவதை செய்த தாய் - தருமபுரி அதிர்ச்சி!

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் எழிலரசி, கணவருடன் ஏறட்ட கருத்து வேறுபடு காரணமாக 3 வயது பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார்.கைதுஇந்நிலையில் தருமபுரியைச் சேர்ந்த அய்யப்பன் எ... மேலும் பார்க்க

திருச்சி: அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்; 5 மணி நேரத்தில் மீட்பு - திருச்சி போலீஸ் அதிரடி!

திருச்சி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கடந்த 11-ம் தேதி விக்னேஷ் - சுகன்யா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில், சுகன்யாவிடம் மருத்துவமனைக்கு வந்த பெண் ஒருவர் பேசி பழகி, பி... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: இளைஞர்களைக் குறிவைத்து போதை ஊசிகள் விற்பனை; மூவரைக் கைதுசெய்த போலீஸ்!

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியில் போதை மாத்திரை மற்றும் போதை ஊசி பயன்படுத்துவதோடு அதனை இளைஞர்களை குறிவைத்து சிலர் விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில், குற்... மேலும் பார்க்க