செய்திகள் :

கேரளா: "பாஜக மேயரை பினராயி விஜயன் போனில் அழைத்து வாழ்த்தினாரா?" - முதல்வர் அலுவலகம் சொல்வது என்ன?

post image

கேரள மாநிலத்தில் கடந்த 9 மற்றும் 11-ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.

கடந்த 13-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சியில் மொத்தமுள்ள 101 வார்டுகளில் தேர்தல் நடைபெற்ற 100 வார்டுகளில் பா.ஜ.க 50 வார்டுகளை வென்றது.

இந்த நிலையில் நேற்று நடந்த மேயர் தேர்தலில் பா.ஜ.க-வைச் சேர்ந்த வி.வி.ராஜேஷ் மேயராகப் பதவி ஏற்றுக்கொண்டார். துணை மேயராக பா.ஜ.க-வைச் சேர்ந்த ஆஷா நாத் தேர்வானார். இந்த நிலையில் மேயராகப் பதவியேற்ற பா.ஜ.க-வைச் சேர்ந்த வி.வி.ராஜேஷை கேரள முதல்வர் பினராயி விஜயன் போனில் அழைத்து வாழ்த்து தெரிவித்ததாக செய்திகள் வெளியாயின.

சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன், பா.ஜ.க மேயருக்கு வாழ்த்து தெரிவித்தது குறித்து அரசியல் ரீதியான எதிர்மறையான கருத்துக்கள் எழுந்தன. இதையடுத்து முதல்வர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.

திருவனந்தபுரம் மேயராக பதவியேற்ற பா.ஜ.க-வைச்சேர்ந்த வி.வி.ராஜேஷ்
திருவனந்தபுரம் மேயராக பதவியேற்ற பா.ஜ.க-வைச்சேர்ந்த வி.வி.ராஜேஷ்

இது குறித்து கேரள முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

பா.ஜ.க தலைவர் வி.வி.ராஜேஷ் மேயராகப் பதவியேற்றுக்கொண்டதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்ததாக வெளியான செய்தி தவறானது.

வெள்ளிக்கிழமை காலையில் முதல்வர் பினராயி விஜயனின் தனி உதவியாளரை வி.வி.ராஜேஷ் போனில் அழைத்திருந்தார்.

அப்போது முதல்வர் அருகில் இல்லாத காரணத்தால் பிறகு இணைப்பு வழங்குவதாக உதவியாளர் தெரிவித்தார்.

மேயர் வி.வி.ராஜேஷ், துணை மேயர் ஆஷா நாத்
மேயர் வி.வி.ராஜேஷ், துணை மேயர் ஆஷா நாத்

முதல்வர் வந்த பிறகு வி.வி.ராஜேஷுக்கு போன் கணெக்ட் செய்தார் உதவியாளர். அப்போது பேசிய வி.வி.ராஜேஷ், தான் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகவும், பதவி ஏற்ற பிறகு நேரில் வந்து சந்திப்பதாகவும் தெரிவித்தார்.

'ஆகட்டும், வாழ்த்துகள்' என முதல்வர் பதிலளித்தார். ஆனால், முதல்வர் போனில் அழைத்து வி.வி.ராஜேஷுக்கு வாழ்த்து தெரிவித்ததாக அதன் பின்னர் செய்திகள் வெளியிடப்பட்டன.

அது உண்மைக்குப் புறம்பானதும், தவறான புரிதலை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. எனவே, மீரியாக்கள் செய்தியைத் திருத்தும் என நம்புகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சறுக்கிய தமிழ் வேட்பாளர்கள்; 5 முறை கவுன்சிலராக இருந்த ரவி ராஜா, மாரியம்மாள் தாராவியில் தோல்வி!

மும்பை மாநகராட்சி தேர்தலில் தாராவியில் உள்ள 185வது வார்டில் பா.ஜ.க சார்பாக ரவி ராஜா போட்டியிட்டார். ரவி ராஜா இதற்கு முன்பு 5 முறை காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு மும்பை மாநகராட்சியில் கவுன்சிலராக இருந்... மேலும் பார்க்க

Iran: 9 வயதில் ஈரானிலிருந்து வெளியேற்றம்; ஈரானின் கடைசி ஷாவின் மகளான லெய்லா பஹ்லவியின் சோக கதை!

ஈரானில் தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு மத்தியில், இளவரசர் ரெசா பஹ்லவி மீண்டும் பரபரப்பான செய்தியாக மாறியிருக்கிறார். ஆயத்துல்லா கமேனி தலைமையிலான ஆட்சிக்கு எதிராக ஈரானியர்கள், நாட்டில் மீண்டு... மேலும் பார்க்க

புனே: `பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தும் பயனில்லை' - பவார் குடும்பத்திடமிருந்து கைநழுவிப்போன கோட்டை!

மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த மாநகராட்சி தேர்தலில் கடந்த 2023-ம் ஆண்டு இரண்டாக பிரிந்த தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டும் இணைந்து புனே மற்றும் அதன் அருகில் உள்ள பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சி தேர்த... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா மாநகராட்சி தேர்தலில் எதிர்கட்சிகளுக்கு பெரும் பின்னடைவு: பாஜக-வுக்கு வரலாறு காணாத வெற்றி

மகாராஷ்டிராவில் மும்பை உட்பட 29 மாநகராட்சிகளுக்கு நேற்று நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. மும்பையில் ஏற்கனவே பா.ஜ.கவும், சிவசேனா(ஷிண்டே)வும் இணைந்து ஆட்சியை பிடித்துள்ள நிலையில் மா... மேலும் பார்க்க

சுவாச நோய்களால் 9,211 பேர் உயிரிழப்பு; டெல்லி அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

2024-ஆம் ஆண்டில் மட்டும் சுவாச நோய்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தைக் கடந்திருப்பதாக டெல்லி அரசு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு பொதுமக்களின... மேலும் பார்க்க

கோட்டையை போராடி இழந்த உத்தவ்: ஷிண்டேயுடன் சேர்ந்து மும்பை மாநகராட்சியை கைப்பற்றிய பாஜக!

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் மும்பைதான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மும்பை மாநகராட்சி தேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவு... மேலும் பார்க்க