செய்திகள் :

கேரவனில் நடிகையை வன்கொடுமை செய்ய முயன்ற வழக்கு - கேரளா இயக்குநர் ரஞ்சித் சிறையில் அடைப்பு!

post image

கேரள மாநிலம் கொச்சியில் சினிமா படப்பிடிப்பின்போது கேரவனில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக இளம் நடிகை ஒருவர் இயக்குநர் ரஞ்சித் மீது புகார் தெரிவித்திருந்தார். இதையடுத்து ரஞ்சித் மீது வன்கொடுமை, பாலியல் அத்துமீறல், சிறைவைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

தலைமறைவாக இருந்த ரஞ்சித்தை தொடுபுழாவில் வைத்து கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கைதுசெய்த போலீஸார் அவரை கொச்சிக்கு அழைத்து சென்றனர். நேற்று அவர் நீதிபதியின் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

ரஞ்சித்தை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர் எர்ணாகுளம் சப் ஜெயிலில் அடைக்கப்பட்டார். ரஞ்சித்துக்கு எதிராக ஆதாரங்கள் இருப்பதாகவும், நடிகை கேரவனில் இருந்து இறங்கி ஓடியதை நேரில் பார்த்த சாட்சிகள் உள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ரஞ்சித் தலைமறைவாக இருக்க உதவியவர்களும் வழக்கில் சேர்க்கப்படுவார்கள் என்றும் போலீஸார் தெரிவித்தனர். மேலும், நடிகையின் புகார், வாக்குமூலம் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காளிராஜ் மகேஷ்குமார் தெரிவித்தார்.

பாலியல் வழக்கு
பாலியல் வழக்கு

ரஞ்சித்தை போலீஸாரின் காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்காக நீதிபதியிடம் மனு அளித்தனர். அதே சமயம் ரஞ்சித் தரப்பு ஜாமீன் கோரி மனு அளித்துள்ளது. இந்த இரண்டு மனுக்களையும் எர்ணாகுளம் முதலாவது வகுப்பு நீதித்துறை நடுவர் நீதிமன்றம் சனிக்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உள்ளது. சம்பவத்தன்று படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட உள்ளது. படப்பிடிப்பு தளத்தில் உள்ள சி சி.டி.வி கேமரா காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அதே சமயம் இது தனக்கு எதிரான சதி எனவும், உண்மை வெல்லும் எனவும் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சினிமா இயக்குநர் ரஞ்சித்

பாலியல் புகாரைத் தொடர்ந்து ​​பெப்கா எழுத்தாளர் சங்கத்தில் இருந்தும், இயக்குனர் சங்கத்தில் இருந்தும் ரஞ்சித் நீக்கப்பட்டுள்ளார். ​பாலேரி மாணிக்கம் சினிமா படப்பிடிப்பின்போது பாலியல் தொல்லை செய்ததாக ஒரு பெண் ரஞ்சித்துக்கு எதிராக இதற்கு முன்பு புகார் அளித்திருந்தார். மேலும், மற்றொரு பாலியல் வழக்கும் ரஞ்சித் மீது பதியப்பட்டிருந்தது. அந்த புகார்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதே சமயம், ஆதாரங்கள் கிடைத்ததால்தான் ரஞ்சித் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும், கடும் மன உளைச்சலுக்கு ஆளான நடிகை, கவுன்சிலிங் பெற்ற பின்னரே புகார் அளித்தார் எனவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருணாநிதி, ஜெயலலிதா ராஜினாமா; அதிமுகவின் அசுர பாய்ச்சல், அனுதாப அலையால் வீழ்ந்த திமுக | 1991 ஆடுபுலி

அரசியல் ஆடுபுலி 12புதிதாக கட்சி தொடங்கிய நடிகர் விஜய் சட்டமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடலாமா? என்று அரசியல் விவாதங்கள் நடக்கின்றன. இதற்கு முன்னதாக, இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக... மேலும் பார்க்க

"நீண்ட நாள்களுக்கு முன்பே கட்சித் தலைமைக்குச் சொல்லிவிட்டேன்" - ஊகங்களுக்கு விளக்கமளித்த அண்ணாமலை

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பா.ஜ.க வேட்பாளரின் பட்டியல் நேற்று வெளியானது. அதில் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பெயர் இடம்பெறாதது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது. கோவை சிங்காநல்லூர... மேலும் பார்க்க

மகளிர் இட ஒதுக்கீடு: `சமமான பிரதிநிதித்துவமா அல்லது தேர்தல் வியூகமா?' - விவாதப் பொருளாகும் திட்டம்!

பெண்களுக்கு இட ஒதுக்கீடுநாடாளுமன்றம்மத்திய அரசு ஏப்ரல் 16 முதல் 18 வரை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கிது. தற்போது நடைபெற்று வரும் பட்ஜெட் க... மேலும் பார்க்க

குமரி: 6 வாக்காளர்களுக்காக 125 கி.மீ தூரம் பயணிக்கும் மின்னணு இயந்திரம்! ஏன் தெரியுமா?

தமிழக சட்டசபைக்கான பொதுத்தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடக்கிறது. அனைத்து மாவட்டங்களிலும் வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடுகள், தேர்தல் விழிப்புணர்வு பணிகள், வாக்குப்பதிவு மையங்களில் பணியாளர்களை நியமிக்கும்... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: TMC வேட்பாளர்களுக்கு நெருக்கடி; அடுத்தடுத்து பறக்கும் சம்மன் - கடுமையாக சாடும் மம்தா

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்கு தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தலுக்கான வேட்பாளர்களும் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுவிட்டனர். தற்போது வேட்புமனு தாக்கல் செய்து பிரசாரத்தை மேற்கொள்ளும் நிலையில், திர... மேலும் பார்க்க