செய்திகள் :

கைவிட்ட தாய்... அரவணைத்த பொம்மை; இதயங்களை வென்ற குட்டிக் குரங்கு உணர்த்தும் வாழ்க்கை பாடம்!

post image

ஜப்பானின் சிபா மாகாணத்தில் உள்ள இச்சிகாவா நகர மிருகக்காட்சிசாலையில் கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் 'பஞ்ச்' என்ற ஜப்பானிய மக்காக் குரங்கு குட்டி பிறந்தது. பொதுவாக குரங்கு குட்டிகள் பிறந்தவுடன் தனது தாயின் வயிற்றை இறுகப் பற்றிக்கொண்டு பாதுகாப்பாக உணரும்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக பஞ்ச் பிறந்த சில நாள்களிலேயே அதன் தாய் அந்தக் குட்டியைப் பராமரிக்க மறுத்து கைவிட்டது. தாயின் அரவணைப்பு இல்லாமல் தவித்த குட்டி பஞ்ச், மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகி தவித்தது.

பஞ்ச்-சின் தனிமையைப் போக்க முயன்ற உயிரியல் பூங்கா ஊழியர்கள், அதற்கு ஒரு போர்வையையும், ஒரு பெரிய ஒராங்குட்டான் பொம்மையையும் வழங்கினர். யாரும் எதிர்பார்க்காத வகையில், பஞ்ச் அந்த பொம்மையைத் தனது தாயாகவே கருதி அதனுடன் ஒட்டிக்கொண்டது.

அந்தப் பொம்மையைத் தூக்கிக்கொண்டு அலைவது, அதைக் கட்டிப்பிடித்துக்கொண்டு தூங்குவது என பஞ்ச் காட்டிய அன்பு, சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

தற்போது 7 மாதங்கள் ஆகும் பஞ்ச், அந்த பொம்மையின் துணையுடன் தனது பயத்திலிருந்து மெதுவாக வெளிவரத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, கடந்த சில வாரங்களாக பஞ்ச் தனது பொம்மையைச் சற்று தள்ளி வைத்துவிட்டு, மற்ற குட்டி குரங்குகளுடன் ஓடி விளையாடத் தொடங்கியுள்ளது.

மிருகக்காட்சிசாலை மருத்துவர்கள் கூறுகையில், பஞ்ச் இப்போது பழங்கள் மற்றும் காய்கறிகள் நன்கு உட்கொள்வதாகவும், அதன் உடல் எடை மற்றும் வளர்ச்சி மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, மற்றொரு குரங்கு பஞ்ச்-சின் உடலைச் சுத்தம் செய்வது போன்ற நெகிழ்ச்சியான காட்சிகள் இன்று வெளியாகியுள்ளன. இந்த முன்னேற்றம், பஞ்ச் விரைவில் ஒரு சாதாரண குரங்காக தன் கூட்டத்துடன் இணைந்து வாழும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் செய்தி வைரலானதைத் தொடர்ந்து, ஜப்பானிய மிருகக்காட்சிசாலைக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. பஞ்ச் அந்தப் பொம்மையை விட்டுப் பிரியத் தயாராக இல்லை என்றாலும், அது மெதுவாகத் தன்னிச்சையாக உணவு உண்ணப் பழகி வருகிறது. ஒரு நாள் பஞ்ச் முழுமையாகத் தனது கூட்டத்துடன் இணைந்துவிடும் என்றும், அப்போது அந்தப் பொம்மையின் தேவை அதற்கு இருக்காது என்றும் உயிரியல் பூங்கா ஊழியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்தக் குட்டிக் குரங்கின் கதை, மனிதர்களாகிய நமக்கும் வாழ்க்கையில் பல நேரங்களில் பொருந்திப் போகிறது. நாம் வாழக் கூடாது என்பதற்கு பல நூறு காரணங்கள் இருப்பினும், `வா வாழலாம்' என நம்பிக்கையூட்டும் ஒற்றைக் காரணம் போதும்... நாம் புத்துயிர் பெற!

``எவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது?!’’ - பிரபஞ்சன்

AI மாநாடு: `காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில் சதி' - ராகுல் காந்திக்கு எதிராக கருப்புகொடி காட்டிய பாஜக

எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மீது மும்பை அருகில் உள்ள பீவாண்டியில் ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு இன்று பீவாண்டி கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதில் ர... மேலும் பார்க்க

சூப்பர் சென்னை: தொலைநோக்கு பார்வையாளர்களை ஒன்றிணைத்த அறிமுக சூப்பர் சென்னை மாநாடு

சென்னையின் எதிர்காலத்தை வடிவமைப்பது குறித்த ஒரு நாள் முழுவதும் நடைபெறும் உரையாடலுக்காக தமிழ்நாட்டின் மிகவும் செல்வாக்கு மிக்க கொள்கை வகுப்பாளர்கள், தொழில் தலைவர்கள், தொழில்முனைவோர் மற்றும் நகர்ப்புற த... மேலும் பார்க்க

"பேஸ்புக் காதலனோடு வாழ விரும்புகிறேன்" - சேர்த்து வைத்த கணவன்; உத்தரப்பிரதேசத்தில் நடந்த சுவாரஸ்யம்!

உத்தரப்பிரதேச மாநிலம் சஹரான்பூர் பகுதியைச் சேர்ந்த பீரு என்பவர் முஜாபர் நகரைச் சேர்ந்த சோனி (23) என்ற பெண்ணைக் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கி... மேலும் பார்க்க

பிரியாணி பில்களால் வெளிச்சத்திற்கு வந்த ரூ.70,000 கோடி வரிஏய்ப்பு! - AI ஆய்வில் வெளியான அதிர்ச்சி!

நாடு முழுவதும் உணவக உரிமையாளர்கள் பில்களில் மோசடி செய்து ரூ.70 ஆயிரம் கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்ததை, சமீபத்தில் வருமான வரித்துறை கண்டுபிடித்து இருக்கிறது. இதையடுத்து மேற்கொண்டு அனைத்து உணவகங்கள், ... மேலும் பார்க்க

ரன்வீர் சிங்கிடம் ரூ.10 கோடி கேட்டு அமெரிக்காவிலிருந்து மிரட்டல் - அனுப்பியது பிஷ்னோய் கூட்டாளி!

சமீபத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிற்கு லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தை சேர்ந்த ஹாரி பாக்ஸர் என்பவன் பணம் கேட்டு மிரட்டல் விடுத்திருந்தான். ரன்வீர் சிங்கின் செயலாளருக்கு வாட்ஸ்ஆப்பில் வாய்ஸ் மெசேஜ் ம... மேலும் பார்க்க

`ரூ.70,000 கோடி விற்பனையை மறைத்த பிரியாணி உணவகங்கள்' - ஐதராபாத் கடை ரெய்டு மூலம் அம்பலமான மெகா மோசடி

ஐதராபாத் பிரியானி என்றாலே மிகவும் பிரபலம். நாட்டின் பெரும்பாலான இடங்களில் ஐதராபாத் பிரியானி என்ற பெயரில் அதிக அளவில் பிரியானி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பி... மேலும் பார்க்க