செய்திகள் :

“கொஞ்சம் வெயிட் பண்ணுங்க' ; ராஜினாமா, மெளனம், திடீர் குழப்பம்" - செங்கோட்டையன் ரவுண்டிங்!

post image

அதிமுக-விலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையனை ஆதவ் தரப்பு சந்தித்து பேசி தவெகவில் இணையும் சூழலை ஏற்படுத்தியதாக பனையூர் வட்டாரத்தினர் தகவல் சொல்கின்றனர்.

'தவெகவில் இணைகிறீர்களா?'

இந்நிலையில், நேற்று இரவு கோவையிலிருந்து சென்னை கிளம்பிய போதும் சென்னையில் வந்திறங்கிய போதும் விமான நிலையத்தில், 'தவெகவில் இணைகிறீர்களா?' எனும் கேள்விக்கு எந்த மறுப்பும் தெரிவிக்காமல் மௌனமாக கடந்து சென்றார்.

ஆழ்வார்ப்பேட்டை வீட்டுக்கு வந்து சேர்ந்த செங்கோட்டையன் இன்று காலை 8:30 மணியளவில் இனோவா காரில் வெளியே புறப்பட்டார். மீடியாக்கள் சூழ்ந்திருப்பதை அறிந்த செங்கோட்டையன் அப்படியே யூடர்ன் அடித்து வீட்டுக்கு திரும்பிவிட்டார்.

செங்கோட்டையன்

அடுத்த ஒரு மணி நேரத்தில் பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ் செங்கோட்டையனின் வீட்டுக்கு வந்து சந்தித்தார். வெளியே வந்தவர் செங்கோட்டையன் தவெகவுக்கு செல்லும் மனநிலையில் இருப்பதை உறுதி செய்தார். அடுத்ததாக பெங்களூரு புகழேந்தி வந்தார். செங்கோட்டையனை சந்தித்து சில நிமிடங்கள் பேசியவர், 'அவர் எதுவாக இருந்தாலும் உங்களிடம் கூறிவிட்டுதான் செல்வார்.' என பொதுவாக கூறினார்.

அடுத்த சில நிமிடங்களிலேயே செங்கோட்டையனின் இனோவா கார் தலைமைச் செயலகத்தை நோக்கி செல்ல தயாரானது. செய்தியாளர்கள் சூழ காரில் ஏறிய போதும், 'ராஜினாமா செய்யப்போகிறேன் என்றோ...தவெகவில் இணையப்போகிறேன் என்றோ...' எதையும் கமிட் செய்யவில்லை. கையெடுத்து கும்பிட்டபடி மௌனமாக சென்றுவிட்டார்.

'ஒரு நாள் பொறுங்களேன்...சொல்றேன்...'

செங்கோட்டையனின் அந்த '9393' பேன்சி நம்பர் காரை ஊடகத்தினரின் வண்டிகள் பாலோ செய்தது. பீச் ரோட்டில் செங்கோட்டையனின் வண்டி ஏற, அவர் ஜெ.சமாதிக்கு செல்கிறாரோ எனும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், ஜெ.சமாதியையும் தாண்டி சென்ற செங்கோட்டையனின் கார் தலைமைச் செயலகத்தில் சபாநாயகரின் அறை அருகே இருக்கும் கேட்டில் நுழைந்தது. சபாநாயகர் அறைக்குள் நுழையும் போதும் மைக்குகள் செங்கோட்டையனை துரத்தின. அப்போதும் அவர் எதுவும் பேசவில்லை. அப்பாவுவிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு, 'ஒரு நாள் பொறுங்களேன்...சொல்றேன்...' என சைகையில் ஊடகத்தினரை நோக்கி மெசேஜ் கொடுத்தார்.

செங்கோட்டையன்

அப்பாவு - செங்கோட்டையன் மீட்டிங் கிட்டத்தட்ட 45 நிமிடங்களுக்கு நீண்டது. இடையில் அமைச்சர் சேகர் பாபுவும் அப்பாவு அறைக்கு வந்து செங்கோட்டையனிடம் சில நிமிடங்கள் பேசிச் சென்றார். 45 நிமிடங்களுக்கு பிறகு வெளியே வந்த செங்கோட்டையன், அப்போதும் செய்தியாளர்களிடம் எதுவும் பேசவில்லை. செய்தியாளர்கள் கூட்டதை பிளந்து கொண்டு காரில் ஏறியவரிடம், 'அதிமுக கொடியை இன்னும் கழட்டவில்லையா...' என கேட்டதற்கும் எந்த ரியாக்சனும் இல்லாமல் சென்றார். தலைமைச் செயலகத்திலிருந்து புறப்பட்ட செங்கோட்டையன் எம்.எல்.ஏக்கள் விடுதியில் சில மணி நேரமாக இருக்கிறார்.

செங்கோட்டையன் நாளை விஜய்யை சந்தித்து தவெகவில் இணைவதுதான் திட்டம் என்கின்றனர் ஒரு தரப்பில். இடையில், அதிமுக அதிருப்தியாளர்களை திமுகவில் இணைக்கும் அசைன்மென்டை கையிலெடுத்திருக்கும் சேகர் பாபு உட்பட சிலரும் செங்கோட்டையனை சந்தித்து முக்கியமான சில விஷயங்களை பேசுவதால், செங்கோட்டையன் கடைசி நிமிட குழப்பத்தில் இருப்பதாகவும் தகவல் சொல்கின்றனர். செங்கோட்டையன் எப்போது மௌனம் கலைப்பார்? அப்போது தான் அனைத்து வெட்ட வெளிச்சமாகும்.

மீண்டும் H-1B விசாவிற்கு வந்த சோதனை; ட்ரம்ப் அரசாங்கத்தின் அடுத்த நெருக்கடி என்ன?

வெளிநாட்டினர் அமெரிக்காவிற்குள் அதிகம் குடியேறுவதை தடுப்பதும், அமெரிக்கர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவதும் தான் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ஃபுல் ஃபோக்கஸ். அவர் முன்னெடுத்த தேர்தல் பிராசாரமும் இது தா... மேலும் பார்க்க

விருதுநகர்: `கணக்கீட்டுப் படிவங்கள் வழங்கும் பணி சரியாக நடைபெறவில்லை' - எழுந்த குற்றச்சாட்டு

விருதுநகர் நகராட்சியின் சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் நகர்மன்றத் தலைவர் ஆர்.மாதவன் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் விஜயகுமார், பொறியாளர் எட்வின் பிரைட்ஜோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது நடைபெற்ற ... மேலும் பார்க்க

தலைமைச் செயலகத்தில் செங்கோட்டையன் - எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்!

அதிமுகவில் இருந்து எடப்பாடியால நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெகவில் இணைய இருக்கிறார் என்று தகவல் வெளியான நிலையில் செங்கோட்டையன் தலைமை செயலகம் சென்று தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் அப்பாவுவிடம் தந்திரு... மேலும் பார்க்க

புதுச்சேரி: 8 மணி நேரம் `ரோடு ஷோ’... தவெக தலைவர் விஜய் அனுமதி கேட்ட இடங்கள் என்னென்ன?

தமிழகத்தில் நடைபெற இருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே இருக்கும் நிலையில், வரிந்து கட்டிக்கொண்டு ஆளும் கட்சியும், எதிர்கட்சிகளும் தேர்தல் பணிகளில் இறங்கியிருக்கின்றன. அந்த வ... மேலும் பார்க்க

சீன விமான நிலையத்தில் அருணாச்சலப் பெண் தடுத்து நிறுத்தம்: சீனாவின் பதிலுக்கு இந்தியா கண்டனம்

சீனாவின் நடவடிக்கை"நவம்பர் 21, 2025-ம் தேதியில் நான் சீனாவின் ஷாங்காய் விமான நிலையத்தில் கிட்டத்தட்ட 18 மணிநேரம் தடுத்து நிறுத்தப்பட்டேன். நான் அருணாச்சல பிரதேசத்தில் பிறந்திருப்பதால், என்னுடைய இந்திய... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: `குப்பை கிடங்கில் முறைகேடு வழக்கு' - முன்னாள் ஆணையர் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு

தஞ்சாவூர் மாநகராட்சியின் முன்னாள் ஆணையர் சரவணக்குமார். இவர் தஞ்சாவூரில் பணியாற்றிய போது மாநகராட்சிக்கு சொந்தமான பல கோடி மதிப்புடைய இடத்தை தனி நபர்களிடம் இருந்து மீட்டார். துணிச்சலான இவரது செயல் அப்போத... மேலும் பார்க்க