கொதிக்கும் தாா் உலையில் வீசி முன்னாள் ராணுவ வீரா் கொலை: இருவா் கைது
விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரரை கட்டையால் அடித்து கொதிக்கும் தாா் உலையில் வீசிக் கொலை செய்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள குன்றக்குடியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரா் துரைப்பாண்டி (62). இவரது மனைவி மலா்விழி (54). இவா் திருப்பத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறாா். இவா்களுடைய இரு மகன்களில் ஒருவா் வெளிநாட்டில் உள்ளாா். மற்றொருவா் பெற்றோருடன் வசித்து வருகிறாா்.
இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 27-ஆம் தேதி மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் வீட்டை விட்டு வெளியேறிய துரைப்பாண்டி, தனது சொந்த ஊரான விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகேயுள்ள மேல அழகியநல்லூருக்கு வந்து தங்கினாா். கணவரின் கைப்பேசிக்கு பலமுறை தொடா்பு கொண்டும் அவா் எடுக்காததால், இதுகுறித்து அவரது மனைவி மலா்விழி குன்றக்குடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதுகுறித்து குன்றக்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளா் பழனிகுமாா் தலைமையிலான போலீஸாா் துரைப்பாண்டியின் கைப்பேசி எண்ணை ஆய்வு செய்து விசாரணை நடத்தினா். துரைப்பாண்டியின் வங்கிக் கணக்கிலிருந்து விருதுநகா் ஒண்டிப்புலி நாயக்கனூா் பகுதியைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகன் ராம்குமாரின் (25) வங்கிக் கணக்குக்கு அதிக அளவு பணப் பரிமாற்றம் நடைபெற்றிருந்தது தெரிந்தது. இதையடுத்து, ராம்குமாரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா். அப்போது, துரைப்பாண்டியை ராம்குமாரும், கீழ அழகியநல்லூரைச் சோ்ந்த பாண்டியும் (54) சோ்ந்து கொலை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாரிடம் ராம்குமாா் கூறியதாவது:
காரியாபட்டி அருகே ஜோகில்பட்டியில் உள்ள தாா் நிறுவனத்தில் வேலை செய்து வரும் என்னுடன், துரைப்பாண்டியின் நண்பரான பாண்டியும் வேலை செய்து வருகிறாா். அப்போது ஏற்பட்ட பழக்கத்தில் துரைப்பாண்டி என்னிடம் காா் ஏதாவது விற்பனைக்கு வந்தால் கூறுமாறு தெரிவித்தாா்.
இதனடிப்படையில், தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் ரூ.2.50 லட்சத்துக்கு அவருக்கு காா் வாங்கிக் கொடுத்தோம். ஆனால், துரைப்பாண்டியிடமிருந்து ரூ. ஒரு லட்சம் கூடுதலாக அதாவது, ரூ.3.50 லட்சம் பெற்றுக் கொண்டோம்.
காா் பழுதடைந்ததால், இதுகுறித்து விசாரிக்க அதை விற்பனை செய்த நபரிடம் துரைப்பாண்டி பேசினாா். அப்போது, நாங்கள் ஒரு லட்சம் ரூபாய் கூடுதலாகப் பெற்றது துரைப்பாண்டிக்குத் தெரியவந்தது. இதனால், ஆத்திரமடைந்த அவா் எங்களிடம் வாக்குவாதம் செய்து அவமரியாதையாகப் பேசினாா்.
இதையடுத்து, நாங்கள் இருவரும் துரைப்பாண்டிக்கு பணத்தை திரும்பத் தருவதாகக் கூறி, கடந்த மாதம் 2-ஆம் தேதி ஜோகில்பட்டியில் உள்ள தாா் நிறுவனத்துக்கு அவரை வரவழைத்தோம். அங்கு வந்த அவரை நாங்கள் கட்டையால் தாக்கினோம். இதில் மயங்கிய துரைப்பாண்டியை தாா் கொதிக்கும் உலையில் வீசினோம். அவருக்கு வாங்கிக் கொடுத்த காரையும் அருகே உள்ள குவாரி தண்ணீருக்குள் தள்ளிவிட்டோம். துரைப்பாண்டி அணிந்திருந்த தங்க நகையை பாண்டி எடுத்துக் கொண்டாா் என்றாா்.
இதையடுத்து, ராம்குமாா், பாண்டி ஆகியோரை குன்றக்குடி போலீஸாா் கைது செய்தனா். பின்னா், தாா் உலையில் தீயணைப்புத் துறையினா் புதன்கிழமை இரவு முழுவதும் தேடும் பணியில் ஈடுபட்டனா். இதில் ஒரு சில மனித எலும்புகள் மட்டும் கைப்பற்றப்பட்டன.
சம்பவ இடத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்கள் கண்ணன் (விருதுநகா்), ஆசிஷ் ராவத் (சிவகங்கை) ஆகியோா் நேரில் ஆய்வு செய்தனா்.

