செய்திகள் :

'வெட்கமா இல்லையா திமுக அரசே?' - கொந்தளிக்கும் தூய்மைப் பணியாளர்கள்; குண்டுக்கட்டாக கைது!

post image

தனியார்மயத்தை எதிர்த்தும் பணி நிரந்தரம் வேண்டியும் சென்னையில் 140 நாட்களுக்கு மேலாக தூய்மைப் பணியாளர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், இன்று சென்னை உயர்நீதிமன்றம் அருகே கூடி கோட்டையை நோக்கி பேரணி செல்ல முயன்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் சென்னை ரிப்பன் பில்டிங் வெளியே மண்டலங்கள் 5-6 யைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை தொடங்கினர். தனியார்மயமாக்கலை எதிர்த்தும் பணி நிரந்தரம் வேண்டியும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

ஆகஸ்ட் 13 ஆம் தேதி நள்ளிரவில் அவர்கள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர். அதன்பிறகும் மெரினா கடற்கரை, உழைப்பாளர் சிலை, மே தின பூங்கா என சென்னையின் முக்கியமான இடங்களில் போராடி கைதாகிக் கொண்டே இருந்தனர். கடந்த 40 நாட்களுக்கு மேலாக உயர்நீதிமன்ற அனுமதியோடு அம்பத்தூரில் உண்ணாநிலை போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று பிராட்வேயின் குறளகம் அருகே இருந்து தலைமைச் செயலகம் நோக்கிச் சென்று முதல்வரிடம் மனு கொடுக்கப் போவதாக அறிவித்தனர்.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

தூய்மைப் பணியாளர்களை கைது செய்ய காலை முதலே காவல்துறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். உயர்நீதிமன்றத்தை சுற்றியிருக்கும் குறளகம், ஹைரோடு, NSC போஸ் ரோடு ஆகியவற்றில் வெவ்வேறு பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள் குழுக்களாக பிரிந்து போராடினர். இதை எதிர்பார்க்காத காவல்துறையினர் தடுமாறிப் போயினர்.

'நர்ஸூங்க மட்டும் கேட்ட உடனேயே வேலை கொடுக்குறீங்க. நாங்க இத்தனை நாளா தெருல இறங்கி போராடுறோமே உங்க கண்ணுக்கு தெரியவே இல்லையா. சாதி பார்த்து ஒதுக்குறீங்களா? குப்பை அள்ளுறவங்கதானேன்னு குப்பையா தூக்கி போடுறீங்களா?' என தூய்மைப் பணியாளர்கள் கோஷம் எழுப்பி கொந்தளித்தனர். கிட்டத்தட்ட 35 பேருந்துகளில் பெண் தூய்மைப் பணியாளர்களை குண்டுக்கட்டாக கைது செய்து வெவ்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றனர்

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

போராட்டத்தை முன்னெடுக்கும் உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் கு.பாரதி பேசுகையில், '140 நாட்களுக்கும் மேலாக தூய்மைப் பணியாளர்கள் போராடிக் கொண்டு இருக்கின்றனர். மாநகராட்சி சார்பில் யாருமே பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை. செவிலியர்கள் போராடியவுடன் அவர்களுக்கு பணி நிரந்தரம் கொடுக்கிறார்கள். ஆனால், தூய்மைப் பணியாளர்கள் இத்தனை நாட்கள் போராடியும் எந்த தீர்வும் இல்லை.

அடுத்தக்கட்டமாக முதல்வர், அறநிலையத்துறை அமைச்சர், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர், மாநகராட்சி ஆணையர் ஆகியோரின் வீட்டை நோக்கி போராட்டத்தை முன்னெடுப்போம்.

எங்களுக்கு தீர்வை கொடுக்கமால் சட்டமன்ற கூட்டத்தொடரை நடத்தினால், சென்னையில் குறைந்தபட்சம் 10 இடங்களிலாவது போராட்டம் நடத்துவோம்.

ராம்கி நிறுவனம் சம்பாதிப்பதற்காக ஏழைகளை நசுக்குவதா? பெண்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். வீதியில் இறங்கி போராடி குண்டுக்கட்டாக கைது செய்யப்படுகிறார்கள். இந்த அரசாங்கத்துக்கு வெட்கமாக இல்லையா?' என்றார்.

"BJPவுடன் இருந்தபோதுதான் எந்தக் கல்லூரியில் ராமர் Engineering படித்தார் எனக் கலைஞர் கேட்டார்"-திருமா

"பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்திருந்த போது மதவாத அரசியலைப் பேசக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை பா.ஜ.க-விற்கு விதித்துதான் கலைஞர் கூட்டணி வைத்தார். பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்திருந்த போதுதான் ராமர் எந்தக் கல்லூ... மேலும் பார்க்க

H-1B விசா புதிய கட்டுப்பாடு: "தொடர்ந்து பேசுவோம்" - இந்தியர்களுக்கு இந்திய அரசின் விளக்கம் என்ன?

ஹெச்-1பி விசாவிற்கு விண்ணப்பிப்பவர்களின் சமூக வலைத்தளங்கள் சோதனையிடப்படும் என்பதுதான் ஹெச்-1பி விசாவிற்கு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அரசின் லேட்டஸ்ட் நெருக்கடி.இதனால், இந்தியாவில் டிசம்பர் 15-ம் தேதி மு... மேலும் பார்க்க

வெளிநாடுகளில் இருந்து அதிகம் வெளியேற்றப்படும் இந்தியர்கள்; இந்த '5' தான் காரணம் - மத்திய அமைச்சர்

இந்த ஆண்டு மட்டும் 81 நாடுகளில் இருந்து 26,400 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இது மாநிலங்களவையில் மத்திய வெளியுறவுத்துறை சொன்ன தகவல்.இந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவில் இருந்து அமெரிக்க அ... மேலும் பார்க்க

DMK vs TVK: ’திமுக தவெக இடையேதான் போட்டி!’ –விஜய்யின் தப்புக் கணக்கா திமுகவின் பயமா?

'2026 சட்டசபைத் தேர்தலில் போட்டியானது திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையில்தான்'- ஆரம்பத்தில் அவ்வளவு உரக்கச் சொல்லாத இந்த வார்த்தைகளை தற்போது சத்தமாகவே சொல்லத் தொடங்கியிருக்கிறார், தவெக தலைவர் விஜய்.ஒரு... மேலும் பார்க்க

கேரளா: "பாஜக மேயரை பினராயி விஜயன் போனில் அழைத்து வாழ்த்தினாரா?" - முதல்வர் அலுவலகம் சொல்வது என்ன?

கேரள மாநிலத்தில் கடந்த 9 மற்றும் 11-ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.கடந்த 13-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சியில் மொத்தமுள்ள 101 வார்டுகளில் தே... மேலும் பார்க்க

"அதிமுக –பாஜக கூட்டணியின் வாக்குகள் 61% அதிகரிக்கும்!" - சொல்வது ஆர்.பி.உதயகுமார்

மதுரை மாவட்டம் செல்லம்பட்டியில் மக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "ஜெயலலிதா பேரவை சார்பில் திண்ணை பிரசாரம் தமிழகம் முழுதும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத... மேலும் பார்க்க