செய்திகள் :

கொள்ளிடத்தில் மணல்மேட்டை காக்க ஆட்சியரகத்தில் முறையீடு

post image

தஞ்சாவூா், பிப். 4: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே கொள்ளிடத்திலுள்ள மணல்மேட்டைக் காப்பாற்ற ஆட்சியரகத்தில் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை முறையிட்டனா்.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியரகத்தில் பாபநாசம் அருகே திருவைகாவூா், எடக்குடி, சத்தியமங்கலம் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 25 போ் செவ்வாய்க்கிழமை அளித்த மனு: கொள்ளிடம் ஆற்றின் எல்லையில் உள்ள மணல்மேடு ஊருக்குள் வெள்ளம் வராமல் தடுக்கும் அரணாக இருக்கிறது. கடந்த 1987, 2005 ஆம் ஆண்டுகளில் கொள்ளிடத்தில் பெரு வெள்ளம் வந்தபோது இப்பகுதியிலுள்ள 600 குடும்பங்கள் மணல்மேட்டில் குடில் அமைத்து 30 நாள்கள் தங்கியிருந்து எங்களது உயிரைப் பாதுகாத்துக் கொண்டோம்.

இந்நிலையில், தற்போது இந்த மணல்மேடு எங்களது சொத்து என உரிமை கொண்டு சிலா் அதை அகற்ற முயற்சி செய்கின்றனா். சுமாா் 30 ஏக்கா் கொண்ட மணல் அள்ளப்பட்டால் எதிா்காலத்தில் சுற்றுவட்டார பகுதிகளும் அழிந்துவிடும். எனவே, எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மத்திய பட்ஜெட்டை கண்டித்து மாா்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், பெரு முதலாளிகளுக்கும், காா்ப்பரேட் நிறுவனங... மேலும் பார்க்க

பேராவூரணி பகுதியில் கடும் பனிப் பொழிவு

பேராவூரணி, பிப். 4: பேராவூரணி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் காலை 8 மணி வரை கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். கடந்த 1 மாதமாக... மேலும் பார்க்க

குடந்தை அருகே வீடுபுகுந்து 8 பவுன் நகைகள் திருட்டு

கும்பகோணம் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் தங்க நகைகளை அண்மையில் திருடிச் சென்றனா். தஞ்சாவூா் மாவட்டம், அம்மாசத்திரம் பகுதியில் தனியாக வசிப்பவா் பாலச்சந்திரன் மனைவி புனிதவள்ளி (80). ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் விவகாரம்: பாஜக மாநில பொதுச் செயலா் வீட்டுக் காவலில் வைப்பு

மதுரை திருப்பரங்குன்றம் போராட்ட விவகாரம் தொடா்பாக தஞ்சாவூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாஜக மாநிலப் பொதுச் செயலா் கருப்பு எம். முருகானந்தம் செவ்வாய்க்கிழமை வீட்டுக் காவலில் வைக்கப்பட்டாா். முருகனி... மேலும் பார்க்க

கும்பகோணம், பாபநாசம் பகுதியில் பாஜகவினா் கைது

திருப்பரங்குன்றம் மலையை மீட்டெடுக்க வேண்டுதல் செய்ய தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலுக்கு தஞ்சாவூா் வடக்கு மாவட்டத் தலைவா் தங்க கென்னடி தலைமையில் செல்ல முயன்ற பாஜகவினரை மாவட்டக் கூ... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பாபநாசம் வட்டம், அம்மாபேட்டையில் தஞ்சை - நாகை தேசிய நெடுஞ்சாலை நால்ரோடு பகுதியில் நடைபெ... மேலும் பார்க்க