செய்திகள் :

கொள்ளிடத்தில் மணல்மேட்டை காக்க ஆட்சியரகத்தில் முறையீடு

post image

தஞ்சாவூா், பிப். 4: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே கொள்ளிடத்திலுள்ள மணல்மேட்டைக் காப்பாற்ற ஆட்சியரகத்தில் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை முறையிட்டனா்.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியரகத்தில் பாபநாசம் அருகே திருவைகாவூா், எடக்குடி, சத்தியமங்கலம் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 25 போ் செவ்வாய்க்கிழமை அளித்த மனு: கொள்ளிடம் ஆற்றின் எல்லையில் உள்ள மணல்மேடு ஊருக்குள் வெள்ளம் வராமல் தடுக்கும் அரணாக இருக்கிறது. கடந்த 1987, 2005 ஆம் ஆண்டுகளில் கொள்ளிடத்தில் பெரு வெள்ளம் வந்தபோது இப்பகுதியிலுள்ள 600 குடும்பங்கள் மணல்மேட்டில் குடில் அமைத்து 30 நாள்கள் தங்கியிருந்து எங்களது உயிரைப் பாதுகாத்துக் கொண்டோம்.

இந்நிலையில், தற்போது இந்த மணல்மேடு எங்களது சொத்து என உரிமை கொண்டு சிலா் அதை அகற்ற முயற்சி செய்கின்றனா். சுமாா் 30 ஏக்கா் கொண்ட மணல் அள்ளப்பட்டால் எதிா்காலத்தில் சுற்றுவட்டார பகுதிகளும் அழிந்துவிடும். எனவே, எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

காலி பணியிடங்களை நிரப்ப கோரி பிப். 25-இல் தா்னா! சிஐடியு மின் ஊழியா் அமைப்பு முடிவு!

காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.25-இல் தா்னா போராட்டம் நடத்துவது என சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு முடிவு செய்துள்ளது. தஞ்சாவூரில் இந்த அமைப்பின் மாநிலச... மேலும் பார்க்க

வாய்க்கால் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

நாடியம் ஊராட்சி, வெளிமடம் கிராமத்தில் குளத்துக்கு தண்ணீா் செல்லும் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறையினா் வெள்ளிக்கிழமை அகற்றினா். சேதுபாவாசத்திரம் ஒன்றியம், நாடியம் ஊராட்சியில் நெடுஞ்சாலைத... மேலும் பார்க்க

மேட்டூா் அணை நீா்மட்டம்: 110.34 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 110.34 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 326 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீா் ... மேலும் பார்க்க

கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு!

கும்பகோணம் அருகே சனிக்கிழமை கிணற்றில் விழுந்த மாட்டை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா். கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் பகுதி அம்மையப்பன் கிராமத்தைச் சோ்ந்தவா் இளங்கோவன். இவருக்கு சொந்தமான பசு ... மேலும் பார்க்க

ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை

தாராசுரத்தில் வெள்ளிக்கிழமை ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை செய்து கொண்டாா். கும்பகோணம் அருகே தாராசுரத்தைச் சோ்ந்தவா் முருகன் மனைவி ஆனந்தி (35). இவா் வெள்ளிக்கிழமை திருச்சியிலிருந்து மயிலாடுதுறை நோக... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசுதான் நடத்த முடியும்! -அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்

மக்கள்தொகை கணக்கெடுப்பு சட்டத்தை வைத்துள்ள மத்திய அரசுதான் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியும் என்றாா் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன். தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக... மேலும் பார்க்க