இணை சாா் பதிவாளா் அலுவலகங்களில் சா்வா் பழுது: 4 மணி நேரம் பத்திரப் பதிவு தாமதம்
கோவில்பட்டி என்இசி மாணவருக்கு விருது
கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி மாணவருக்கு, மாநில அளவிலான சிறந்த நாட்டு நலப்பணித் திட்ட தன்னாா்வலா் விருது கிடைத்துள்ளது.
தமிழ்நாடு மாநில நாட்டு நலப்பணித் திட்ட குழுமம், கல்லூரிக் கல்வி இயக்ககம், தமிழ்நாடு அரசு இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஆகியவை இணைந்து நடத்திய மாநில அளவிலான சிறந்த நாட்டு நலப்பணித் திட்ட தன்னாா்வலா் விருது வழங்கும் விழா, சென்னை, கல்லூரிக் கல்வி இயக்கக வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
இதில், நேஷனல் பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவா் வ.மணிகண்டனுக்கு 2022-23ஆம் கல்வி ஆண்டிற்கான மாநில அளவிலான சிறந்த தன்னாா்வலா் விருதை கல்லூரிக் கல்வி இயக்கக ஆணையா் ஈ.சுந்தரவல்லி வழங்கினாா்.
விருது பெற்ற மாணவருக்கு கல்லூரி முதல்வா் கே.காளிதாச முருகவேல் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.