செய்திகள் :

அண்ணாமலையை நோக்கி நடிகர் ராகவா லாரன்ஸ்?

post image

நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ், தனது பொது வாழ்க்கை தொடர்பான முக்கிய அறிவிப்பை இன்று வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இயக்குநர் பாரதிராஜா மறைவைத் தொடர்ந்து அறிவிப்பை ஒத்திவைத்திருந்த அவர் தனது அடுத்தக்கட்ட பயணம் குறித்த தகவலை இன்று காலை 10 மணிக்கு வெளியிடவுள்ளதாக தெரிவித்திருந்தார்.

அண்ணாமலை தொடங்கியுள்ள We The Leaders இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் இணைந்து பொது வாழ்க்கையில் தீவிரமாக களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியல் ரீதியாக அண்ணாமலைக்கு ஆதரவாக இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வரும் நிலையில் தன்னை ரஜினியின் தீவிர ரசிகராக அடையாளப்படுத்திக் கொள்ளும் லாரன்ஸின் இந்த முடிவு முக்கியத்துவம் பெறுகிறது.

ரஜினி - அண்ணாமலை
ரஜினி - அண்ணாமலை

மேலும் ரஜினிகாந்தின் மருமகன் விசாகன் சமீபத்தில் அண்ணாமலையை சந்தித்து அவரது புதிய அரசியல் முயற்சியில் இணைய விருப்பம் தெரிவித்ததாக கூறப்படும் சூழலில் லாரன்ஸின் இன்றைய அறிவிப்பு அண்ணாமலையின் புதிய அரசியல் தளத்திற்கு மேலும் கவனம் ஈர்த்துள்ளது.

இதற்கிடையில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஏ.கே. விஸ்வநாதன் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் We The Leaders இயக்கத்தில் இணைய ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசியல், சினிமா மற்றும் முன்னாள் அரசு அதிகாரிகள் பலருடன் அண்ணாமலை தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

சர்ச்சை வீடியோ: ``அது மனிதர்களால் ஏற்பட்ட பிழை அல்ல; AI தொழில்நுட்பத்தால்..." - அமைச்சர் ராஜ் மோகன்

கோவையில் தமிழக அரசின் சார்பில் பிரமாண்ட அரசு பொருட்காட்சி தொடங்கப்பட்டிருக்கிறது. இந்தப் பொருட்காட்சியின் தொடக்கவிழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ் மோகன் கலந்துகொண்டார். அதன்பிறகு செய்தியாளர்களை... மேலும் பார்க்க

இந்தியாவின் வல்லரசுக் கனவு... முழக்கமாக மட்டுமே நின்றுவிடக் கூடாது!

‘வளர்ந்த இந்தியா’, ‘வல்லரசு இந்தியா’, ‘உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடு இந்தியா’ என்றெல்லாம் தொடர்ந்து குரல்கள் ஒலிக்கின்றன. சமீபத்தில் நடந்த 11-வது நிதி ஆயோக் கூட்டத்திலும் பிரதமர் மோடி இதையே மு... மேலும் பார்க்க

``தென்தமிழகத்தில் சாதிய வன்முறைகளும் ஆணவக்கொலைகளும்" - பா.ரஞ்சித்தின் அழுத்தமான கோரிக்கை!

``சாதியவாத சக்திகள் சாதிப் பெருமையைப் பரப்புவதால் ஏற்படும் விளைவுகளால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆணவப்படுகொலைகள் நடந்துவருகின்றன. பட்டியல் சாதியினர் மட்டுமல்ல, அனைத்து சாதிகளிலும் இந்த ஆணவப்படு... மேலும் பார்க்க

'234 மாவட்டச் செயலாளர்கள்; முதற்கட்டமாக 9 மாவட்டங்களில் பரிசோதனை முயற்சி!'- விஜய்யின் அடுத்த பிளான்!

தேர்தல் வெற்றிக்குப் பிறகு முதல் முதலாக நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறது தவெக. எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் சர்ப்ரைஸாக சில முடிவுகளும்... மேலும் பார்க்க

நிதி ஆயோக் கூட்டம்: `ஆக்கப்பூர்வ ஒத்துழைப்பு டு நீட் எதிர்ப்பு...' - முதல்வர் விஜய் பேசியது என்ன?

நிதி ஆயோக் கவுன்சிலின் 11-வது கூட்டம் டெல்லி ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் உள்ள கலாசார மையத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை முதல் மாலை வரை நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார். இதில... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: `ஓப்பன் பார்'ஆக மாறிய பஸ் ஸ்டாப்; அச்சத்தில் மக்கள்... நடவடிக்கை எடுக்குமா அரசு?!

மயிலாடுதுறை மாவட்டம், கூறைநாடு கடைவீதி பகுதியில் மதுபானக்கடை ஒன்று, சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டு வருகிறதுகூறைநாடு பகுதியானது பல்வேறு ஜவுளிக்கடைகள், திருமண மண்டபங்கள், பள்ளிக்கூடங்கள்,... மேலும் பார்க்க