செய்திகள் :

கோவை: `திமுக அரசை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது!'- பாஜக செயல் தலைவர் நிதின் நபின் சபதம்

post image

பாஜக அகில இந்திய செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிதின் நபின் 2 நாள்கள் பயணமாக கோவை வந்துள்ளார். நேற்று மாலை பாஜக மையக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் மாநில பாஜகவின் மூத்த நிர்வாகிகள், கோவை மாவட்ட பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதில் பேசிய நிதின் நபின்,

நிதின் நபின்

“இந்தியா வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாட்டில் முன்னேறிய நகரமாக கோவை உள்ளது. 

கோவைக்கு வந்தே பாரத் ரயிலை மோடி வழங்கியுள்ளார். ஜவுளித்துறை, சிறு குறு நிறுவனங்களுக்கு அதிக சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இளைஞர்களின் முன்னேற்றம், உள்நாட்டு கட்டமைப்பு போன்றவற்றில் அதிக முதலீடு செய்துள்ளோம். கொங்கு மண்டலம் முன்னேற்றத்திற்கான பகுதி. 

கோவை
கோவை

தேசிய ஜனநாயக கூட்டணி மக்கள் நலனுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும். பிரதமர் மோடி ஊழல் இல்லாத ஆட்சியை வழங்கி வருகிறார், ஆனால் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் அப்படி இல்லை. ஊழல், லஞ்சம் என்றால் அது திமுக ஆட்சி தான்.

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. கல்லூரி மாணவிகள் மீது பாலியல் வன்முறை நடைபெறுகிறது. திமுக ஆட்சியை அகற்ற வேண்டும். அனைவருக்கும் பாதுகாப்பான அரசு வர வேண்டும். தமிழ்நாட்டில் ஒரு சில அமைச்சர்கள் கொச்சையாக பேசி வருகிறார்கள்.

பாஜக சபதம்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தீபத்தை ஏற்ற விடாமல் மாநில அரசு செயல்பட்டுள்ளது. திமுக அரசை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. மக்கள் மீதும், மண் மீதும் அக்கறை கொண்ட அரசாங்கம் வர வேண்டும்” என்றார். பிறகு பாஜகவின் வெற்றிக்காக சபதம் எடுத்தனர்.

`அண்ணாமலையைக் கைதுசெய்ய வேண்டும்'- தாக்கரே கட்சி போர்க்கொடி... காரணம் என்ன?

மும்பையில் வரும் 15-ம் தேதி நடக்க இருக்கும் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக தமிழக பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை இரண்டு நாள்களுக்கு முன்பு மும்பை வந்திர... மேலும் பார்க்க

"அனைவரும் நன்றியுடனும், அன்புடனும் இருங்கள்" - கடற்கரை பொங்கல் விழாவில் நெகிழ்ந்த நடிகை தேவயானி!

கன்னியாகுமரி ரஸ்த்தாகாடு கடற்கரையில், கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் 12-வது சமத்துவ பொங்கல்விழா நடைபெற்றது. இதில் 3006 பெண்கள் ஒரே இடத்தில் பொங்கலிட்டனர். சினிமா தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் தலைமையி... மேலும் பார்க்க

Grok AI சர்ச்சை: 'இந்திய சட்டத்தின் படி நடப்போம்' - தவறை ஒப்புக்கொண்ட எலான் மஸ்கின் எக்ஸ் நிறுவனம்

எலான் மஸ்க்கின் எக்ஸ் தளம், தனது Grok AI மூலம் ஆபாசப் படங்கள் உருவாக்கப்பட்ட விவகாரத்தில் தனது தவறை ஒப்புக்கொண்டு 600 கணக்குளை ஒப்புக்கொண்டிருக்கிறது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம... மேலும் பார்க்க

`தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு கிடையாது' - அமைச்சர் ஐ.பெரியசாமி

திண்டுக்கல் மாநகராட்சி 44 வது வார்டில் தி.மு.க சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என மும்மதத்தைச் சார்ந்த பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் சமத்துவ பொங்கல்... மேலும் பார்க்க