செய்திகள் :

கோவை: மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழப்பு; தாழ்வான மின்மாற்றிதான் காரணமா? வனத்துறை சொல்வது என்ன?

post image

கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார கிராமங்களுக்குள் காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி நுழைவது அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் நடராஜன் என்பவரது தோட்டத்திற்குள் நேற்றிரவு ஒரு ஆண் காட்டு யானை நுழைந்தது. அப்போது மாந்தோப்பிற்குள் புகுந்து அங்குள்ள மின்மாற்றியை அந்த யானை தள்ளியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதில் மின்சாரம் பாய்ந்து யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தனர்.

மேலும், மின்வாரிய செயற்பொறியாளர், உதவிப் பொறியாளர் மற்றும் வனத்துறை கால்நடை மருத்துவக் குழுவினர் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அதில் யானை மின்சாரம் தாக்கித்தான் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது, “மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் என்பது 30 அடி உயரம் கொண்டிருக்க வேண்டும். அதில் 5 அடி தரைக்கு அடியிலும், 25 அடி தரைக்கு மேலேயும் இருக்க வேண்டும் என்பது விதிமுறை. இதில் உயர்மின்னழுத்த மின்மாற்றி தரையிலிருந்து 10 அடி உயரத்தில் வைக்கப்பட்டிருந்ததால், யானை எளிதாக அதை எட்டும் சூழல் உருவாகியுள்ளது.

பொதுவாக மின்மாற்றியில் இருந்து வரும் ஒருவித சத்தத்தினால் யானைகள் அதன் அருகே வராது. ஆனால் இந்த யானை எதிர்பாராத விதமாக கம்பியை இழுத்ததால் விபரீதம் நிகழ்ந்துள்ளது.

ஏற்கனவே தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளைச் சரிசெய்யுமாறு வனத்துறை சார்பில் மின்வாரியத்திற்குப் பலமுறை கடிதங்கள் எழுதப்பட்டு, அத்தகைய இடங்கள் சரிசெய்யப்பட்டுள்ளன. இருப்பினும், மின்மாற்றிகள் நிலையான உயரத்தில் மட்டுமே அமைக்க முடியும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்தனர்.

மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேஷனல் ஜியோகிராஃபிக் 'ஆண்டின் சிறந்த ஆய்வாளர்' விருதை வென்ற கிருத்தி கரந்த்! - சாதித்த இந்திய பெண்

காடுகளின் குரலாகவும், வனவிலங்குகளின் பாதுகாவலராகவும் அறியப்படும் டாக்டர் கிருத்தி கரந்த், தற்போது சர்வதேச அரங்கில் இந்தியாவிற்குப் பெருமை தேடித் தந்துள்ளார். 'நேஷனல் ஜியோகிராஃபிக்' அமைப்பு வழங்கும் 20... மேலும் பார்க்க

சுற்றுலா தலங்களில் குரங்குகள் ஏன் உணவுப்பொருள்களை பிடுங்குகின்றன? இதற்கு 'மனித தவறுகள்' தான் காரணம்!

கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. இந்நேரத்திற்கு நம் மக்கள் டூருக்கும், டிரிப்பிற்கும் பிளான் போட்டு சென்றிருப்பார்கள். அந்த டிரிப் லிஸ்ட்டில் பெரும்பாலும் வனவிலங்கு சரணாலயங்கள், நீர்வீழ்ச்சிகள், கடற்கரைக... மேலும் பார்க்க

ஊட்டி: மீட்கப்பட்ட 2 புலி குட்டிகளில் ஒன்று உயிரிழப்பு; மற்றொன்றை சென்னைக்கு அனுப்ப முடிவு

வங்கப் புலிகளின் வாழிடப் போதாமை என்பது நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தில் பெரும் பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. வாழிடங்களை இழந்து தவிக்கும் புலிகளால் மனித உயிர்கள் பறிபோகின்றன. மனித செயல்பாடுகளால் பு... மேலும் பார்க்க

முதுமலை: ஒரே வாரத்தில் அடுத்தடுத்து சரிந்த 3 யானைகள்; வனத்துறை தீவிர ஆய்வு; பின்னணி என்ன?

ஆசிய யானைகளை அதிக எண்ணிக்கையில் கொண்டிருக்கும் நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தண்ணீர் மற்றும் பசுந்தழைகளைத் தேடி யானைகள் கூட்டமாக இடம்பெய... மேலும் பார்க்க

சென்னை காசிமேடு: மீன்பிடி தடைக்காலம்; படகுகளைப் பராமரிக்கும் மீனவர்கள் | Photo Album

100 ஏக்கர் பரப்பில் ஒரு தற்சார்பு பண்ணை; நெல், மீன், தென்னை, நிலக்கடலை, காய்கறிகள், நாட்டு மாடுகள்.. மேலும் பார்க்க