செய்திகள் :

வெள்ளியங்கிரி மலையில் மேலும் ஒரு பக்தர் உயிரிழப்பு – ஒரே ஆண்டில் 8 பேர் உயிரிழந்த சோகம்!

post image

கோவை மாவட்டம், பூண்டி பகுதியில் தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலை, மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. இந்த மலையேற ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை பக்தர்களுக்கு வனத்துறையினர் அனுமதி அளித்து வருகின்றனர். சமீப காலங்களாக வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் கோவை வழுக்குப்பாறை பகுதியை சேர்ந்த மயில்சாமி (32) என்பவர் நேற்றிரவு வெள்ளியங்கிரி மலையேறி உள்ளார். இதனிடையே இன்று காலை 5.30 மணியளவில் நான்காவது மலை செல்லும் வழியில் முழங்கால் திட்டு என்ற இடத்தில் மயில்சாமி சுயநினைவின்றி இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனப்பணியாளர்கள் மற்றும் டோலி தூக்கும் சுமை பணியாளர்கள் அவரை மீட்டு டோலி மூலம் அடிவாரம் கொண்டு வந்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மயில்சாமி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அவரது உடல் உடற்கூறாய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளியங்கிரி
வெள்ளியங்கிரி

இதன் காரணமாக இந்தாண்டில் வெள்ளியங்கிரி மலையில் உயிரிழந்த பக்தர்களின் எண்ணிக்கை 8-ஆக அதிகரித்துள்ளது. வெள்ளியங்கிரி மலை என்பது கடுமையான மலைப்பாதையாக இருப்பதால், மூச்சுத்திணறல், இருதய பாதிப்பு, உயர் அல்லது குறைந்த இரத்த அழுத்தம், நரம்பு தளர்ச்சி, வலிப்பு உள்ளிட்ட உடல் நலப் பாதிப்புகள் உள்ளவர்கள் மலையேறுவதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

மும்பை: தர்ப்பூசணி சாப்பிட்டு 4 பேர் மரணமடைந்த விவகாரம் - விலகிய மர்மம்!

மும்பை பைதோனி பகுதியை சேர்ந்த அப்துல்லா என்பவர் குடும்பம் கடந்த மாதம் 25ம் தேதி இரவு உறவினர்களை அழைத்து தங்களது வீட்டில் விருந்து கொடுத்தனர். அனைவரும் பிரியாணி சாப்பிட்டனர். அன்று இரவு விருந்தினர்கள் ... மேலும் பார்க்க

'கொலைக் குற்றவாளியுடன் பெண் ஜெயிலருக்கு காதல்!' - சிறை ஊழியர்கள் திரளாகப் பங்கேற்று நடந்த திருமணம்

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மத்திய சிறையில் சிறை அதிகாரியாக இருப்பவர் பெரோஷா. இப்பெண் ஜெயிலராக சிறையில் பணியாற்றியபோது கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த தர்மேந்திரசிங் என்பவரைச் சந்தித்தார்... மேலும் பார்க்க

பெண்களின் பாதுகாப்பை அறிய மஃப்டியில் நின்ற பெண் கமிஷனர்; ஒழுங்கீனமாக நடக்க முயன்று சிக்கிய ஆண்கள்

இரவு நேரங்களில் தனியாகப் பயணம் செய்யும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்ற கருத்து நிலவி வருகிறது. அதனை தெரிந்து கொள்ள ஐதராபாத்தில் உள்ள தில்சுக் நகர் பேருந்து நிலையத்தில் நள்ளிரவு நேரத்தில் பெண் போல... மேலும் பார்க்க

Anand Mahindra: `வரலாற்றை மாற்றிய ஒரு வாக்கு' - ஆனந்த் மஹிந்திரா வியந்த திருப்பத்தூர் தேர்தல் களம்!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் இந்த முறை முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான போட்டி நிலவியது. தமிழகத்தின் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த தி.மு.க-வின் மூத்த நிர்வாகி கே.ஆர்... மேலும் பார்க்க

மும்பை: மாமரத்தில் விளைந்த சீதாப்பழம்? வைரலாகும் வீடியோ; ஆராய்ச்சியாளர் சொல்வது என்ன?

மும்பை அருகே மாமரம் ஒன்றில் சீதாப்பழம் விளைந்திருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மும்பை அருகில் இருக்கும் பிவண்டி என்ற இடத்தைச் சேர்ந்தவர் ஜெயேஷ் பாட்டீல். இவர் மளிகைக்கடை வைத்தி... மேலும் பார்க்க