செய்திகள் :

தூத்துக்குடி: துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்ட பிரபல ரெளடி மரிய அந்தோணி யார்? - பகீர் பின்னணி

post image

தூத்துக்குடி, மினிசகாயபுரத்தைச் சேர்ந்தவர் மரிய அந்தோணி ஆக்னல். இவர் மீது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தனிப்படை போலீஸார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் சோனகன்விளை அருகிலுள்ள காணியாளன்புதூரில் உள்ள அவரது தோழி சந்தனமாரி என்பவரது வீட்டில் தலைமறைவாக இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அவரை சுற்றி வளைத்து தனிப்படை உதவி ஆய்வாளர் ராஜபிரபு பிடிக்க முயன்றபோது தன்னிடம் இருந்த நாட்டுத்துப்பாக்கியால் ராஜபிரபுவை நோக்கி சுட்டுள்ளார்.

ரெளடி மரிய அந்தோணி

துப்பாக்கி குண்டு அவரது வயிற்றுப்பகுதியை உரசிச் சென்றுள்ளது. இதனையடுத்து எஸ்.ஐ., ராஜபிரபு தனது துப்பாக்கியால் சுட்டார். வலது மார்பிற்கும் வயிற்றுக்கும் இடையில் குண்டு பாய்ந்தது. இதில் காயமடைந்த மரிய அந்தோணி, மயங்கி விழுந்தார். அவரை மீட்ட போலீஸார் முதலில் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காயமடைந்த எஸ்.ஐ., ராஜபிரபுவும் சிகிச்சை பெற்று வருகிறார்.

மரிய அந்தோணி?

ரெளடி மரிய அந்தோணியின் பகீர் பின்னணி குறித்து போலீஸாரிடம் விசாரித்தோம், “துப்பாக்கியால் சுடப்பட்ட ரெளடி மரிய அந்தோணி, தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் குற்றவாளிகள் பட்டியலில் குறிப்பாக ‘சி’ ப்ளஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். பூபால்ராயர்புரத்தில் வசித்து வந்த தன் மனைவி ரொஷிட்டா மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொலை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது. அத்துடன் 31 வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த மாதம் 12-ம் தேதி, தனது தம்பியுடன் சிலர் மோதியதால் தூத்துக்குடியில் உள்ள ஒரு வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் சேர்க்கப்பட்டிருந்தார்.

எஸ்.ஐ.,ராஜபிரபு

அந்த வழக்கில் தேடப்பட்ட போதுதான் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டார். கடந்த 2023-ம் ஆண்டு திருச்செந்தூர் அருகிலுள்ள ஆலந்தலையில் மதன்குமார் என்பவரை தனது நண்பர்களுடன் சேர்ந்து துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்து கடற்கரையில் புதைத்து வைத்ததுடன், கொலை செய்யப்பட்ட மதன்குமாரின் ஈரலை எடுத்து தீயில் சுட்டு நர மாமிசம் சாப்பிட்ட கொடூரன். 3 முறை தொடர்ந்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவன்.” என்றனர்.  

சென்னை: `அவசரத் தேவை' எனக் கூறி மோசடி; வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் சிக்கியது எப்படி?

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சத்தியராஜ் (31). இவர், சென்னை, பூந்தமல்லி பகுதியில் தங்கியிருந்து கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். 04.05.2026-ம் தேதி அண்ணாநகர், வள்ளியம்மாள் கல்லூரி பகுதியில்... மேலும் பார்க்க

சென்னை: வீட்டில் தனியாக இருந்த நர்ஸுக்குப் பாலியல் தொல்லை; இளைஞர் கைது; என்ன நடந்தது?

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 28 வயது பெண் ஒருவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸாக வேலை செய்து வருகிறார். இவர், தண்டையார்பேட்டை பகுதியில் தன்னுடைய உறவினர் வீட்டில் தங்கியிருக்கிறார். இவரின் ... மேலும் பார்க்க

TVK: பாத்திரக்கடை உரிமையாளரைத் தாக்கி ரூ.68,000 பறிப்பு; தவெக நிர்வாகி மீது வழக்கு; ஒருவர் கைது

கும்பகோணம், ஆடுதுறை கிருஷ்ணன் கோவில் தோப்பு தெரு பகுதியைச் சேர்ந்தவர் கோடீஸ்வரன்(63). பாத்திரக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு பாத்திர கடையை மூடிவிட்டு கோடீஸ்வரன், அவரது மகன் பாலசுப்பிரமணியன்(38), க... மேலும் பார்க்க

சென்னை: குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர்; தானே பிடித்து போலீஸில் ஒப்படைத்த இளம் பெண்!

கோயம்புத்தூரைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவர், சென்னை, கிண்டி பகுதியில் தோழிகளுடன் வாடகைக்கு தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். 06.05.2026-ம் தேதி அதிகாலையில் அந்தப் பெண், வீட்டின... மேலும் பார்க்க

தூத்துக்குடி: பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்பு; தப்ப முயன்ற ரெளடியைச் சுட்டுப் பிடித்த போலீஸார்!

தூத்துக்குடி, மினி சகாயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மரிய அந்தோணி. இவர் மீது கொலை, கொலை முயற்சி மற்றும் கொள்ளை உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. ஒரு சரித்... மேலும் பார்க்க

மாஜி காதலியிடம் மன்னிப்புக் கேட்க சென்றபோது அடி, உதை; தப்பிக்க மாடியிலிருந்து குதித்த காதலன் பலி

டெல்லி அருகில் உள்ள நொய்டாவில் வசிப்பவர் ஹிதேஷ் ரானா. இவரது மனைவி சஞ்சல் ரானா. இதில் சஞ்சல் ரானா திருமணத்திற்கு முன்பு ரஞ்சித் என்ற வாலிபரைக் காதலித்து வந்தார். ஆனால் திருமணத்திற்குப் பிறகும் அந்த வால... மேலும் பார்க்க