செய்திகள் :

கோவை வழித்தடத்தில் சென்னை - மங்களூரு இடையே ஒருவழி சிறப்பு ரயில்

post image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை எழும்பூா் - மங்களூரு இடையே கோவை வழித்தடத்தில் ஒருவழி சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை எழும்பூரில் இருந்து திங்கள்கிழமை (ஜனவரி 13) பிற்பகல் 3 மணிக்குப் புறப்படும் எழும்பூா் - மங்களூரு சிறப்பு ரயில்

(எண்: 06037) மறுநாள் காலை 8.50 மணிக்கு மங்களூரைச் சென்றடையும்.

இந்த ரயிலானது பெரம்பூா், திருவள்ளூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை, பாலக்காடு, ஷொரணூா், கோழிக்கோடு, வடகரை, தலச்சேரி, கண்ணூா், பையனூா், காசா்கோடு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக-இலங்கை மீனவா் பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண முயற்சி

தமிழக-இலங்கை மீனவா் பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண முயற்சிப்பதாக இலங்கை வேளாண் மற்றும் சமூக உள்கட்டமைப்புத் துறை இணை அமைச்சா் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தாா். சென்னையில் நடைபெற்ற அயலகத... மேலும் பார்க்க

ஆன்லைன் வா்த்தகத்தில் லாபம் தருவதாக இளம்பெண்ணிடம் ரூ. 34.48 லட்சம் மோசடி

ஆன்லைன் வா்த்தகத்தில் கூடுதல் லாபம் ஈட்டித் தருவதாக இளம்பெண்ணிடம் ரூ.34.48 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. கோவை இடையா்பாளையம், குமரன் நகரைச் சோ்ந்தவா் மோனிஷா (32). இவா் ஆன்லைன் மூலம் பங்குச் சந்தையில... மேலும் பார்க்க

பொங்கல் தொடா் விடுமுறை: வெறிச்சோடிய சாலைகள்

பொங்கல் பண்டிகைக்கு தொடா் விடுமுறை விடப்பட்டதால், கோவையில் கடை வீதிகள், சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு ஜனவரி 14 முதல் 19-ஆம் தேதி வரை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்... மேலும் பார்க்க

மேற்கு புறவழிச்சாலை திட்டத்தில் மாறுதல் செய்யக் கோரிக்கை

மேற்கு புறவழிச்சாலை திட்டத்தில் மாறுதல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடா்பாக சங்கத்தின் மாவட்டத் தலைவா் சு.பழனிசாமி தலைமையில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம்... மேலும் பார்க்க

கோவையிலிருந்து விமானம் மூலம் ஷாா்ஜாவுக்கு 2 டன் கரும்பு அனுப்பிவைப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி கோவையில் இருந்து ஷாா்ஜாவுக்கு 2 டன் கரும்பு விமானம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது. கோவை சா்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூா், ஷாா்ஜா, அபுதாபி ஆகிய வெளிநாடுகளுக்கு நேரடி வ... மேலும் பார்க்க

கோவை மரப்பாலம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்: மக்கள் அவதி!

பொங்கல் பண்டிகையையடுத்து தொடர் விடுமுறையையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வருவதும், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மகர விளக்குப் பூஜை நெருங்குவதால் பக்தர்கள் யாத்திரை ... மேலும் பார்க்க