'Police Police' Season 2 Update! - Writer Eraa. Kalai Kadodi Interview | Jio Hot...
``சஞ்சு சாம்சனின் 97 ரன்களுக்கு இணையானது, துபே அடித்த அந்த இரண்டு பவுண்டரிகளும்!" - கோச் கம்பீர்
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை 2026 சூப்பர் 8 போட்டியில் இந்தியா வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்ற பிறகு, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், ``சஞ்சு சாம்சன் 50 பந்துகளில் 97 ரன்கள் எடுத்து இந்தியாவின் வெற்றிக்குக் காரணமாக இருந்தார். இருப்பினும், ஆட்டத்தின் 19-வது ஓவரில் சிவம் துபே அடித்த இரண்டு முக்கியமான பவுண்டரிகள் மிகவும் முக்கியமானவை. என்னைப் பொறுத்தவரை, சிவம் துபே அடித்த அந்த இரண்டு பவுண்டரிகளும் சஞ்சுவின் 97 ரன்களுக்கு இணையானவை. அவர் அந்த பவுண்டரிகளை அடிக்கவில்லை என்றால், சஞ்சுவின் 97 ரன்களைப் பற்றி யாரும் இப்போது பேசிக்கொண்டிருக்க மாட்டார்கள்

பல ஆண்டுகளாக நாம் குறிப்பிட்ட சில வீரர்களின் பங்களிப்பைப் பற்றி மட்டுமே பேசி வருகிறோம். ஆனால் இது ஒரு கூட்டு முயற்சி சார்ந்த விளையாட்டு. பெரிய ரன்கள் எடுப்பவர்கள் தலைப்புச் செய்திகளில் இடம்பெறுவார்கள். ஆனால் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் சிறிய பங்களிப்புகளே மிக முக்கியமானவை. எனது பயிற்சி காலம் முழுவதும் இதே அணுகுமுறை தொடரும்." என்றார்,

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவும் கம்பீரின் கருத்தையே வழிமொழிந்தார் :
``கடைசி ஓவர்களில் 8-9 ரன்கள் எடுப்பது சில நேரங்களில் கடினமாகிவிடும், அந்த அழுத்தத்தைக் குறைத்தது சிவம் துபே அடித்த அந்த இரண்டு பவுண்டரிகள்தான் இன்னும் இலக்கை சுலபமாக்கியது. " என்று அவர் பாராட்டினார்.
சஞ்சு சாம்சனின் சிறப்பான ஆட்டத்தை அங்கீகரித்த அதே வேளையில், கிரிக்கெட் என்பது தனிநபர் சாதனை அல்ல, அது ஒரு கூட்டு முயற்சி என்பதை கம்பீர் மற்றும் பும்ரா இந்த பேட்டியின் மூலம் வலியுறுத்தியுள்ளனர்.


















