செய்திகள் :

சரிந்த வாக்கு வங்கி; திருமாவின் விசிக சொதப்பியது எங்கே?!

post image

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தி.மு.க-வுக்கு மட்டுமல்லாது தி.மு.க கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இக்கூட்டணியில் 8 தொகுதிகளில் களம் கண்ட வி.சி.க, தற்போது காட்டுமன்னார் கோயில் தொகுதியில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. மற்ற 7 தொகுதிகளிலும் அக்கட்சி பின்னடைவைச் சந்தித்துள்ளது, அரசியல் வட்டாரத்தில் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

2021 சட்டமன்றத் தேர்தலில் 4 எம்.எல்.ஏ-களுடன் சட்டமன்றத்தில் நுழைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்தத் தேர்தலில் ஒரு இடத்தில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.

திருமாவளவன்
திருமாவளவன்

இந்தத் தேர்தலில் விசிக தொண்டர்களிடையே ஒருவித சுணக்கம் நிலவியதை மறுக்க முடியாது. இதை விசிக தலைவர் திருமாவளவனே குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக, தி.மு.க உடனான தொகுதிப் பங்கீட்டின்போது ஏற்பட்ட அதிருப்தி, தேர்தல் களத்தில் கூட்டணிக் கட்சிகளுடனான ஒருங்கிணைப்பு குறைபாடு போன்றவை பின்னடைவுக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. களப்பணியில் வி.சி.க தொண்டர்களின் முழுமையான ஒத்துழைப்பு இல்லாதது பல தொகுதிகளில் எதிரொலித்துள்ளது.

இந்தத் தேர்தலின் முக்கியத் திருப்புமுனையாகப் பார்க்கப்பட்டது வி.சி.க தலைவர் திருமாவளவன் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்புதான். ஆரம்பத்தில் அவர் போட்டியிடப் போவதாகத் தகவல்கள் வெளியான நிலையில், பின்னர் திடீரென அந்த முடிவில் இருந்து அவர் பின்வாங்கினார். இந்த அணுகுமுறை தொண்டர்கள் மற்றும் வாக்காளர்கள் மத்தியில் ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தியதாகக் கருதப்படுகிறது. மேலும், தேர்தல் தொடங்கியதிலிருந்தே விசிக தலைவர் திருமாவளவனின் நடவடிக்கையில் சிறு தடுமாற்றங்கள் இருந்ததாக மூத்த ஊடகவியலாளர்கள் கருதுகின்றனர்.

திருமாவளவன்
திருமாவளவன்

சமீபத்திய பேட்டி ஒன்றில் திருமாவளவன், "எண்ணிக்கையை விட கொள்கை வெற்றிகளே முக்கியம்" என்று குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், 8 இடங்களில் போட்டியிட்டு 1 இடத்தில் மட்டுமே முன்னிலை என்பது கட்சியின் எதிர்கால சக்தியைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. காட்டுமன்னார் கோயில் தொகுதியில் மட்டும் விசிக முன்னிலை வகிப்பது அக்கட்சிக்கு ஒரு ஆறுதல் பரிசாக அமைந்துள்ளது. உட்கட்சி, கூட்டணி சலசலப்புகளைக் கடந்து, புது வரவான தவெக-வின் தாக்கமும் இந்த தேர்தலில் எதிரொலித்திருப்பது, விசிக-வுக்கும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்று சொல்லலாம்.

'கடந்த காலங்களை போலவே, பாஜக ஆளுநர்களை வைத்து இடையூறு!' - செல்வப்பெருந்தகை

தவெக ஆட்சி அமைப்பதில் இழுப்பறி நீடித்து வரும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். "கடந்த காலங்களை போலவே, தமிழ்நாட்டில் மக்க... மேலும் பார்க்க

``ஆளுநர் நல்லவர்தான். ஆனால் பாஜக அரசியல் செய்கிறது!" - மாணிக்கம் தாக்கூர்

தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றிருக்கிறது.118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில் தான் திமுக கூட்டணியி... மேலும் பார்க்க

`விஜய் முதல்வராவதை தடுத்தால்..!' - ஜல்லிக்கட்டு போராட்டத்தை நினைவூட்டும் காங்கிரஸ் நிர்வாகி

காங்கிரஸ் கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்டத் தலைவர் மகேந்திரன். இவர் ராகுல் காந்திக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதி மகேந்திரனுக்கு ... மேலும் பார்க்க

`தி.மு.க-வுக்கு பாயத் தயாராகும் சிறுத்தைகள் டு சாரி கேட்ட செந்தில் பாலாஜி!' | கழுகார் அப்டேட்ஸ்

புலம்பும் கு.ப.கிருஷ்ணன்!"தப்புக்கணக்கு போட்டுட்டோம்"த.வெ.க-வில், முகம் தெரியாத பலரும் வெற்றிபெற்ற நிலையில், லால்குடி தொகுதி வேட்பாளர் கு.ப.கிருஷ்ணனோ தோல்வியைத் தழுவியிருக்கிறார். அ.தி.மு.க முன்னாள் அ... மேலும் பார்க்க

விஜய்க்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காமல் பந்தாடும் ஆளுநர்! - வலுக்கும் கண்டனங்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் 118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன... மேலும் பார்க்க

`அந்த திட்டம் வேண்டாம்!' - அதிமுகவுக்கு `நோ' சொல்லிய திமுக?

தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவடைந்தாலும் இன்னும் பரபரப்புக்குக் குறைவில்லாமல் நகர்கிறது அரசியல் களம். குறிப்பாக நேற்று இரவு வெளியான சில தகவல்கள் தமிழக அரசியல் பார்வையாளர்கள்கூட எதிர்பாராதவை. அதாவது, ... மேலும் பார்க்க