செய்திகள் :

சறுக்கிய தமிழ் வேட்பாளர்கள்; 5 முறை கவுன்சிலராக இருந்த ரவி ராஜா, மாரியம்மாள் தாராவியில் தோல்வி!

post image

மும்பை மாநகராட்சி தேர்தலில் தாராவியில் உள்ள 185வது வார்டில் பா.ஜ.க சார்பாக ரவி ராஜா போட்டியிட்டார். ரவி ராஜா இதற்கு முன்பு 5 முறை காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு மும்பை மாநகராட்சியில் கவுன்சிலராக இருந்திருக்கிறார். அதோடு கடந்த முறை மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்துள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சி வாய்ப்பு கொடுக்காத காரணத்தால் ரவி ராஜா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.கவில் சேர்ந்தார். ரவி ராஜா தாராவியை சேர்ந்தவர் கிடையாது. அவர் தாராவிக்கு அருகில் உள்ள சயான் கோலிவாடா பகுதியை சேர்ந்தவர். இதற்கு முன்பு சயான் கோலிவாடாவில்தான் போட்டியிட்டு வெற்றி பெற்று இருக்கிறார்.

ஆனால் தாராவியில் ஒருபோதும் போட்டியிட்டது கிடையாது. இம்முறை தொகுதி ஒதுக்கீட்டில் சயான் கோலிவாடாவில் உள்ள வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் ரவி ராஜா போட்டியிட சீட் கிடைக்கவில்லை. இதையடுத்து அவருக்கு பா.ஜ.க தலைமை தாராவியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தது. ஆனால் தாராவியில் பா.ஜ.க சார்பாக போட்டியிட கடந்த சில ஆண்டுகளாக ரமேஷ் என்பவர் தன்னை தயார்படுத்தி வந்தார். ரமேஷுக்கு சீட் கொடுக்காமல் ரவி ராஜாவிற்கு சீட் கொடுத்ததால் தாராவி பா.ஜ.கவினர் ரவி ராஜாவிற்கு சரியாக வேலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

தாராவி பா.ஜ.க நிர்வாகிகளிடம் பேசிப்பார்த்தபோது அவர்களிடம் தாராவியை சேர்ந்தவருக்கு வாய்ப்பு கொடுக்காத அதிருப்தி இருந்ததை காண முடிந்தது. தேர்தலில் ரவி ராஜா வெற்றி பெற வேண்டும் என்பதற்காக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வந்து பிரசாரம் செய்துவிட்டு சென்றார். இது தவிர தமிழகத்தில் இருந்து பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும் வந்து பிரசாரம் செய்தார்.

மாரியம்மாள்

ஆனாலும் இன்று வாக்குகள் எண்ணப்பட்டதில் ரவி ராஜா சிவசேனா(உத்தவ்) வேட்பாளர் ஜெகதீஷ் என்பவரிடம் 1500 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். தேர்தல் முடிவுகளில் ரவி ராஜா தரப்பில் சந்தேகம் எழுப்பட்டதால் சிறிது நேரம் முடிவுகள் அறிவிக்கப்படாமல் இருந்தது. அதன் பிறகு முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டது. இத்தோல்வி ரவி ராஜாவிற்கு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. ஜெகதீஷ் மலையாளியாவார்.

இதே போன்று தாராவியில் மற்றொரு வார்டான 188வது வார்டில் மாரியம்மாள் முத்துராமலிங்கம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டார். அவரை எதிர்த்து சிவசேனா(ஷிண்டே) சார்பாக பாஸ்கர் ஷெட்டி என்பவர் போட்டியிட்டார். மாரியம்மாள் இதற்கு முன்பு உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவில் கவுன்சிலராக இருந்தார். இம்முறை அவருக்கு அக்கட்சியில் சீட் கிடைக்காததால் காங்கிரஸ் கட்சிக்கு வந்து போட்டியிட்டார். இதேவார்டில் காங்கிரஸ் கட்சியில் சீட் கிடைக்காமல் சாலமோன் ராஜா என்பவர் சுயேச்சையாக போட்டியிட்டார்.

அண்ணாமலை

அதோடு ஆதிதிராவிட மகாஜன சங்கத்தின் நிர்வாகி மாறன் நாயகம் மகன் ராபின்சன் சுயேச்சையாக போட்டியிட்டார். தமிழர்களின் வாக்குகளை இரண்டு பேர் சுயேச்சையாக நின்று பிரித்தனர். இதனால் மாரியம்மாள் முத்துராமலிங்கம் பாஸ்கர் ஷெட்டியிடம் தோல்வியை தழுவினார். தாராவி என்றாலே தமிழர்கள் என்று சொல்வதுண்டு. ஆனால் தாராவியில் போட்டியிட்ட தமிழர்கள் யாரும் இத்தேர்தலில் வெற்றி பெறவில்லை. இதே போன்று 162வது வார்டில் சிவசேனா(உத்தவ்) சார்பாக அண்ணாமலை என்பவர் போட்டியிட்டார். அவரும் இத்தேர்தலில் தோல்வியையே தழுவினார்.

தமிழர்கள் சொற்ப எண்ணிக்கையில் போட்டியிட்டனர். ஆனாலும் அவர்களில் ஒருவர் கூட தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. தாராவியில் இரு தமிழ் வேட்பாளர்கள் தோல்வியடையவதற்கு கட்சி நிர்வாகிகளும், அதிருப்தி வேட்பாளர்களும் காரணம் என்று கூறப்படுகிறது. மும்பை மாநகராட்சி தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி பெற்று இருப்பதால் மராத்தி சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் மேயராக நியமிக்கப்படுவார் என்று பா.ஜ.க தெரிவித்துள்ளது.

Iran: 9 வயதில் ஈரானிலிருந்து வெளியேற்றம்; ஈரானின் கடைசி ஷாவின் மகளான லெய்லா பஹ்லவியின் சோக கதை!

ஈரானில் தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு மத்தியில், இளவரசர் ரெசா பஹ்லவி மீண்டும் பரபரப்பான செய்தியாக மாறியிருக்கிறார். ஆயத்துல்லா கமேனி தலைமையிலான ஆட்சிக்கு எதிராக ஈரானியர்கள், நாட்டில் மீண்டு... மேலும் பார்க்க

புனே: `பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தும் பயனில்லை' - பவார் குடும்பத்திடமிருந்து கைநழுவிப்போன கோட்டை!

மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த மாநகராட்சி தேர்தலில் கடந்த 2023-ம் ஆண்டு இரண்டாக பிரிந்த தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டும் இணைந்து புனே மற்றும் அதன் அருகில் உள்ள பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சி தேர்த... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா மாநகராட்சி தேர்தலில் எதிர்கட்சிகளுக்கு பெரும் பின்னடைவு: பாஜக-வுக்கு வரலாறு காணாத வெற்றி

மகாராஷ்டிராவில் மும்பை உட்பட 29 மாநகராட்சிகளுக்கு நேற்று நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. மும்பையில் ஏற்கனவே பா.ஜ.கவும், சிவசேனா(ஷிண்டே)வும் இணைந்து ஆட்சியை பிடித்துள்ள நிலையில் மா... மேலும் பார்க்க

சுவாச நோய்களால் 9,211 பேர் உயிரிழப்பு; டெல்லி அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

2024-ஆம் ஆண்டில் மட்டும் சுவாச நோய்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தைக் கடந்திருப்பதாக டெல்லி அரசு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு பொதுமக்களின... மேலும் பார்க்க

கோட்டையை போராடி இழந்த உத்தவ்: ஷிண்டேயுடன் சேர்ந்து மும்பை மாநகராட்சியை கைப்பற்றிய பாஜக!

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் மும்பைதான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மும்பை மாநகராட்சி தேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவு... மேலும் பார்க்க

காங்கிரஸ்: கூட்டணி, தொகுதிப் பங்கீடு குறித்த ஆலோசனை; டெல்லிக்குச் செல்லும் செல்வப்பெருந்தகை!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நாளை (ஜன.17) டெல்லி செல்ல இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம், தொகுதிப்... மேலும் பார்க்க