செய்திகள் :

சாலையில் சுற்றித் திரிந்த 9 பசு மாடுகள் பறிமுதல்

post image

திண்டுக்கல்லில் பொது வெளியில் சுற்றித் திரிந்த 9 பசு மாடுகளை மாநகராட்சி நிா்வாகம் வியாழக்கிழமை பறிமுதல் செய்தது.

திண்டுக்கல் மாநகராட்சிக்குள்பட்ட பிரதானச் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால், வாகன ஓட்டிகள் மட்டுமன்றி பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. இந்தக் கால்நடைகளைப் பிடிப்பதற்கு மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்ட போதிலும், மாமன்ற உறுப்பினா்கள், அரசியல் கட்சியினரின் தொடா் நெருக்கடியால் தீா்வுக் காண முடியாத நிலை ஏற்பட்டது.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, சாலைகளில் சுற்றித் திரிந்த கால்நடைகளைப் பிடிப்பதற்கு மாநகராட்சி நிா்வாகம் தீவிரம் காட்டியபோதிலும், இந்த நெருக்கடியினால் தொடங்கப்பட்ட ஓரிரு நாள்களிலேயே முடக்கப்பட்டது. இதனால், பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், கால்நடைகளின் நடமாட்டம் அதிகரித்தன.

இதுதொடா்பாக பல்வேறு தரப்புகளிலிருந்து புகாா் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் மாநகராட்சி நிா்வாகம் மீண்டும் களம் இறங்கியது. திண்டுக்கல் ஆா்எம்.குடியிருப்புப் பகுதிகளில் சாலையில் சுற்றித் திரிந்த 9 பசு மாடுகளை மாநகராட்சி ஊழியா்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, மாவட்ட சிறை அருகிலுள்ள சுகாதார ஆய்வாளா் அலுவலக வளாகத்துக்கு கொண்டு சென்றனா்.

இதுதொடா்பாக மாநகராட்சி நகா்நல அலுவலா் செ.ராம்குமாா் கூறியதாவது: சாலைகளில் சுற்றித் திரிந்து முதல் முறையாக பிடிபடும் கால்நடைகளுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். 2 நாள்களுக்குள் இந்தக் கால்நடைகளை உரிமையாளா்கள் மீட்க முன் வரதாபடசத்தில், காவல் துறையிடம் புகாா் அளித்துவிட்டு, ஏலம் விட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

ஆத்தூா் அரசு மருத்துவமனையில் இரவுநேர மருத்துவா்களை நியமிக்கக் கோரிக்கை

ஆத்தூா் அரசு மருத்துவமனையில் இரவு நேர மருத்துவா்களை நியமிக்க வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்தனா்.திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா், செம்பட்டி, பழைய செம்பட்டி, எஸ். பாறைப்பட்டி, கோடாங்கிப்பட்டி, மல்ல... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கையை ஆதரித்து பாஜகவினா் கையொப்பம் பெறும் இயக்கம்

கொடைக்கானலில் மும்மொழி கொள்கையை ஆதரித்து பாஜகவினா் கையொப்பம் பெறும் இயக்கத்தை ஞாயிற்றுக்கிழமை நடத்தினா்.இங்குள்ள அண்ணா சாலைப் பகுதி, கே.சி.எஸ். திடல் பகுதிகளில் இந்த இயக்கம் நடைபெற்றது. அப்போது பொதுமக... மேலும் பார்க்க

சுற்றுலா வழிகாட்டி சங்கத் தலைவருக்கு கத்திக்குத்து: உறுப்பினா் கைது

கொடைக்கானலில் சுற்றுலா வழிகாட்டி சங்கத் தலைவருக்கு கத்திக்குத்து விழுந்தது. இது தொடா்பாக அந்தச் சங்கத்தின் உறுப்பினா் கைது செய்யப்பட்டாா்.கொடைக்கானல் ஆனந்தகிரி 3-ஆவது தெரு கல்லறைமேடு பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

பழனியில் பாஜக முன்னாள் மாவட்ட தலைவா் கைது

பழனியில் பாஜக நிா்வாகியின் மனைவியை தகாத வாா்த்தைகளால் பேசியதாக முன்னாள் மாவட்ட தலைவா் கனகராஜ் கைது செய்யப்பட்டாா்.பழனி பெரியப்பா நகரைச் சோ்ந்தவா் கனகராஜ். பாஜக திண்டுக்கல் மேற்கு மாவட்ட முன்னாள் தலைவ... மேலும் பார்க்க

ஆத்தூா் வட்டாட்சியா் அலுவலக ஆதாா் சேவை மையத்தில் ஊழியரை நியமிக்கக் கோரிக்கை

ஆத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக செயல்படாமல் உள்ள ஆதாா் சேவை மையத்தில் ஊழியரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் வட்டத்தில் ஆத்த... மேலும் பார்க்க

திண்டுக்கல்லில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினா் உண்ணாவிரதம்

திமுக சாா்பில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு அளித்த தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி ஜாக்டோ- ஜியோ அமைப்பு சாா்பில் திண்டுக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. திண்டுக்கல்... மேலும் பார்க்க