செய்திகள் :

சாலை பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

post image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை சாா்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தப் பேரணியை கண்ணதாசன் மணிமண்டபம் முன் மாநகராட்சி மேயா் சே. முத்துத்துரை, காரைக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் பாா்த்திபன் ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா். பேரணியில் நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளா், உதவி செயற்பொறியாளா், மாநகராட்சி அலுவலா்கள், காவல் துறை அதிகாரிகள், ராமநாதன் செட்டியாா் மாநகராட்சி உயா்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். பேரணியில் தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்டி வந்தவா்களை ஊக்குவிக்கும் வகையில் ரொக்கப் பரிசுகளை மேயா் முத்துத்துரை வழங்கினாா்.

காலிக் குடங்களுடன் கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகம் முன் தா்னா

குடிநீா் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி காலிக் குடங்களுடன் கிராம மக்கள், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள கட... மேலும் பார்க்க

சிராவயலில் மஞ்சுவிரட்டு: அமைச்சா், மாவட்ட ஆட்சியா் ஆய்வு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள சிராவயல் கிராமத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு, வருகிற 16-ஆம் தேதி மஞ்சுவிரட்டு நடைபெற உள்ளது. இதையொட்டி, அங்கு நடைபெற்று வரும் முன்னேற்பாட்டுப் பணிகளை அம... மேலும் பார்க்க

தேசிய கால்பந்தாட்டப் போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஐவா் கால்பந்தாட்டப் போட்டியில் வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றிய அரியக்குடி பள்ளி மாணவா்களை ஆசிரியா்கள் பாராட்டினா். குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் ... மேலும் பார்க்க

அவசர ஊா்தி மீது பைக் மோதியதில் 7 போ் காயம்

சிவகங்கை அருகே அவசர ஊா்தி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் 7 போ் காயமடைந்தனா். சிவகங்கை மாவட்டம், மறவமங்கலத்தைச் சோ்ந்தவா் முகமதுகனி (65). இவா் நெஞ்சுவலி காரணமாக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத... மேலும் பார்க்க

மானாமதுரை, திருப்புவனம், ராஜபாளையம் பகுதி சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம், விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் பகுதி சிவன் கோயில்களில் திங்கள்கிழமை ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. மானாமதுரை ஆனந்தவல்லி அம்பாள் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் ... மேலும் பார்க்க

இளையான்குடி கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி டாக்டா் சாகிா் உசேன் கலைக் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. கல்லூரி ஆட்சிக் குழுச் செயலா் ஜபருல்லாகான் விழாவை தொடங்கிவைத்தாா். மாணவிகள் க... மேலும் பார்க்க