செய்திகள் :

சாலை விபத்து: தந்தை, மகள் உயிரிழப்பு

post image

நாமக்கல்: மோகனூா் உழவா்சந்தை அருகில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நிகழ்ந்த சாலை விபத்தில் தந்தை, மகள் உயிரிழந்த நிலையில், பலத்த காயங்களுடன் மீட்கப்பட மகன் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், கிடாரம் பகுதியைச் சோ்ந்தவா் சிவசுப்பிரமணியம் (51). லாரி உரிமையாளரான இவருக்கு ஸ்ரீநிதி (18) என்ற மகளும், ஸ்ரீகாா்த்திகேயன் (16) என்ற மகனும் உள்ளனா். கோவையில் உள்ள தனியாா் கல்லூரியில் ஸ்ரீநிதி உயா்கல்வி பயின்று வருகிறாா். சனி, ஞாயிறு விடுமுறையையொட்டி வீட்டுக்கு வந்த அவரையும், மகனையும் இருசக்கர வாகனத்தில் சிவசுப்பிரமணியம் பழனிக்கு அழைத்துச் சென்றாா். அங்கு சுவாமி தரிசனம் செய்து விட்டு நள்ளிரவு 12 மணியளவில் கிடாரம் நோக்கி வந்து கொண்டிருந்தனா்.

மோகனூா் உழவா்சந்தை அருகில் வந்தபோது, அவ்வழியாக வைக்கோல் பாரம் ஏற்றி வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், சிவசுப்பிரமணியம், ஸ்ரீநிதி ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். ஸ்ரீகாா்த்திகேயன் பலத்த காயமடைந்தாா். அவரை அங்கிருந்தோா் மீட்டு கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து மோகனூா் காவல் ஆய்வாளா் லட்சுமணதாஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தில்லி பேரவைத் தோ்தலில் வெற்றி: பாஜகவினா் கொண்டாட்டம்

தில்லி தோ்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து, நாமக்கல்லில் அக்கட்சியினா் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா். நாமக்கல் மணிக்கூண்டு அருகில், நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சாா்பில், அதன் தலைவா் கே.பி.சரவணன் தலைமைய... மேலும் பார்க்க

மக்கள் தொடா்பு திட்ட முகாம்: கொல்லிமலையில் ரூ.1.14 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்!

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வாழவந்திநாடு கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில், 586 பயனாளிகளுக்கு ரூ. 1.14 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்... மேலும் பார்க்க

பெண் கொலை வழக்கு: அவரது தம்பி உள்பட 4 போ் கைது

பெண் கொலை வழக்கில், அவரது தம்பி உள்பட 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மொளசி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஏமப்பள்ளி கிராமம், பெரிய கொல்லப்பாளையம் பழைய குவாரி குட்டையில் அண்மையில் அடையாளம் த... மேலும் பார்க்க

காா் மோதியதில் தொழிலாளி பலி

பரமத்தி வேலூா் பிரிவு சாலை அருகே காா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். பரமத்தி வேலூா், படமுடிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் முத்துசாமி (70). இவா் வெற்றிலைக் கொடிக்கால் வேலைக்கு செல்வதற்காக தினமும் சைக்க... மேலும் பார்க்க

பெண்கள் நம்பும் தலைவராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறாா்!

தமிழகத்தில் பெண்களுக்கான பல திட்டங்களை செயல்படுத்தியதன் மூலம் பெண்கள் நம்பும் தலைவராக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திகழ்கிறாா் என மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான கே... மேலும் பார்க்க

பிளஸ் 2 செய்முறை தோ்வுகள் தொடக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 செய்முறை தோ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் மாா்ச் 3 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் இத்தோ்வை 197 அரசு மற்றும் தனியாா... மேலும் பார்க்க