செய்திகள் :

BB Tamil 9: பிக் பாஸ் வீட்டில் திடீர் திருப்பம் – பணப்பெட்டி எடுத்து வெளியேறினார் கானா வினோத்!

post image

விஜய் டிவியில் கிளைமேக்ஸை நெருங்கி விட்டது பிக்பாஸ் தமிழ் சீசன் 9.

வி.ஜே. பார்வதி, நந்தினி, வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, துஷார், பிரவீன், ஆதிரை, உள்ளிட்ட இருபது பேருடன் அக்டோபர் முதல் வாரம் தொடங்கியது நிகழ்ச்சி.

இவர்களில் நந்தினி பிக்பாஸ் வீடு செட் ஆகாமல் முதல் வாரத்திலேயே வெளியேறி விட்டார்.

பிரவீன் காந்தி, அப்சரா, திவாகர், துஷார், பிரவீன் உள்ளிட்ட மற்றவர்கள் அடுத்தடுத்த வாரங்களில் எவிக்‌ஷன் மூலம் வெளியேறினர்.

கானா வினோத் நண்பருடன்
கானா வினோத் நண்பருடன்

முன்னதாக இந்த சீசனில் போட்டியாளர்களாக சமூக ஊடக பிரபலங்கள் பெரும்பாலான எண்ணிக்கையில் இருந்ததால்  நிகழ்ச்சி டல் அடிப்பதாக ஒரு பேச்சு உலா வந்ததால் டிவி முகங்களான அமித் பார்கவ், பிரஜின், சாண்ட்ரா, திவ்யா கணேஷ் ஆகியோர் வைல்டு கார்டு எண்ட்ரியில் நிகழ்ச்சிக்குள் சென்றனர்.

வைல்டு கார்டு போட்டியாளர்களில் அமித் பார்கவ், பிரஜின் இருவரும் எவிக்ட் ஆகி வெளியில் வந்து விட்டனர்.

கடந்த வாரம் ஒரு அதிரடித் திருப்பமாக கமருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு கொடுத்து வெளியில் அனுப்பப் பட்டனர்.

Bigg Boss Tamil Season 9
பிக்பாஸ் தமிழ் சீசன் 9

இந்த நிலையில் சபரி, திவ்யா கணேஷ், வினோத், சாண்ட்ரா, அரோரா,விக்ரமன் ஆகிய ஆறு பேரும் இறுதிச் சுற்றுக்குத் தயாராக இருந்த நிலையில் சில இந்த வாரம் பணப்பெட்டி வைக்கப்பட்டது.

இந்த முறை டாஸ்க்கை கொஞ்சம் வித்தியாசமாக வைத்து பணம் அதில் சேர்க்கப்பட்டது.

தற்போது கிடைத்த தகவல் படி பணப்பெட்டி டாஸ்க் முடிந்து விட்டதாக தெரிய வருகிறது. அதாவது கானா வினோத் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருக்கிறாராம்.

பெட்டியில் இருக்கும் பணத்தின் மதிப்பு பனிரெண்டு லட்சத்துக்கு மேல் இருக்கலாம் என்கிறார்கள்.

பிக் பாஸ் சீசன் 9ல் டைட்டில் வெல்வார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கானா வினோத் பணப்பெட்டியை எடுத்து வெளியேறி இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

BB Tamil 9: "நான் பட்ட கஷ்டத்துக்கு இந்த பணம் கோடி ரூபாய் மாதிரி"- பணப்பெட்டியை எடுத்த கானா வினோத்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 95 நாள்களைக் கடந்துவிட்டது.கடந்த வாரம் 9 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில், தற்போது 6 பேர்தான் இருக்கின்றனர்.கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வாங்கி வெளியேறிய ... மேலும் பார்க்க

BB Tamil 9: "கார் டாஸ்க் சம்பவம் டிராமாவா இருக்குமோன்னு சந்தேகமா இருக்கு"- சாண்ட்ராவை சாடிய திவ்யா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 95 நாள்களைக் கடந்துவிட்டது.கடந்த வாரம் 9 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில், தற்போது 6 பேர்தான் இருக்கின்றனர்.கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வாங்கி வெளியேறிய ... மேலும் பார்க்க

BB Tamil 9: Day 95 சாண்ட்ராவின் டிராமாவை அம்பலப்படுத்திய ரம்யா; பொங்கிய திவ்யா! - நடந்தது என்ன?

மற்ற விருந்தினர்களின் வருகையால் ஏற்பட்ட நெகட்டிவிட்டியை கெமியின் வருகை சற்று சமன் செய்தது. சீக்ரெட் டாஸ்க் காரணமாக இந்த எபிசோடு கொஞ்சம் சுவாரசியம்.“வெளியில் ஆயிரம் சொல்வாங்க. உங்க உழைப்பு உங்களுக்குத்... மேலும் பார்க்க

BB Tamil 9: "தவறான குற்றச்சாட்டை வச்சு, என் முதுகில குத்திருக்காங்க.!"- சாண்ட்ரா குறித்து திவ்யா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 95 நாள்களைக் கடந்துவிட்டது.கடந்த வாரம் 9 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில், தற்போது 6 பேர்தான் இருக்கின்றனர்.கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வாங்கி வெளியேறிய ... மேலும் பார்க்க

BB Tamil 9: `என்னை பாம்புன்னு சொல்ற அளவுக்கு என்ன பண்ணிட்டேன்?"- சண்டைப்போட்ட ரம்யா; அழும் சாண்ட்ரா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 94 நாள்களைக் கடந்துவிட்டது.கடந்த வாரம் 9 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில், தற்போது 6 பேர்தான் இருக்கின்றனர்.கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வாங்கி வெளியேறிய ... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 94: பற்றிக்கொண்ட பழைய கதை; உளவியல் போரில் முன்னாள், இந்நாள் போட்டியாளர்கள்! டைட்டில்?

‘சரி.. ஆரம்பிச்சாச்சு.. முடிச்சு வைப்போம்’ என்கிற மாதிரி சோர்வான கிளைமாக்ஸை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது, இந்த சீசன்.‘சீக்கிரம் முடிங்கப்பா.. நாங்களும் அடுத்த வேலையைப் பார்க்க போகணும்’ என்கிற மாதிர... மேலும் பார்க்க