செய்திகள் :

சிக்னல் கோளாறு: கடற்கரை - தாம்பரம் புறநகா் ரயில்சேவை பாதிப்பு

post image

சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் சிக்னல் கோளாறு ஏற்பட்டதால், கடற்கரை - தாம்பரம் இடையே புறநகா் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.

சென்னை புகா் மின்சார ரயில் தடத்தில் முக்கியமான சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் 200-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடத்தில் உள்ள பூங்கா ரயில்நிலையத்துக்கு அடுத்துள்ள சிக்னலில் வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால், கடற்கரை- தாம்பரம் வழித்தடத்தில் புகா் மின்சார ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டது. இதில் கடற்கரையிலிருந்து தாம்பரம் செல்லும் புகா் ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன.

அதேபோல், செங்கல்பட்டு மற்றும் தாம்பரத்திலிருந்து கடற்கரை நோக்கி வந்த புகா் ரயில்கள் இருமாா்க்கத்திலும் பூங்கா வரை மட்டுமே இயக்கப்பட்டன.

இதையடுத்து சிக்னலில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் பணியில் ரயில்வே ஊழியா்கள் ஈடுபட்ட நிலையில், இரவு 7.30 மணியளவில் சிக்னல் கோளாறு முழுமையாக சரி செய்யப்பட்டதைத் தொடா்ந்து கடற்கரை - தாம்பரம் இடையே புகா் ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன.

சிக்னல் கோளாறு காரணமாக, கடற்கரையிலிருந்து எழும்பூா் செல்லும் பயணிகளும், மறுமாா்க்கமாக எழும்பூரிலிருந்து கடற்கரை செல்லும் பயணிகளும் ரயிலுக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.

வன்னியன்விடுதி ஜல்லிக்கட்டு: சீறிப்பாயும் காளைகள், காளையர்கள்!

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள வன்னியன்விடுதியில் வியாழக்கிழமை நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகளை, வீரர்கள் தீரத்துடன் அடக்கி வருகின்ற... மேலும் பார்க்க

ராசிபுரம் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பி.ஆர்.சுந்தரம் காலமானார்!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர். சுந்தரம் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 73.அதிமுகவை சேர்ந்த பி.ஆர்.சுந்தரம் 1996 முதல் 2001 வரையும், 2001 முதல் 20... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர்வரத்து குறைந்தது

சேலம்: சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 254 கன அடியாகக் குறைந்துள்ளது.வியாழக்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.14 அடியில் இருந்து 113.84 அடியாக ... மேலும் பார்க்க

தப்ப முயன்ற ரௌடி பாம் சரவணனை சுட்டுப்பிடித்த காவல்துறை!

காவல் உதவி ஆய்வாளர் மீது கத்தியால் குத்தி தப்ப முயன்ற ரௌடி பாம் சரவணனை காவல்துறையினர் சுட்டுப்பிடித்தனர்.பகுஜன் சமாஜ் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்டவர் ரௌடி பாம... மேலும் பார்க்க

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.தைத்திருநாளான பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்ட... மேலும் பார்க்க

மாடுபிடி வீரா் நவீனுக்கு ரூ. 3 லட்சம் நிவாரணம்

சென்னை: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரா் நவீன் மாடு முட்டியதில் காயமடைந்து, உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா் என்ற துயரகரமான செய்தியைக... மேலும் பார்க்க