செய்திகள் :

சிறுமி பாலியல் வன்கொடுமை: ``எதற்குமே பொறுப்பேற்காத இந்த தவெக அரசு..." - எம்.பி கனிமொழி காட்டம்

post image

திருச்சி கல்மந்தை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி, திருநங்கையான தன் சகோதரியின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது, திருநங்கையை சிவகங்கைக்கு அழைத்துச் செல்வதற்காக மாரி செல்வன் என்ற வாடகை கார் ஓட்டுநர் அங்கு வந்துள்ளார். அவர் அச்சிறுமியை மட்டும் தனியாக காரில் ஏற்றிச் சென்றுள்ளார். ஒரு மணி நேரம் கழித்து, சிறுமியை காயங்களுடன் காரில் இருந்து கீழே வீசிவிட்டுச் செல்ல முயன்றார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அந்த ஓட்டுநரைத் பிடித்துத் தாக்கினர். காந்தி மார்க்கெட் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஓட்டுநர் மாரி செல்வன் அச்சிறுமிக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இக்கொடூர சம்பவத்திற்குப் பலரும் தங்களது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் - முதல்வர் விஜய்
டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் - முதல்வர் விஜய்

இந்த நிலையில், திமுக எம்.பி. கனிமொழி தன் எக்ஸ் பக்கத்தில், ``திருச்சி - கீழப்புலிவார் ரோடு பகுதியில் 14 வயது சிறுமி, கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. தொடரும் இதுபோன்ற குற்றச் சம்பவங்களால் தமிழ்நாட்டுப் பெண்கள் பீதியில் உறைந்து போய் இருக்க, எதற்குமே பொறுப்பேற்காத இந்த தவெக அரசு, என்னவானாலும் நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என்ற துணிச்சலில் தான் குற்றவாளிகள் ஊருக்குள் சுற்றித் திரிகிறார்களா என்ற கேள்வி எழுகிறது.

காவல்துறைக்குப் பொறுப்பு(?) வகிக்கும் முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள், என்னவானாலும் பத்திரிகையாளர்களைச் சந்தித்து தொடரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் குறித்து விளக்கமளிக்கப் போவதில்லை என்று தெரிந்துவிட்டது. குறைந்தபட்சம் துறைசார் அதிகாரிகளாவது மக்கள் முன் விளக்கமளிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தியா கூட்டணி: ``காங்கிரஸ் பங்கேற்கும் கூட்டத்தில் திமுக பங்கேற்காது" - திமுக திட்டவட்ட அறிவிப்பு!

5 மாநில தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, காங்கிரஸ் தலைமையில் 'இந்தியா' கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் ஜூன் 8 அன்று டெல்லியில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாட... மேலும் பார்க்க

சுகாதார சீர்கேட்டின் உச்சம்; சேலம் புதிய பேருந்து நிலைய அவலம் - கேள்விக்குறியா தனிமனித ஒழுக்கம்..?

சேலம் புதிய பேருந்து நிலையமானது, ஓமலூர் பிரதான சாலையில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில், தமிழ்நாட்டின் நான்காவது பெரிய பேருந்து நிலையமாக இயங்கி வருகிறது. இந்தப் பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு மாவட்டங்க... மேலும் பார்க்க

உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு: ``152 இடங்களை பறிகொடுத்த தவெக அரசு"- உதயநிதி ஸ்டாலின் சொல்வது என்ன?

தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனப்படும் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட்டு, முதல் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படாத 151 இடங்களை அக... மேலும் பார்க்க

`ஹார்ட் டிஸ்க் மாயம் என மின் வெட்டு பிரச்னையை திசை திருப்ப முயற்சி’ – செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு!

புதுப்பிக்கப்பட்ட கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகத்தை தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “தமிழ்நாட்டில் ஒரு அமைச்சரையே மிரட்டக்கூடிய... மேலும் பார்க்க

`திமுக நாசமாக போனதற்கு, திமுக-வினர் தான் காரணம்' - முன்னாள் அமைச்சர் மூர்த்தி

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி நேற்று முன்னாள் அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் பழங்காநத்தம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளி குழந்தைகளுக்கு நோட்புக் வழங்கியும் நலிவடைந்த குடும்ப பெ... மேலும் பார்க்க

`என்ன ஜெயிக்க வெச்சதுக்கு நன்றி'- `அமைச்சரே இது உங்க தொகுதி இல்ல' வைரலான ஸ்ரீநாத் வீடியோ; ADMK சாடல்

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவனை எதிர்த்து த.வெ.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் நடிகர் ஸ்ரீநாத். தமிழக மீன்வளத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளார். கடந்த மே, 3... மேலும் பார்க்க