செய்திகள் :

"சில தொகுதிகளில் விசிக தோழர்களிடம் ஒற்றுமை குறைவு" - திருமாவளவன் வருத்தம்

post image

நாளை மறுநாள் (மே 4), தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் விசிகவினர் தேர்தல் பணிகள் குறித்து பேசியுள்ளார்...

வெற்றி எதிர்பார்ப்பு

"தேர்தல் முடிவுகள் குறித்து எல்லோரையும் போல, மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கிறோம்.

நம்முடைய தொகுதிகளில் மட்டுமின்றி நாம் அங்கம் வகிக்கும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான 'மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெற வேண்டும்' என்கிற எதிர்பார்ப்போடு காத்திருக்கிறோம்.

திருமாவளவன்
திருமாவளவன்

ஏறத்தாழ பத்து நாள்களுக்கு மேலாக நான் நம்முடைய வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளோடு தோழமை கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கும் வாக்கு சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டேன்.

காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதை நீங்கள் அறிவீர்கள். களத்தில் நாம் கண்ட உண்மை என்னவென்றால், மக்கள் பெருமளவில் திமுக தலைமையிலான கூட்டணியை ஆதரிக்கிறார்கள் என்பதாகும்.

ஒற்றுமை குறைபாடு

நம்முடைய கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெறும் என்றும், விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிட்ட 'எட்டு தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறுவோம்' என்றும் நான் பெரிதும் நம்புகிறேன்.

தேர்தலில் நம்முடைய கட்சித் தோழர்கள் அனைத்து தொகுதிகளிலும் கட்டுக்கோப்பாக பணியாற்றி இருக்கிறார்கள். ஒரு சில தொகுதிகளில் மட்டும் தோழர்களிடையே ஒற்றுமை குறைபாடு இருந்ததாக தகவல்கள் வருகின்றன. அது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இருப்பினும், தோழமை கட்சிகளின் வேட்பாளர்கள் நம்முடைய கட்சியின் பணிகளைப் பாராட்டியுள்ளனர். களப்பணி ஆற்றிய தோழர்களுக்கு நன்றியைத் தெரிவிப்பதோடு, விரைவில் 'மாவட்ட செயலாளர்கள் கூட்டம்' மற்றும் தேர்தல் பணிக்குழுவின் ஆய்வுக் கூட்டம் நடத்தப்படும்."

'தவெக-விடம் ஆட்சியை பிடிக்கும் அளவிற்கு வலிமை இல்லை' - திருமாவளவன் பேச்சு

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், திமுக கூட்டணி தான் வெற்றி பெறும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் பேசியுள்ளதாவது..... மேலும் பார்க்க

'பைத்தியக்காரர்களிடம் அணு ஆயுதம் இருக்கக்கூடாது என்று தான் ஈரான் போர்!' - ட்ரம்ப் காட்டம்

அமெரிக்கா ஈரான் மீது போர் தொடுத்ததற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று - ஈரான் செய்து வரும் அணு ஆயுதத் தயாரிப்பு. இப்போது பாகிஸ்தானில் நடந்து வரும் பேச்சுவார்த்தை தள்ளிப்போவதற்கான காரணமும் - இரு தரப்... மேலும் பார்க்க

ஈரான் Lock ஆன '5' விஷயங்கள்: ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா முற்றுகையிட்டதன் விளைவு!

ஈரான் - அமெரிக்கா போர் இன்னும் முடிந்தபாடில்லை. அமெரிக்காவிற்கு நெருக்கடி கொடுக்க ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடி வைத்துள்ளது. ஈரானுக்கு நெருக்கடி கொடுக்க, ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து ஈரானின் கப்பல் எத... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் 2 தொகுதிகளில் மீண்டும் இன்று தேர்தல்: 'எங்களுக்கு தான் பெரும்பான்மை' - திரிணாமுல்

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகியவை சட்டமன்ற தேர்தல் முடிந்து, ரிசல்டுக்காக காத்திருக்கின்றன. கடந்த புதன்கிழமை (ஏப்ரல் 29) தான், மேற்கு வங்கம் இரண்டாம் கட்ட தேர்தலை சந்தித்து ம... மேலும் பார்க்க