செய்திகள் :

சிவகங்கை: ஜாம்பவான் வேட்பாளர்களை 'சைலண்ட்'ஆக வீழ்த்திய தவெகவின் குழந்தைராணி நாச்சியார் - யார் இவர்?

post image

காங்கிரஸின் பாரம்பரியம், திமுக - அதிமுகவின் அதிகார பலம் எனப் பலமான அடித்தளம் கொண்ட சிவகங்கை மண்ணில், இம்முறை மொத்தமாக 'ஆப்பு' வைத்திருக்கிறது தவெக.

ஜாம்பவான்களைச் சாய்த்து நான்கு தொகுதிகளையும் ஒட்டுமொத்தமாக அள்ளிய தவெக-வின் இந்த வேகம், தென்மாவட்ட அரசியலில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

திராவிட, தேசிய கட்சிக்ளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, சிவகங்கை மாவட்டத்தின் 4 தொகுதிகளிலும் தனது 'வெற்றிக் கோட்டையாக' மாற்றியிருக்கிறார் விஜய்.

சிவகங்கை கோட்டையில் இந்த முறை யாரும் எதிர்பார்க்காத 'சைலண்ட்' புரட்சியைச் செய்து காட்டியிருக்கிறார் தவெக வேட்பாளர் அ. குழந்தைராணி நாச்சியார்.

55 வயதான பி.காம் பட்டதாரியான இவர், ஏற்கனவே 1996-2001 வரை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை நகர்மன்ற உறுப்பினராகப் பொறுப்பில் இருந்தவர்.

பின்னர் தவெகவில் இணைந்திருக்கிறார். இவரது கணவர் அருள்பிரகாசம், மகன் பசும்பொன் அகிலேஷ் ஆகியோரின் உறுதுணையோடு களமிறங்கிய இவருக்கு எதிராக நின்றவர்களோ தேர்தல் களத்தின் ஜாம்பவான்களான அதிமுகவின் மாவட்டச் செயலாளரும், சிட்டிங் எம்.எல்.ஏ-வுமான பி.ஆர். செந்தில்நாதன் மற்றும் திமுக கூட்டணியில் களமிறங்கிய முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் என நட்சத்திரப் போட்டி நிலவியது.

கருணாஸை ஆதரித்து மு.க.ஸ்டாலின், உதயநிதி என ஒரு பெரும்படையும், செந்தில்நாதனுக்குன் வககு கேட்டு எடப்பாடி போன்றோரும் வரிசை கட்டி பிரசாரம் செய்தனர்.

ஆனால் தினசரி பிரசார செலவுக்கு கூட குழந்தை ராணி நாச்சியார் மிகுந்த பொருளாதார சிரமங்களை எதிர்நோக்கியதாக தவெகவினர் கூறுகின்றனர்.

கருணாஸ்

இரட்டை இலைக்கும் , உதய சூரியனுக்கும் இடையேதான் இங்கு கடும்போட்டி என்று கருதப்பட்டு வந்த நிலையில் இரண்டு பெரும் துருவங்களையும் பின்னுக்குத் தள்ளி, சிவகங்கை மண்ணில் தவெக-வின் கொடியை நட்டு 'வாகை' சூடியிருக்கிறார் இந்த நாச்சியார்.

தளபதி விஜய்யின் அரசியல் வருகைக்குச் சிவகங்கை மக்கள் தந்துள்ள இந்த வெற்றிப் பரிசு, தமிழக அரசியலில் புதிய சகாப்தத்தின் தொடக்கமாகவே பார்க்கப்படுகிறது!

``ஆளுநர் நல்லவர்தான். ஆனால் பாஜக அரசியல் செய்கிறது!" - மாணிக்கம் தாக்கூர்

தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றிருக்கிறது.118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில் தான் திமுக கூட்டணியி... மேலும் பார்க்க

`விஜய் முதல்வராவதை தடுத்தால்..!' - ஜல்லிக்கட்டு போராட்டத்தை நினைவூட்டும் காங்கிரஸ் நிர்வாகி

காங்கிரஸ் கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்டத் தலைவர் மகேந்திரன். இவர் ராகுல் காந்திக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதி மகேந்திரனுக்கு ... மேலும் பார்க்க

`தி.மு.க-வுக்கு பாயத் தயாராகும் சிறுத்தைகள் டு சாரி கேட்ட செந்தில் பாலாஜி!' | கழுகார் அப்டேட்ஸ்

புலம்பும் கு.ப.கிருஷ்ணன்!"தப்புக்கணக்கு போட்டுட்டோம்"த.வெ.க-வில், முகம் தெரியாத பலரும் வெற்றிபெற்ற நிலையில், லால்குடி தொகுதி வேட்பாளர் கு.ப.கிருஷ்ணனோ தோல்வியைத் தழுவியிருக்கிறார். அ.தி.மு.க முன்னாள் அ... மேலும் பார்க்க

விஜய்க்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காமல் பந்தாடும் ஆளுநர்! - வலுக்கும் கண்டனங்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் 118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன... மேலும் பார்க்க

`அந்த திட்டம் வேண்டாம்!' - அதிமுகவுக்கு `நோ' சொல்லிய திமுக?

தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவடைந்தாலும் இன்னும் பரபரப்புக்குக் குறைவில்லாமல் நகர்கிறது அரசியல் களம். குறிப்பாக நேற்று இரவு வெளியான சில தகவல்கள் தமிழக அரசியல் பார்வையாளர்கள்கூட எதிர்பாராதவை. அதாவது, ... மேலும் பார்க்க

"விஜய்யைப் பதவியேற்க அனுமதிக்க வேண்டும்; ஆளுநர் அப்படி சொல்ல முடியாது" - திருமாவளவன்

தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றிருக்கிறது. 118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில் தான் திமுக கூட்டணிய... மேலும் பார்க்க