செய்திகள் :

சுகுமாரால் அதகளப்படும் அதிமுக கூட்டணி; ஹாட்ரிக் வெற்றிபெறுவாரா ஈஸ்வரப்பன்? - பரபரக்கும் ஆற்காடு களம்

post image

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு சட்டமன்றத் தொகுதியைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக தக்கவைத்துக்கொண்டிருக்கிறார் தி.மு.க மாவட்ட இளைஞரணி அமைப்பாளரான ஜெ.எல்.ஈஸ்வரப்பன். இந்த முறையும், தி.மு.க வேட்பாளராக ஜெ.எல்.ஈஸ்வரப்பனே களமிறக்கப்பட்டிருக்கிறார். கடந்த 2006 - 2011 காலக்கட்டத்தில், ஆற்காடு நகர்மன்றத் தலைவராகவும் இருந்திருக்கிறார்.

பி.இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்திருக்கும் ஈஸ்வரப்பன், தொகுதிக்குள் கணிசமாக வாழும் அகமுடைய முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர். இதனால், அந்தச் சமூக வாக்குகள் தனக்குக் கைகொடுக்கும் என நம்புகிறார்.

ஜெ.எல்.ஈஸ்வரப்பன்

அதே சமயம், உடன்பிறப்புகளிடம் உற்சாக மனநிலை இல்லாதது ஈஸ்வரப்பனை சோர்வடையச் செய்திருக்கிறது. பொருளாதார பின்னணியும் பலவீனமாக இருப்பதால் ஈஸ்வரப்பன் தடுமாற்றத்தில் இருக்கிறார். சொல்லப் போனால், 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள முன்கூட்டியே தன்னை தயார்ப்படுத்திக்கொள்ளாமலும் இருந்திருக்கிறார். தி.மு.க மாவட்டச் செயலாளரும் சிட்டிங் அமைச்சருமான ஆர்.காந்தியின் உள்ளடி வேலைகளால் ஈஸ்வரப்பன் அமைதி காத்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ராணிப்பேட்டை தொகுதியில் அமைச்சர் காந்திக்கு சீட் மறுக்கப்பட்டு, அவரின் மகனுக்கு டிக்கெட் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால், தனக்கு எந்தவிதமான நெருக்கடியும் இனி வராது என்ற நம்பிக்கையில் ஆற்காடு தொகுதியில் தன்னுடைய ஹாட்ரிக் வெற்றிக்கான பணிகளிலும் விறுவிறுப்பாக இறங்கிவிட்டார் ஈஸ்வரப்பன்.

மறுபுறம், அ.தி.மு.க கூட்டணியில் கூச்சல், குழப்பம் ஓய்ந்தபாடில்லை. கடந்த முறை ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.சுகுமார், `இந்த முறை ஆற்காடு தொகுதிக்கு ஏன் வந்தார்? பா.ம.க-வுக்குச் செல்ல வேண்டிய தொகுதியை எப்படிக் கைப்பற்றினார்? இதற்காக என்னவெல்லாம் டீல் நடந்தது ?’ போன்ற கேள்விகளை பாட்டாளிகள் அடுக்கடுக்காக கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

எஸ்.எம்.சுகுமார்

அதற்கெல்லாம் பதிலளிக்காமல் பம்மிக்கொண்டிருக்கிறார் சுகுமார். எல்லாவற்றையும்விட `இப்போதே நான் ஜெயிச்சுட்டேன்’ என்ற மிதப்பிலும் சுகுமாரின் செயல்பாடுகள் இருப்பதால், அ.தி.மு.க கூட்டணி அதகளப்பட்டுக்கொண்டிருக்கிறது.

இப்படி அ.தி.மு.க கூட்டணியில் பிரச்னைகளும், விமர்சனங்களும் பரபரத்தாலும், தொகுதி மக்களிடம் மாற்றத்துக்கான மனநிலை உருவாக்கியிருப்பதால் தி.மு.க-வைப் பின்னுக்குத் தள்ளி அ.தி.மு.க வெற்றியை நோக்கி முந்திக்கொண்டிருக்கிறது என்பதே தற்போதைய கள நிலவரமாக உள்ளது.

Vijay: `ஆனந்துக்கு ரூ.3 கோடி கடன்; தாய், தந்தைக்கு.!' - வேட்புமனுவில் விஜய் கொடுத்த கடன் விவரங்கள்

பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் இன்று வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் வேட்புமனுவில் குறிப்பிட்டிருக்கும் விஜய்யின் சொத்து மதிப்பு விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி விஜய்... மேலும் பார்க்க

Vijay: 'BMW உள்ளிட்ட 5 கார்கள், 1 TVS XL ' - வெளியான விஜய்யின் வாகனங்களின் லிஸ்ட்!

பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் வேட்புமனுவில் குறிப்பிட்டிருக்கும் விஜய்யின் சொத்து மதிப்பு விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி விஜய்யின் அ... மேலும் பார்க்க

`2016 தேர்தலில் நடந்ததுதான் இப்போதும்...' - தலைமையின் முடிவால் புலம்பும் பாபநாசம் உடன்பிறப்புகள்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்றத தொகுதிகளில் ஒன்று பாபநாசம். கடந்த 2001ம் ஆண்டு தேர்தலில் திமுக இங்கு நேரடியாக போட்டியிட்டது. அதன் பிறகு கூட்டணிக் கட்சிகளுக்குத்தான் திமுக தலைமை இங்கு வாய்ப... மேலும் பார்க்க

Tvk Vijay: 'அசையும் சொத்து 404 கோடி; அசையா சொத்து.!'- வெளியான விஜய்யின் வேட்புமனு விவரம்

பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் வேட்புமனுவில் குறிப்பிட்டிருக்கும் விஜய்யின் சொத்து மதிப்பு விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி விஜய்யின் அ... மேலும் பார்க்க

'கொளத்தூருக்குள் செல்லவே முடியவில்லை; வில்லிவாக்கத்தில் பிரசாரம் கேன்சல்!' - என்ன சொல்கிறது தவெக?

தவெக தலைவர் விஜய் இன்று சென்னையில் மூன்று இடங்களில் பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதன்படி பெரம்பூர், கொளத்தூரில் பிரசாரம் செய்த விஜய், வில்லிவாக்கத்தில் பிரசாரம் செய்ய முடியாமல் கூட்டத்தை... மேலும் பார்க்க

`முதல்வர் தொகுதியில் பிரசாரம் செய்யக் கூடாதா? அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் ஆதரவா?' - தவெக கேள்வி

கொளத்தூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து அந்தக் கட்சியின் இணைப் பொதுச் செயலாளர் CTR. நிர்மல் குமார் பதிவிட்டுள்ளார்."தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள... மேலும் பார்க்க